கும்மிடிப்பூண்டியில் தேமுதிகவில் இருந்து 100 பேர் பாமகவில் இணைந்தனர்

செவ்வாய், 23 நவம்பர், 2010


கும்மிடிப்பூண்டி:

                 கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரணி பேரூர் அருகே உள்ள மல்லியங்குப்பம் ஊராட்சியில் இருந்து, ஊராட்சி மன்ற துணைத் தலைவரும் தேமுதிக கிளைச் செயலருமான கே.ரங்கநாதன் தலைமையில் 100 பேர் வெள்ளிக்கிழமை பாமகவில் இணைந்தனர்.

                    பாமக திருவள்ளூர் வடக்கு மாவட்டச் செயலர் க.ஏ.இரமேஷ், மாநில துணைத் தலைவர் கடலூர் சண்முகம் ஆகியோர் முன்னிலையில் இவர்கள் பாமகவில் இணைந்தனர். மல்லியன்குப்பம் ஊராட்சி மன்ற தலைவரும் பாமக விவசாய அணி மாவட்டச் செயலருமான பா.ரவி, ஆரணி பேரூர் பாமக செயலரும், ஆரணி பேரூராட்சி துணைத் தலைவருமான சி.பாபு, மாவட்ட இளைஞரணி துணைச் செயலர் கோ.சிவா ஆகியோர் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP