வன்னியர் இடஒதுக்கீட்டின் போது மரணமடைந்த தியாகிகளுக்கு டாக்டர் ராமதாஸ் அஞ்சலி

ஞாயிறு, 19 செப்டம்பர், 2010


திண்டிவனம்:

              வன்னியர் இடஒதுக்கீட்டின் போது மரணமடைந்த தியாகிகளுக்கு திண்டிவனம் வன்னியர் சங்க அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பாமக நிறுவனர் ராமதாஸ் நினைவஞ்சலி செலுத்தினார். 1987-ல் வன்னியர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 18 பேர் மரணடைந்தனர். 

                   இவர்களின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க தலைமை அலுவலகத்தில் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டும் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாமக நிறுவனர் ராமதாசு அனைவரின் உருவ படத்துக்கும் பூ தூவி மெழுகு ஏற்றி அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியின் போது முன்னாள் மத்திய அமைச்சர்கள் அன்புமணி ராமதாசு, வேலு, ஏ.கே.மூர்த்தி மற்றும் வன்னியர் சங்கத் தலைவர் குரு, பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி,மாநில் துணைப் பொதுச் செயலர் செந்தமிழ்செல்வன்,மாநில துணைச் செயலர் கருணாநிதி, மாவட்டச் செயலர் ஏழுமலை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின்போது உயரிழந்த குடும்பங்களுக்கு நலத் திட்ட உதவிகளை ராமதாசு வழங்கினார்.

தேசிங்கு நினைவிடம்: 

                 இட ஒதுக்கீடு போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தேசிங்கு நினைவிடத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் வெள்ளிக்கிழமை மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.கொள்ளுக்காரன்குட்டையில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் சிறுதொண்டமாதேவியைச் சேர்ந்த தேசிங்கு உயிரிழந்தார். இவரின் நினைவிடத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 

                      இதில் முன்னாள் மத்திய அமைச்சர் அரங்கவேலு, மாநிலத் தலைவர் கோ.க.மணி, மாநில இணை பொதுச் செயலர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான தி.வேல்முருகன், மாநில துணை பொதுச் செயலர் தி.திருமால்வளவன், வன்னிய சங்கத் தலைவர் குரு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP