தமிழில் பெயர்ப் பலகை: கடலூரில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

செவ்வாய், 22 ஜூன், 2010

கடலூர்:

             கடலூரில் பாட்டாளி மக்கள் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். அனைத்து வணிக நிறுவனங்களிலும் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என்ற,​​ அரசாணையை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

               மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பாமக மாநில துணைப் பொதுச் செயலர் திருமால்வளவன் தலைமை தாங்கினார்.​ மாவட்டச் செயலர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தார்.​ மாவட்ட அலுவலகச் செயலர் போஸ் ராமச்சந்திரன் வரவேற்றார்.​ கட்சியின் அமைப்புச் செயலாளர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ.​ சிறப்புரை நிகழ்த்தினார். மாவட்டச் செயலர் பஞ்சமூர்த்தி,​​ நகரச் செயலர் ஆனந்த்,​​ ஒன்றியச் செயலர்கள் சிவகுமார்,​​ முருகன்,​​ விஜயகாந்த்,​​ சக்கரவர்த்தி,​​ தட்சிணாமூர்த்தி,​​ நகராட்சி உறுப்பினர்கள் திருமூர்த்தி,​​ ராதாகிருஷ்ணன்,​​ கமலநாதன்,​​ செந்தில்,​​ மாணவரணிச் செயலர் அருள்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விருத்தாசலம்:


              விருத்தாச்சலத்தில் நடைபெற்றஆர்ப்பாட்டத்துக்கு, ​பாமக நகரச் செயலர் முருகன் தலைமை ஏற்றார்.​ மாநில முன்னாள் துணைச் செயலர் திருஞானம்,​​ ஒன்றியச் செயலர்கள் செல்வக்குமார்,​​ வெங்கடேசன்,​​ ராஜவேல் மற்றும் நகர்மன்ற உறுப்பினர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக் குழு துணைத் தலைவர் பழனிவேல்,​​ நகர்மன்ற உறுப்பினர் தனபாண்டியன்,​​ ஊராட்சித் தலைவர் ஆசைத்தம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Halloween Comments - http://www.halloweentext.com 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP