கடலூரில் பா. ம. க. , பயிற்சி பாசறையில் மாணவ, மாணவியர்களுக்கு இலவச பயிற்சி
புதன், 15 டிசம்பர், 2010
கடலூர் :
கடலூரில் பா.ம.க. , பயிற்சி பாசறை சார்பில் துவங்கவுள்ள இலவச பயிற்சி வகுப்பில் மாணவ, மாணவியர்கள் சேர்ந்து பயன்பெற எம்.எல்.ஏ. , வேல்முருகன் கேட்டுக் கொண்டார்.
கடலூரில் நேற்று எம். எல். ஏ. , வேல்முருகன் கூறியது:
பொருளாதாரத்தில் பின் தங்கிய அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த ஏழை எளிய மாணவர்களின் முன்னேற்றத்திற்காக பயிற்சி பாசறை கடலூரில் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இப்பயிற்சி பாசறையில் ஐ. ஏ. எஸ். , - ஐ. பி. எஸ். , - டி. என். பி. எஸ். சி. , குரூப் 1, 2, வி. ஏ. ஓ. , வங்கி, ரயில்வே காவலர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இப்பயிற்சியில் பயின்ற 8 பேர் சப் இன்ஸ்பெக்டர் தேர்விலும், 48 மாணவர்கள் காவலர்களாகவும் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணைக்காக காத்திருக்கின்றனர்.
மீண்டும் அதே வகுப்புகள் கல்லூரி மாணவர்களின் வசதிக்கேற்ப காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் நடத்தப்படுகின்றன. இவ்வகுப்புகளில் கம்ப்யூட்டரில் வீடியோ ஆடியோ காட்சிகள் மூலமும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்காக பிரத்யேக நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது டி. என். பி. எஸ். சி. , சுகாதார புள்ளியியல் ஆய்வாளர், வனத்துறை உதவி ஆய்வாளர் தேர்வுகளுக்கான வகுப்புகள், பி. எஸ்சி. , அறிவியல், கணிதம், கணிப்பொறியியல், மண்ணியல், புள்ளியியல் மற்றும் பொறியியல் பட்டதாரிகளுக்கான பயிற்சி வகுப்புகள் வரும் 19ம் தேதி துவங்க உள்ளது. இந்த வகுப்புகளில் சேர விரும்பும் மாணவ, மணவியர்கள் கடலூர் பா.ம க. , அலுவலக செயலரிடம் விண்ணப்பித்து பயன் பெறலாம். இவ்வாறு வேல்முருகன் கூறினார்.
Read more...





அனலாக பற்றியெறியும் இந்தப் பிரச்னை நெய்வேலியைக் கடந்தும் சென்று கொண்டிருக்க, மத்திய-மாநில அரசுகள் இதற்கு எப்படி அணை போடுவது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றன. இதற்கிடையில், இந்தப் பிரச்னையை அரசியலாக்கி ஆதாயம் தேடிக் கொண்டிருக்கின்றன பல்வேறு அரசியல் இயக்கங்கள்.
கடந்த செப். 19-ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகிறது. இதனால் கோபமடைந்த நிர்வாகம், ‘சட்டத்துக்குப் புறம்பாக போராட்டம் நடத்தப்படுகிறது... இதனை தடுத்து நிறுத்த வேண்டும்...’ என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘தொழிலாளர்களுக்கு போராட உரிமையுள்ளது. எனவே, இது சம்பந்தமாக தொழிலாளர் நல ஆணையம், தொழிற் சங்கங்கள், நிர்வாகம் ஆகியவை பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க வேண்டும்...’ என்று ஆலோசனை கூறி தீர்ப்பு சொல்லிவிட்டது. ஆனால், இதனை நிர்வாகத் தரப்பு ஏற்றுக் கொள்ளவில்லை. தொழிலாளர் பேராட்டத்தைத் தொடர்ந்து புறக்கணித்து வந்தது. 


