கடலூர் அருகே பாமக கொடிக் கம்பங்கள் சேதம்: ஆட்சியர் தலைமையில் அமைதிப்பேச்சு

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010


கடலூர்:

                 கடலூர் அருகே பாமக கொடிக் கம்பங்கள் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக, இரு தரப்பினரிடையே மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தலைமையில் வெள்ளிக்கிழமை அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது.

                   மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் முன்னிலை வகித்தார். பாமக மாநில இணைப் பொதுச் செயலர் தி.வேல்முருகன் எம்எல்ஏ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் சு.திருமாறன் உள்ளிட்ட இரு கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இனி எந்தப் பிரச்னையும் ஏற்படாது, சட்டம் ஒழுங்குக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் யாராவது நடந்து கொண்டால். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உறுதுணையாக இருப்போம் என்றும் இரு தரப்பினரும் தெரிவித்தனர்.

இந்நிலையில் பாமக மாநில துணைப் பொதுச் செயலர் தி.திருமால்வளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் கூறியிருப்பது:

                                     தலித் மக்கள் பலர் பாமகவில் இணைந்து வருகிறார்கள். இதைச் சகிக்க முடியாத சிலர், சாதிய மோதல்களைத் தூண்டுவது குறித்து, காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. பாமக மற்றும் வன்னியர்கள் தாழ்த்தப்ட்ட மக்களுக்கு விரோதிகள் என்று சித்தரிப்பதை பாமக முறியடிக்கும். உள்ள தலித் பொறுப்பாளர்கள் தாக்கப்பட்டு உள்ளனர். கொடிக் கம்பங்கள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. கடலூர் மாவட்ட காவல் துறை பாமகவுக்கு எதிராகவும் ஒரு குழுவுக்கு ஆதரவாகவும் வழக்குப் பதிவு செய்து இருப்பது கண்டனத்துக்கு உரியது என்றும் அறிக்கை தெரிவிக்கிறது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP