ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாவிட்டால் மறியல்: ராமதாஸ்

புதன், 29 செப்டம்பர், 2010


ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி சென்னை மெமோரியல் ஹால் அருகில் செவ்வாய்க்கிழமை கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க.வினர் நடத்திய ஆர்பாட்டம் 

சென்னை:

                 தமிழ்நாட்டில் உடனடியாக ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடங்க வேண்டும். இல்லையெனில் அடுத்த மாதம் மாநிலம் முழுவதும் சாலை மறியல்  போராட்டம் நடத்துவோம் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி பா.ம.க. சார்பில் தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து, ராமதாஸ் பேசியது: 

                  தமிழகத்தில் அமலில் உள்ள இடஒதுக்கீட்டு முறையை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால், உச்ச நீதிமன்ற தீர்ப்புபடி உடனடியாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியாக வேண்டும். ஆனால், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த இங்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த 40-க்கும் மேற்பட்ட சமுதாயத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபர் 11-ல் முதல்வர் கருணாநிதியை சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

                   ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால், அடுத்த மாதம் மாநிலம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என்றார் ராமதாஸ். ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஏ.கே. மூர்த்தி, பொன்னுசாமி, வேல்முருகன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP