கடலூரில் கல்லூரிகளுக்கு கூடுதல் பஸ் வசதி: பாமக மாணவர் சங்கம் கோரிக்கை

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010


கடலூர்:

              கடலூரில் கல்லூரிகளுக்கு மாணவர்கள் எளிதில் செல்லும் வகையில் கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று பாமக கிழக்கு மாவட்ட மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்தது. இச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் சனிக்கிழமை நடந்தது. 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

                   கடலூர் கல்லூரிகளுக்கு கிராமப் புறங்களில் இருந்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் நகரப் பஸ்களை இயக்க வேண்டும். கடலூர்- குறிஞ்சிப்பாடி, கடலூர்- பண்ருட்டி இடையே மகளிருக்கு மட்டும் தனிப் பஸ்களை இயக்க வேண்டும். பலமுறை இக்கோரிக்கை முன்வைத்தும் நிறைவேற்றப்படாததைக் கண்டித்து விரைவில் அரசு போக்குவரத்துக் கழக அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

                    கூட்டத்துக்கு மாணவர் சங்க மாவட்டத் தலைவர் பா.அருள்பாபு தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ராஜ்குமார் நாராயணன் வரவேற்றார். மாநில மாணவர் சங்கச் செயலர் கோபிநாத் முன்னிலை வகித்தார். பாமக மாநில துணைப் பொதுச் செயலர் தி.திருமால்வளவன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசினார். பாமக மாவட்டச் செயலர் பஞ்சமூர்த்தி, நகரச் செயலர் ஆனந்த் உள்ளிட்ட பலர் பேசினர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP