நெய்வேலி சட்டமன்றத் தொகுதி வாக்குசாவடியில் அதிமுகவினர் விதிமீறல் : பா.ம.க.வேட்பாளர் வேல்முருகன் உண்ணாவிரதம்

சனி, 23 ஏப்ரல், 2011

பா.ம.க. எம்.எல்.ஏ.வேல்முருகன் ஜூனியர் விகடனுக்கு அளித்த பேட்டி
 





              கடந்த 15-ம் தேதி தலைமைத் தேர்தல் அதிகாரியைச் சந்தித்துப் புகார் மனு ஒன்றைக் கொடுத்த பா.ம.க. எம்.எல்.ஏ-வான வேல்முருகன், திடுதிப்பென்று ஒரு சால்வையை விரித்து அங்கேயே உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார்! நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நெய்வேலி தொகுதியில் பா.ம.க சார்பில் வேல்முருகனும், அ.தி.மு.க சார்பில் சிவசுப்ரமணியனும் மோத... கடந்த 16-ம் தேதி இரண்டு பூத்களில் மட்டும் மறு வாக்குப் பதிவு நடந்தது. ஆனால், அதற்கு முந்தைய தினம்தான் வேல்முருகனின் இந்தத் திடீர்ப் போராட்டம். காவல் துறையால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்த வேல்முருகனிடம் பேசினோம். 





               ''கடந்த 13-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தபோது, சமட்டிக்குப்பம் என்ற கிராமத்தில் ஏ.கே.சுப்ரமணியன், ஏ.கே பூவராகமூர்த்தி ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட ரவுடிகள் பூத் எண் 55, 56-ல் நுழைந்தனர். காவல் துறையினர் முன்னிலையிலேயே, அங்கே இருந்த தேர்தல் அதிகாரிகளை அடித்துத் துரத்திவிட்டு, வாக்குப் பதிவு இயந்திரத்தை அடித்து சேதப்படுத்தினர். இந்தக் கொலை வெறித் தாக்குதலில் ஒரு சிலரை மட்டும் கைது செய்துவிட்டு, முக்கியக் குற்றவாளிகளைக் கைது செய்யவில்லை காவல் துறை. 'அந்த பூத்களில் மறு வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முன்பு, தாக்குதலுக்குக் காரணமான ஏ.கே.சுப்ரமணியனைக் கைது செய்ய வேண்டும். 

              அவர் கடலூர் கோர்ட்டில் புரிந்த வன்முறை சம்பவத்துக்காக, ஏற்கெனவே ஆயுள் தண்டனைக் கைதியாக இருந்தவர். அவரைக் கைது செய்தால்தான், தேர்தல் அமைதியாக நடக்கும்’ என்று தேர்தல் அதிகாரிகளிடம் முன்கூட்டியே புகார் கொடுத்தேன். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. அதைவிடக் கொடுமை, என்.எல்.சி நிர்வாகமும்கூட எனக்கு எதிராகத்தான் வரிந்து கட்டிக்கொண்டு வேலை பார்த்தது. ஒப்பந்தத் தொழிலாளர்கள், அப்ரன்ட்டிஸ் பணியாளர்கள், நிலம் கொடுத்தவர்கள் என பாதிக்கப்பட்ட மக்களுக்காக, என்.எல்.சி. நிர்வாகத்துக்கு எதிராகக் கடும் போராட்டங்கள் பல நடத்தி உரிமை பெற்றுக் கொடுத்தவன் நான். எனவே, என் மீது இருந்த இந்தக் கடுப்பின் காரணமாகத்தான் அந்த நிர்வாகம் மறைமுகமாக பலகோடிகளை வாரி இறைத்து, தி.மு.க-வினரை எல்லாம் எனக்கு எதிராகத் திருப்பிவிட்டது.


              அதோடு, தமிழகத்தில் எங்கும் இல்லாத அதிசயமாக, எனது தொகுதியில் என்.எல்.சி-யில் பணியாற்றும் மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையை (சி.ஐ.எஸ்.எஃப்.) தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தி உள்ளனர். எஸ்.பி-யிடம் கேட்டால் 'அவங்களை தேர்தல் ஆணையம்தான் நியமிச்சிருக்கு’ன்னு சொல்றார். தேர்தல் ஆணையத்திடம் கேட்டால், 'எங்களுக்குத் தெரியாது. எஸ்.பி-தான், தொழில் பாதுகாப்புப் படையைக் கூப்பிட்டு இருப்பார்’னு சொல்றாங்க. இந்தப் படையினர் செய்த அராஜகம் கொஞ்சம் நஞ்சம் அல்ல... பா.ம.க-வுக்கு அதிக செல்வாக்கு உள்ள தொகுதியில் வாக்களிக்க வரும் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், வேண்டுமென்றே லத்தி சார்ஜ் செய்வது, பொதுமக்களின் வாகனங்களைத் தாக்குவது என ஏகப்பட்ட இம்சைகள் செய்தனர்.

              தேர்தல் நாளன்று நான் வழக்கமாகப் பயன்படுத்தும் காரைப் பயன்படுத்தாமல், வேறு ஒரு காரைப் பயன்படுத்தினேன். அதனால்தான் உயிர் பிழைத்தேன்! ஏனென்றால், அன்று மதியம் என்னுடைய காரில் எனது சகோதரர் மதிய உணவு எடுத்துக்கொண்டு நான் இருந்த இடத்துக்கு வந்தபோது, அ.தி.மு.க. ரவுடிகள் சிலர் நான் அந்தக் காரில் இருப்பதாக நினைத்துக்கொண்டு, கண்ணாடியை அடித்து உடைத்தனர். எனது சகோதரருக்கும் பலத்த காயம். கோரணப்பட்டு, பாவைக்குளம், கொஞ்சிக்குப்பம், சத்திரம் போன்ற பகுதிகளில் உள்ள மக்களிடம், 'மாம்பழத்துக்கு வாக்களித்தால், உங்களைக் கொலை செய்வோம்’ என 100-க்கும் மேற்பட்ட ரவுடிகள், திரண்டு வந்து மிரட்டி இருக்கிறார்கள். இதுபோன்ற பல வன்முறைச் சம்பவங்கள் திட்டமிட்டுக் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இதற்கு உரிய ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. ஆனால், நியாயமான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள், யாருக்கோ பயந்துகொண்டு இந்த விஷயத்தில் பாராமுகம் காட்டுகிறார்கள். பா.ம.க-வினர் மீது பொய் வழக்குகள் போடுவதில் மட்டும் அவர்களின் கடமை உணர்வு பொங்கி வழிகிறது! அதனால்தான் வேறு வழியே இல்லாமல், தலைமைத் தேர்தல் அதிகாரியைச் சந்தித்துப் புகார் கொடுத்தேன். அதே சூட்டோடு உண்ணாவிரதப் போராட்டத்திலும் குதித்தேன். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!'' என்று சீறலாக முடித்தார்.

இது குறித்துத் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறியது 

              ''நெய்வேலி தொகுதியில் சில பூத்களில் வன்முறை நடந்தது உண்மை. அதனால், அங்கு மறுவாக்குப் பதிவு நடந்தபோது, பலத்த பாதுகாப்புடன் அதை நடத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தேன். அதன்படி, அமைதியான முறையில் மறு வாக்குப் பதிவு நடந்தது. பா.ம.க. வேட்பாளர் கொடுத்துள்ள புகார் குறித்து நானே நேரடியாக விசாரித்து வருகிறேன். வன்முறையில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் சரி, கண்டிப்பாக நடவடிக்கை பாயும். மற்றபடி, அங்கே அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டார்கள் என்று சொல்வதை  ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால், அவர்கள் எல்லோரும் அப்போது எங்கள் கண்காணிப்பு வளையத்தில்தான் இருந்தனர்!'' என்றார் உறுதியாக. பரபரப்புக் கிளப்ப வேல்முருகனுக்கு சொல்லியா தர வேண்டும்?

Read more...

கடலூர் சமட்டிக்குப்பத்தில் தேர்தல் தகறாரு: குற்றவாளிகளை கைது செய்யக் கோரி எம்.எல்.ஏ. வேல்முருகன் கலெக்டரிடம் மனு

செவ்வாய், 19 ஏப்ரல், 2011


கடலூர்: 

           சமட்டிக்குப்பத்தில் நடந்த தேர்தல் தகராறில், முக்கிய குற்றவாளிகளை கைது செய்யக் கோரி, வேல்முருகன் எம்.எல்.ஏ., கலெக்டர் சீதாராமன் மற்றும் எஸ்.பி., அஷ்வின் கோட்னீசிடம் மனு கொடுத்துள்ளார்.

மனு விவரம்: 
               
                  கடலூர் மாவட்டம், நெய்வேலி சட்டசபை தொகுதி பா.ம.க., வேட்பாளராக தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்டேன். தேர்தல் அன்று சமட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 150 பேர் கொண்ட கும்பல், 15க்கும் மேற்பட்ட வாகனங்களில் வீச்சரிவாள், இரும்பு பைப் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன், நெய்வேலி தொகுதி முழுவதும் உள்ள பெரும்பாலான ஓட்டுச்சாவடிகளுக்குச் சென்று பா.ம.க., - தி.மு.க., தோழமை கட்சி பொறுப்பாளர்களை மிரட்டியும், மாம்பழம் சின்னத்திற்கு ஓட்டு போட்டவர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களுக்கு கொலை மிரட்டலும் விடுத்தனர். 

               பின்னர், சமட்டிக்குப்பம் கிராமத்திற்குச் சென்று, அங்குள்ள 55, 56 எண் ஓட்டுச்சாவடிகளில் இருந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களைச் சேதப்படுத்தினர். அந்த கும்பல் என்னையும், எனது சகோதரரர்கள் திருமால்வளவன், கண்ணன் ஆகியோரையும் கொலை செய்யாமல் விடமாட்டோம் என சபதம் செய்துள்ளது. எனவே, மேற்படி கும்பலை கைது செய்யவும், அவர்கள் பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்து எனக்கும் எனது சகோதரர்களுக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு, வேல்முருகன் எம்.எல்.ஏ., தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

பண்ருட்டி சட்ட மன்ற உறுப்பினர் வேல்முருகன் கைது


Read more...

Miscreants who ransacked booths still at large: PMK MLA T. Velmurugan

திங்கள், 18 ஏப்ரல், 2011

CUDDALORE:

        Sitting Panruti MLA T. Velmurugan, now running for the newly-formed Neyveli Assembly constituency as the Pattali Makkal Katchi candidate, has alleged that certain criminal elements, who ransacked Samattikuppam polling stations on April 13, were still at large while innocent party workers had been secured by the police.

          Mr. Velmurugan said that he observed a fast at the Elections Department on St.George Fort premises in Chennai from 5 p.m. to 9 p.m. on Friday, urging authorities to arrest the real culprits. Later, he was taken to the B-1 Beach Police Station for inquiry and, on execution of a personal bond, was set free. Mr. Velmurugan said that the police had suddenly withdrawn the personal security guards provided to him for over a decade.

Read more...

வாக்குப்பதிவு எந்திரங்கள் உடைப்பு: பா.ம.க.வேட்பாளர் வேல்முருகன் கண்டனம்;

வெள்ளி, 15 ஏப்ரல், 2011

நெய்வேலி:
          சட்டசபை தேர்தலின் போது நெய்வேலி தொகுதி குள்ளஞ்சாவடியை அடுத்த சமட்டிக்குப்பத்தில் 2 வாக்குச்சாவடிகளில் இருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒரு கும்பலால் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த சம்பவத்துக்கு நெய்வேலி தொகுதி பா.ம.க. வேட்பாளரும், கட்சியின் மாநில துணை பொது செயலாளருமான வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:-


            சமட்டிக்குப்பம் மற்றும் கிருஷ்ணன் பாளையம் பகுதி மக்கள் சுமார் 2 ஆயிரம் பேர் எனக்கு வாக்களித்திருந்தனர். இதனை பொறுக்காத எதிர் அணியை சேர்ந்தவர்கள் ரவுடி கும்பல் மூலம் சமட்டிக்குப்பம் வாக்குச்சாவடியில் சீல் வைக்கப்பட்டிருந்த 2 மின்னணு எந்திரங்களையும் அடித்து நொறுக்கி சூறையாடி விட்டனர். அந்த கும்பல் ஜனநாயக கடமையாற்ற வந்த பொது மக்களை மிரட்டி வாக்குப்பதிவு எந்திரங்களை உடைத்துள்ளனர். நாளை (15-ந் தேதி) மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ரவுடி கும்பல் மீது தேர்தல் ஆணையமும், போலீசாரும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


சமட்டிக்குப்பத்தில் 2 வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு நாளை நடைபெறுவது குறித்து “மைக்” மூலம் சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் வசிக்கும் பகுதியில் பிரசாரம் செய்து அவர்கள் ஜனநாயக கடமையாற்ற உதவ வேண்டும். மேலும், அந்த வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புக்காக கூடுதல் போலீசாரை நிறுத்தி மறு ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும்.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Read more...

நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் வேல்முருகன் இறுதிகட்ட பிரச்சாரம்

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

நெய்வேலி:



          நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் வேல்முருகன் நேற்று என்.எல்.சி. மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து விட்டு திறந்த வேனில் சென்று வாக்கு சேகரிக்க தொடங்கினார். 16, 17, 24, 25, 18, 26, 27 ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார். 

அப்போது  பா.ம.க. வேட்பாளர்  வேல்முருகன் கூறியது:- 

 

           என்.எல்.சி.யில் வேலைபார்க்கும் ஒப்பந்த மற்றும் நிரந்தரத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளுக்காக பலமுறை சட்டமன்றத்தில், முதல்வர் கருணாநிதியிடம் பேசினேன். இனியும், குறிப்பாக ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநிரந்தரம், சொசைட்டி தொழிலாளர்களின், ஹவுசிகோஸ் தொழிலாளர்களின் பணி நிரந்தரம், சம்பள உயர்வு உள்ளிட்ட அத்தியாவசிய அடிப்படை உரிமைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன்.  மேலும் 21, 29 ஆகிய வட்டங்களில் வசிக்கும் ஒப்பந்த தொழிலாளர்கள், தள்ளுவண்டி வியாபாரிகள் பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் நலனுக்காக நிரந்தர தீர்வு ஏற்பட என்.எல்.சி. நிர்வாகத்திடம் பேசி சுமூக தீர்வுக்காக பாடுபடுவேன்.  இவ்வாறு வேல்முருகன் கூறினார்.



              வாக்கு சேகரிப்பின்போது நகர தி.மு.க. செயலாளர் புகழேந்தி, நகர அவைத்தலைவர் சிவந்தான் செட்டி, தொ.மு.ச., பா.ம.க. தலைமை நிர்வாகிகளான கோபாலன், திலகர், மோனிகா, வீர.ராமச்சந்திரன், பெருமாள், ரகுராமன், காத்தவராயன், சுப்ரமணியன், முன்னாள் தொ.மு.ச. செயலாளர் ராசவன்னியன், பா.ம.க. நகர செயலாளர் சக்கரவர்த்தி, மூ.மு. தொழிற்சங்க நிர்வாகிகள் முருகேசன், செல்வகுமார், தொ.மு.ச. துணை தலைவர் பரமகு, ஆறுமுகம், பகுதி செயலாளர்கள் கலைச்செல்வன், அப்துல் மஜீத் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Read more...

பாட்டாளி மக்கள் கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் திரு.வேல்முருகன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

திங்கள், 11 ஏப்ரல், 2011




புலியூர் சிங்கமே.
நெய்வேலி தொகுதி வெற்றியை பிறந்தநாள் பரிசாக வழங்குகிறோம்...

Read more...

நெய்வேலி சட்டமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் தி.வேல்முருகனை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம்


           நெய்வேலி சட்டமன்றத் தொகுதி  பாமக வேட்பாளர் தி.வேல்முருகனை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். 

அப்போது பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ்


              தமிழ்நாட்டில் தற்போது ஒரு பெரிய அலை வீசிக்கொண்டிருக்கிறது. அது என்ன அலை என்றால் கலைஞரின் சாதனை அலை. அந்த அலையால் கலைஞர் 6வது முறையாகவும் தமிழக முதல் அமைச்சராகுவது முடிவாகி விட்டது. இந்த தொகுதியிலும் பாமக வேட்பாளர் வெற்றி பெறுவார். எதிரணியில் இருக்கும் கூட்டணி கோடம்பாக்கத்தில் படம் எடுக்கும் சினிமா கூட்டணி. அதில் உள்ள விஜயகாந்த் விடிந்தால் எல்லாம் மறந்து போச்சு என்ற நிலையில் இருப்பவர். சொன்னதை எதுவுமே செய்யாதவர் ஜெயலலிதா. அவர் ஒன்று மட்டுமே செய்தார்.

            
லைஞர் ஆட்சியில் விவசாயிகளுக்காக கொண்டு வந்த இலவச மின்சாரத்தை ரத்து செய்தார். கலைஞர் மீண்டும் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்கி அவர்களின் 7 ஆயிரம் கோடி ரூபாய் கடனையும் தள்ளுபடி செய்தார். கலைஞர் ஆட்சி சாதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம் என்றார்.

Read more...

நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் பாமக வேட்பாளர் தி.வேல்முருகன் வாக்கு சேகரிப்பு - புகைப்படங்கள்

சனி, 9 ஏப்ரல், 2011






 
 

 


Read more...

நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் மாம்பழம் சின்னத்திற்கு வாக்களியுங்கள்- தி.வேல்முருகன்

மாம்பழம் சின்னத்திற்கு வாக்களியுங்கள் - 

தி.வேல்முருகன் அவர்களின் 

வேண்டுகோள் 


 http://profile.ak.fbcdn.net/hprofile-ak-snc4/187834_142248415845892_284602_n.jpg



           அனைவருக்கும் வணக்கம், நான் இப்போது நெய்வேலி நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில்  போட்டியிடுகிறேன். நெய்வேலி தொகுதி வாக்காள நண்பர்கள் மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன்.

         நெய்வேலி தொகுதி அல்லாத நண்பர்கள் நெய்வேலிதொகுதி நண்பர்களுக்கு என்னை அறிமுகம் செய்து எனக்கு வாக்களிக்க செய்யுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன்.


அன்புடன்


தி.வேல்முருகன்

நெய்வேலி தொகுதி வேட்பாளர்

Read more...

நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் பாமக வேட்பாளர் தி.வேல்முருகன் வாக்கு சேகரிப்பு - புகைப்படங்கள்

வெள்ளி, 8 ஏப்ரல், 2011









 
 
 
 
Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் பாமக வேட்பாளர் தி.வேல்முருகன் வாக்கு சேகரிப்பு - புகைப்படங்கள்







 
 
 
 


Read more...

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP