2015ஆம் ஆண்டு தமிழர் வாழ்வு உரிமைகள் மீட்கப்பட்டு ஏற்றமும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக திகழ வேண்டும் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து செய்தி

புதன், 31 டிசம்பர், 2014


அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் தமிழர் வாழ்வுரிமைகளை வென்றிட உறுதியேற்போம்!
2014ஆம் ஆண்டு நிறைவடைந்து 2015ஆம் ஆண்டு உதயமாகிறது. இந்த புதிய ஆண்டில் அனைத்து தமிழ் மக்களுக்கும் என் நெஞ்சார்ந்த அன்பு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகத் தமிழர் இனம் ஆண்டாண்டு காலமாக தம்முடைய உரிமைக்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது. தமிழினம் இன்னமும் தமக்கு உரித்தான வாழ்வுரிமையையும் சுதந்திரத்தையும் முற்று முழுதாக மீட்டெடுத்து நிம்மதிப் பெருமூச்சு விட்டுவிடவில்லை.

உதயமாகும் 2015ஆம் ஆண்டிலும் நமக்கான போராட்டங்களும் போர்க்களங்களும் காத்துக் கிடக்கின்றன.. இந்த புதிய ஆண்டில் தமிழினம் எதிர்கொண்டிருக்கும் அனைத்து வாழ்வுரிமைப் பிரச்சனைகளிலும் முழுமையாக வெற்றி காண அயராது போராடுவோம் என்பதையே இந்த புத்தாண்டு நாள் உறுதிமொழியாகக் கொள்வோம்.

தமிழகத்தின் உரிமை சார்ந்த அனைத்துப் போராட்டங்களிலும் ஜாதி, மத, கட்சி மாச்சரிய எல்லைகளைக் கடந்து ஓரணியில் தமிழராய் அணிதிரள்வோம் எனவும் உறுதி கொள்வோம்.

தமிழீழத்தில் சிங்களப் பேரினவாதத்தின் ஒடுக்குமுறையில் இருந்து ஈழத் தமிழர்கள் முழுமையாக விடுதலை பெறுவதற்கான அரசியல் நகர்வுகளை சர்வதேச அரங்கில் முனைப்புடன் தொடர்வோம் என்றும் இந்த புதிய ஆண்டில் உறுதி ஏற்போம்.

தமிழர் வாழ்வு உரிமைகள் மீட்கப்பட்டு ஏற்றமும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக திகழ வேண்டும் என இந்தப் புதிய ஆண்டில் என் அன்புநல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பண்ருட்டி தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

கொடுங்கோலன் ராஜபக்சேவை ஆதரித்து இந்தி திரை நட்சத்திரங்கள் நடிகர் சல்மான்கான், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பிரசாரத்துக்கு செய்துள்ளதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கடும் கண்டனம்


தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் இன்று 31.12.2014 வெளியிட்ட அறிக்கை:
 
கொடுங்கோலன் ராஜபக்சேவுக்கு ஆதரவாக இந்தி திரை நட்சத்திரங்கள் பிரசாரத்துக்கு கடும் கண்டனம்! தமிழ்நாட்டில் இந்தி திரைப்படங்களுக்கு தடை விதிப்போம்- எச்சரிக்கை!!

இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியைத் தழுவக் காத்திருக்கும் கொடுங்கோலன் ராஜபக்சேவை ஆதரித்து இந்தி திரைப்படல உலகத்தைச் சேர்ந்த நடிகர் சல்மான்கான், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோர் இலங்கையில் பிரசாரம் செய்துள்ளது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தோல்வியின் விளம்பில் நின்று கொண்டு, ஈழத் தமிழ் மக்களிடத்தில் 'நடந்ததை மறந்துவிடுங்கள்' என்று கெஞ்சிக் கொண்டு வாக்கு பிச்சை கேட்டு வருகிறான் ராஜபக்சே.

இலங்கை அதிபர் தேர்தலில் எப்படியும் தோற்றுவிடுவோம்; தன்னை போர்க்குற்றவாளி கூண்டிலே சர்வதேச சமூகம் நிறுத்திவிடும் என்று பகிரங்கமாக புலம்பியும் வருகிறான்..

இத்தகைய ஒருவனுக்காக இந்தி பட உலகத்தைச் சேர்ந்தவர்கள் பிரசாரம் செய்துள்ளது மிகக் கடுமையாகவும் வன்மையாகவும் கண்டிக்கத்தக்கது.

உலக நாடுகளில் 'இந்தியன்' ஒருவன் பாதிக்கப்பட்டால் உடனே கொந்தளிக்கிற இந்திய உலகமும் இந்தி திரைப்பட உலகும் ஒன்றரை லட்சம் ஈழத் தமிழ் உறவுகள் இனப் படுகொலை செய்யப்பட்ட போது கை கட்டி வாய்மூடி மவுனம் காத்து இனப்படுகொலையை ஆதரித்தன.

700க்கும் மேற்பட்ட சொந்த நாட்டு குடிமக்களான தமிழ்நாட்டு மீனவர்கள் துடி துடிக்க சுட்டுக் கொல்லப்படுகிற போதும் வாய் திறக்காமல்தான் இருக்கின்றன. இந்த வேதனையும் படுகாயமும் தமிழர் நெஞ்சங்களில் என்றென்றும் ஆறாத வடுவாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழினப்படுகொலையாளன் ராஜபக்சேவை ஆதரித்து இலங்கைக்கே போய் இந்தி பட உலகைச் சேர்ந்த நட்சத்திரங்கள் பிரசாரம் செய்திருப்பது வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சுவதாகும். ஏழரை கோடித் தமிழ்நாட்டு மக்கள் இந்தியாவின் ஒரு அங்கமா? அல்லது தமிழினத்தை ஒடுக்குகிற இலங்கைத் தீவில் வாழுகிற சிங்களதேசம்தான் இந்தியாவின் ஒரு அங்கமா?

தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என்று பிரகடனம் செய்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். எங்கள் தமிழ்நாட்டு சட்டமன்றத் தீர்மானத்தை புறந்தள்ளிவிட்டு மீறிவிட்டு இலங்கைக்குப் போய் கொடியவன் ராஜபக்சேவுக்கு பிரசாரம் செய்திருப்பது என்பது ஏற்க முடியாத ஒன்று. வன்மையான கண்டனத்துக்குரியது.

இந்தி திரை உலகத்தின் இந்த தமிழினத் துரோகம் தொடர்ந்தும் நீடிக்குமேயானால் வடகிழக்கு இந்திய மாநிலங்களில் இந்தித் திரைப்படங்களுக்கு போராளிக் குழுக்கள் பன்னெடுங்காலம் தடை விதித்திருப்பது போல தமிழ்நாட்டிலும் எந்த ஒரு இந்தித் திரைப்படத்தையும் எந்த ஒரு காலத்திலும் திரையிடவிடமாட்டோம். எந்த ஒரு இந்தி நடிகரையும் நடிகையையும் தமிழ்நாட்டுக்குள் நுழையவும் விடமாட்டோம்.. என பகிரங்கமாக எச்சரிக்கிறோம்.

இதனால் இந்திப் பட உலகத்தவர், கொடுங்கோலன் ராஜபக்சேவை ஆதரித்து பிரசாரம் செய்வது போன்ற நடவடிக்கைகளை இனியும் மேற்கொண்டால் விளைவுகளை எதிர்கொள்ளவும் தயாராக வேண்டும். தமிழ்த் திரை உலகத்தினரும் தமிழினத்தின் உணர்வுகளை இந்தி பட உலகத்தினருக்கு தெரியப்படுத்தி இத்தகைய தமிழினத் துரோகச் செயல்களில் எவர் ஒருவரும் ஈடுபடக் கூடாது என்று எச்சரித்து அறிவுறுத்துமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

பண்ருட்டி தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

வங்கதேசம், இங்கிலாந்து, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் 221 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை

புதன், 24 டிசம்பர், 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

வங்கதேசம், இங்கிலாந்து, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் 221 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்ததற்காக மொத்தம் 66 மீனவர் உறவுகளை சிங்களக் கடற்படை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதரமான 81 படகுகளையும் சிங்களக் கடற்படை பறிமுதல் செய்து வைத்திருக்கிறது.

தமிழ்நாட்டு மீனவர்களை சிங்கள கடற்படை கைது செய்து துன்புறுத்துவதும் சிறையில் அடைப்பதும் நாளாந்த நடவடிக்கையாக தொடர்ந்து வரும் நிலையில் தற்போது வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து கடற்படையும் தமிழ்நாட்டு மீனவர்களை சிறைபிடிக்கத் தொடங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் பகுதியைச் சேர்ந்த செபா என்பவருக்குச் சொந்தமான ஆவேமரியா என்ற விசைப்படகு, ராஜன் என்பவரின் ஸீமேரி என்ற விசைப்படகு, சின்னத்துறை பகுதியைச் சேர்ந்த செல்வன் என்பவருக்குச் சொந்தமான அன்னை விசைப்படகு ஆகிய 3 விசைப்படகுகளில் அதே பகுதியைச் சேர்ந்த 26 மீனவர்கள் கடந்த நவம்பர் 17-ந் தேதி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகேயுள்ள பெட்டுவகாட் பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் சென்றனர். ஆழ்கடலில் சர்வதேச கடற்பரப்பில் கடந்த டிசம்பர் 9-ந் தேதியன்று மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த வங்கதேச கடலோர காவல்படையினர் 26 மீனவர்களையும் 3 படகுகளையும் சிறைபிடித்துச் சென்றுள்ளனர்.

இதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் சின்னதுரை பகுதியை சேர்ந்த டைடஸ் என்பவருக்கு சொந்தமான கரிஷ்மா என்ற மீன்பிடி படகில் தமிழகத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் கடந்த நவம்பர் 20-ந் தேதியன்று ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்காக கேரள மாநிலம் கொச்சிக்கு சென்றனர். கொச்சியில் இருந்து கிளம்பி இந்திய பெருங்கடலில் உள்ள இங்கிலாந்துக்கு சொந்தமான டியாகோ கார்சியோ தீவு அருகே சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்களின் படகுகள் திசை மாறி சென்ற நிலையில் கடந்த 5-ந் தேதியன்று இங்கிலாந்து கடற்படையினர் மீன்பிடி படகுடன் 14 மீனவர்களையும் சிறைப்பிடித்துச்சென்றனர். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அந்தோணி ஜான் சேவியர், ராமேஸ்வரத்தை சேர்ந்த துரை, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ரோஸ்லின் , பேபி, ஏ.ததேயூஸ்,கி.ததேயூஸ், விஜின், அல்போன்ஸ், டெனிஸ்டன், ஷிபு, வில்வராஜ் உள்ளிட்ட 14 பேர் இங்கிலாந்து கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர். மேலும் கடந்த 15-ந் தேதியன்றும் 13 தமிழ்நாட்டு மீனவர்களை இங்கிலாந்து கடற்படை அதே கடற்பரப்பில் கைது செய்தது.

இந்த நிலையில் மீண்டும் 102 மீனவர்களை இங்கிலாந்து கடற்படை, இந்தியப் பெருங்கடலில் டியாகோ கார்சியோ தீவு அருகே கைது செய்துள்ளது. கேரள மாநிலம் கொச்சி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 27ந் தேதி கன்னியாகுமரி தூத்தூரை சேர்ந்த பீட்டர், டிக்டோசன், ஆன்டணி, ஸ்டீபன், சின்னத்துறையை சேர்ந்த சிலுவை ஆகியோருக்கு சொந்தமான 7 விசைப்படகுகளில் 102 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். இவர்களில் ஒருவர் கடலூரை சேர்ந்தவர். மற்ற அனைவரும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

இந்திய பெருங்கடலில் ஆழ்கடலில் சர்வதேச கடற்பரப்பில் கடந்த 11-ந் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, எல்லை தாண்டி வந்ததாக கூறி 102 மீனவர்களையும் இங்கிலாந்து கடற்படை கைது செய்து, டியாகோ கார்சியோ தீவில் சிறை வைத்துள்ளனர்.

மொத்தமாக இலங்கை, வங்கதேசம், இங்கிலாந்து கடற்படையால் கைது செய்யப்பட்டு 221 தமிழக மீனவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மத்திய அரசின் கவனத்துக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் கொண்டு சென்றுள்ளார். இருப்பினும் மத்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கிறிஸ்துமஸ் பெருவிழா நெருங்கி வரும் நிலையில் 200க்கும் மேற்பட்ட மீனவர் உறவுகள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதால் அவர்களது உறவினர்கள் தவித்து வருகின்றனர்.

பாரம்பரிய மீன்பிடிப் பகுதியிலும் மீன்பிடித்தால் சிங்களக் கடற்படை சிறைபிடிக்கிறது! சர்வதேச கடற்பரப்பில் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டால் பன்னாட்டுக் கடற்படைகள் கைது செய்கின்ற நிலையில் தமிழ்நாட்டு மீனவர்களின் எதிர்காலமே கேள்விகுறியாகிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்ததாலேயே இத்தகைய வாழ்வா சாவா போராட்ட நிலைக்குத் தமிழ்நாட்டு மீனவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். கச்சத்தீவை மீட்டால் மட்டுமே தமிழ்நாட்டு மீனவர்களின் துயரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பது ஒட்டுமொத்த தமிழகத்தின் கோரிக்கை.

இது தமிழ்நாட்டு பிரச்சனைதானே என்று வழக்கம் போல அலட்சியம் காட்டாமல் 221 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்யவும் கச்சத்தீவை மீட்டு தமிழ்நாட்டு மீனவர்களின் எதிர்காலத்தையும் வாழ்வாதாரத்தையும் காப்பாற்றவும் மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

பண்ருட்டி தி.வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது: தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி்.வேல்முருகன் இரங்கல்

இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது: தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி்.வேல்முருகன் இரங்கல்   தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி்.வேல்முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

தமிழ்த் திரை உலக மேதை இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் மறைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது.

தமிழ்த் திரை உலகத்துக்கு ஏராளமான கலைஞர்களை அறிமுகம் செய்தவர் இயக்குநர் சிகரம் பாலசந்தர். மனித உறவுகள், சமூக பிரச்சனைகளை தமது படத்தில் அழகாக வெளிப்படுத்திய திரை உலக மேதை பாலசந்தர்.

இயக்குநராக, திரைவசன கர்த்தாவாக, தயாரிப்பாளராக திரை உலகில் தம் பன்முகங்களை வெளிப்படுத்திய பாலசந்தரின் மறைவு தமிழ்த் திரை உலகத்துக்கு பேரிழப்புதான்.

இன்று நம்மைவிட்டு இயக்குநர் கே.பாலசந்தர் பிரிந்திருந்தாலும் அவரது புகழ் என்றென்றும் இந்த மண்ணில் நிலைத்திருக்கும்.

திரை உலகில் சிகரத்தை தொட்ட இயக்குநர் கே.பாலசந்தரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும் தமிழ்த் திரை உலகத்துக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Read more...

தமிழக அரசு நிர்ணயித்த தொகையை முழுமையாக வழங்காமல் ரூ.500 கோடி பாக்கி வைத்திருக்கும் தனியார் சர்க்கரை ஆலைகள் முன்பு 23.12.2014 அன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நடக்க இருந்த முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

திங்கள், 22 டிசம்பர், 2014

தனியார் சர்க்கரை ஆலைகள் முன்பு நாளை டிச.23-ல் நடைபெற இருந்த முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு! போராட்ட தேதி பின்னர் அறிவிக்கப்படும்!!

தமிழக அரசு நிர்ணயித்த தொகையை விவசாயிகளுக்கு முழுமையாக வழங்காமல் ரூ500 கோடி அளவுக்கு பாக்கி வைத்திருக்கும் தனியார் சர்க்கரை ஆலைகள் முன்பு டிசம்பர் 23-ந் தேதி செவ்வாய்க்கிழமையன்று முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் அவர்கள் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் அவர்களின் தந்தையார் திரு தங்க. திருநாவுக்கரசு அவர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு இயற்கை எய்தினார்.

இதனால் நாளை செவ்வாய்க்கிழமையன்று 'தனியார் சர்க்கரை ஆலைகள் முன்பு" நடைபெற இருந்த "முற்றுகைப் போராட்டம்" தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது.

இந்த முற்றுகைப் போராட்டத்துக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

- தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தலைமை நிலையம்,
சென்னை.

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் தந்தை தங்க.திருநாவுக்கரசு மரணம்: செல்வி ஜெ.ஜெயலலிதா இரங்கல்

 
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் தந்தை மரணம்: முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான செல்வி ஜெ.ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான செல்வி ஜெ.ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் அன்புச் சகோதரர் வேல்முருகனின் தந்தை திருநாவுக்கரசு உடல் நலக் குறைவால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன். அன்புத் தந்தையை இழந்து வாடும் வேல்முருகன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read more...

முல்லைப் பெரியாறு, மீனவர் பிரச்சனைக்கு தீர்வு கண்டுவிட்டதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேச்சுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கண்டனம்!

ஞாயிறு, 21 டிசம்பர், 2014


முல்லைப் பெரியாறு, மீனவர் பிரச்சனைக்கு தீர்வு கண்டுவிட்டதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேச்சுக்கு கண்டனம்!

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் அவர்கள்  வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை மறைமலை நகரில் சனிக்கிழமையன்று (டிசம்பர் 20) நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசும்போது, முல்லைப் பெரியாறு அணை, மீனவர்கள் பிரச்சனைக்கு மத்திய அரசு தீர்வு கண்டுவிட்டது என்றும் பாஜகவின் தலைமையகம் மீனவர்களின் சரணாலயமாக மாறிவிட்டது என்றும் உண்மைக்கு மாறாக அப்பட்டமாக பொய் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது.

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி அளவுக்கு நீர்மட்டத்தை உயர்த்தலாம் என்று உச்சநீதிமன்றம்தான் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பின் அடிப்படையில்தான் 142 அடி நீரும் தேக்கப்பட்டது. இதில் பாரதிய ஜனதா தலைமையிலான மோடி அரசுக்கு ஒருதுளி பங்கும் கிடையாது.

தமிழ்நாட்டு அரசாங்கம் சட்டப் போராட்டத்தை நடத்தி நியாயத்தையும் தமிழரின் ஆற்று நீர் உரிமையையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது. அப்படிப் பெற்ற உரிமைக்கும் வேட்டு வைத்ததுதான் பாரதிய ஜனதாவின் மோடி அரசு.

முல்லைப் பெரியாறு அணைக்கு அருகே புதிய அணை கட்ட வேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கையை ஏற்று சுற்றுச் சூழல் குறித்து ஆராய அனுமதி கொடுத்த துரோகத்தைத்தான் பாரதிய ஜனதாவின் மோடி அரசு செய்துள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்கு பச்சைத் துரோகத்தை இழைத்துக் கொண்டிருக்கிறது பாஜக அரசு.

மீனவர் பிரச்சனைக்கு என்ன தீர்வு கண்டுவிட்டதாம் மோடி அரசு? இலங்கை சிறையில் இன்னமும் 66 மீனவர்கள் வாடுகின்றனர்.. மீனவர்களின் வாழ்வாதாரமான 88 படகுகள் இலங்கையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையால் மீன்பிடி படகுகள் பிடித்து வைக்கப்படுவதற்கும் கூட பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமிதான் காரணம் அல்லவா? அந்த துரோகி சுப்பிரமணியன் சுவாமி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததை இந்த உலகமே கண்டு அதிர்ச்சி அடைந்ததே!

அவ்வளவு ஏன் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை தேர்ந்தெடுத்த கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் வங்கதேசத்து கடற்படையாலும் இந்தியப் பெருங்கடலில் இங்கிலாந்து கடற்படையாலும் கொத்து கொத்தாக கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்களே? இதுவரை பொன். ராதாகிருஷ்ணன் அமைச்சராக அங்கம் வகிக்கும் மோடி அரசு வாய்மூடி மவுனியாகத்தானே இருக்கிறது?

முல்லைப் பெரியாறு அணையில் துரோகம்.. மீனவர் பிரச்சனையில் வாய்மூடி கள்ள மவுனம்... இத்தோடு முடிந்ததா மோடி அரசின் பச்சை துரோகம்..

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான ஒழுங்குமுறை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகமே வலியுறுத்தி வருகிறது.. 6 மாத கால மோடி அரசு இதற்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லையே..

காவிரி ஆற்றின் குறுக்கே 4 புதிய தடுப்பணைகளைக் கட்டப் போவதாக கர்நாடகா கொக்கரிக்கிறதே.. குட்டி வைக்கக் கூட திராணியற்ற தமிழரை வஞ்சிக்கும் வஞ்சக அரசுதானே மோடி அரசு!

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் பரப்புரையின் போது மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைப்போம் என்று கொடுத்த வாக்குறுதி என்னாயிற்று மாண்புமிகு மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அவர்களே!

இப்படி துரோகத்தையும் வஞ்சகத்தையும் தொடர்ந்து இழைத்துவிட்டு அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டுவிட்டோம் என்று பேசினால் தமிழ்நாட்டு மக்கள் நம்பிவிடுவார்களா?

ஈழத் தமிழரை இனப்படுகொலை செய்த ராஜபக்சேவுடன் கொஞ்சி குலாவிய ஒற்றை காரணத்துக்காகவே தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி கருவறுக்கப்பட்டுவிட்டது.. அதே நிலைப்பாட்டைத்தான் ஈழத் தமிழர் பிரச்சனையிலும் பாரதிய ஜனதா தலைமையிலான மோடி அரசு கடைபிடித்து வருகிறது..

முந்தைய காங்கிரஸ் அரசைவிட மிகக் கொடுமையாக ராஜபக்சேவின் இந்திய பிரதிநிதியாக பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி செயல்பட்டுக் கொண்டிருப்பதை தமிழினம் நன்கறியும்.. நாள்தோறும் துரோகி சுப்பிரமணியன் சுவாமியும் அதையே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறான்.

ஆகையால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு நேர்ந்த கதியை விட மிக மோசமான நிலைமையைத்தான் பாரதிய ஜனதா சந்திக்கும்.. இத்தகைய பிரசாரங்களைக் கைவிட்டுவிட்டு மத்திய அமைச்சர் பொறுப்பில் இருக்கும் நீங்கள் தமிழ்நாட்டு உரிமைகளை வஞ்சிக்க துணைபோகாமல் இருந்தால்போதும்  இல்லையெனில் காலம் தக்க பாடம் புகட்டும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

 தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி்.வேல்முருகன் அவர்களின் தந்தை திரு. தங்க.திருநாவுக்கரசு அவர்கள் 21.12.2014 அன்று இயற்கை எய்தினாா்


தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் பண்ருட்டி தி்.வேல்முருகன் அவர்களின் தந்தை திரு. தங்க.திருநாவுக்கரசு அவர்கள் 21.12.2014 அன்று இயற்கை எய்தினாா்.
 

Read more...

விகடன் குழும தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் மறைவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் இரங்கல்

சனி, 20 டிசம்பர், 2014

விகடன் குழும தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் மறைவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் வெளியிட்டுள்ள
இரங்கல் செய்தி:
 
விகடன் குழுமங்களின் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் தமது 79 வயது சென்னையில் காலமானார் என்ற செய்தி துயரமளிக்கிறது.

தமது இளம் வயதில் பத்திரிகைதுறையில் நுழைந்தவர் பெரியவர் எஸ்.பாலசுப்பிரமணியன். தமிழ் இலக்கிய உலகில் புதிய முயற்சியாக ஆனந்த விகடனில் முத்திரை கதைகள் திட்டத்தை உருவாக்கியவர்.

தந்தை எஸ்.எஸ். வாசன் வழியில் திரைப்படங்களையும் தயாரித்து வெற்றி கண்டவர். திறமையாளர்களைத் தேடிக் கண்டறிந்து ஊக்கப்படுத்தும் எண்ணம் கொண்டவராக திகழ்ந்தார். தமிழகம் கொண்டாடுகிற ஜெயகாந்தன், சுஜாதா போன்ற ஆளுமைகளின் படைப்புகள் இடம்பெறுவதற்கான களமாக ஆனந்த விகடனை உருவாக்கினார்.

1987-ஆம் ஆண்டு ஆனந்த விகடனில் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் தொடர்பான நகைச்சுவை துணுக்கு வெளியானதற்காக சிறைபட நேர்ந்த போதும் தம் மீதான நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தில் போராடி வென்று பத்திரிகை சுதந்திரத்தை நிலைநாட்டியவர். பத்திரிகை சுதந்திரத்துக்கு முன்னோடி வழக்காக இன்றளவும் அவர் தொடர்ந்த வழக்கே இருந்தும் வருகிறது.

ஜூனியர் விகடன் போன்ற அரசியல் விமர்சன- புலனாய்வு இதழ்களை உருவாக்கி தமிழ் பத்திரிகை உலகத்துக்கு புதிய பாதையை ஏற்படுத்திக் கொடுத்தவர். 1980களில் தமிழீழ விடுதலைப் போர் பற்றிய செய்திகளை வெளியிட்டு தமிழர் உள்ளங்களில் ஜூனியர் விகடனை நீங்கா இடம் பெறச் செய்தவர். இளம் தலைமுறையினர் பத்திரிகை துறையில் நுழைவதற்கான வாசலாக 'மாணவர் பத்திரிகையாளர்' திட்டத்தை உருவாக்கியவர்.

தமிழ் பத்திரிகை துறையின் ஜாம்பவானாக திகழ்ந்த "விகடன்" குழும தலைவர் பாலசுப்பிரமணியன் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பண்ருட்டி தி.வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

வங்கதேசம், இங்கிலாந்து, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் 221 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

வங்கதேசம், இங்கிலாந்து, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் 221 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்ததற்காக மொத்தம் 66 மீனவர் உறவுகளை சிங்களக் கடற்படை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதரமான 81 படகுகளையும் சிங்களக் கடற்படை பறிமுதல் செய்து வைத்திருக்கிறது.

தமிழ்நாட்டு மீனவர்களை சிங்கள கடற்படை கைது செய்து துன்புறுத்துவதும் சிறையில் அடைப்பதும் நாளாந்த நடவடிக்கையாக தொடர்ந்து வரும் நிலையில் தற்போது வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து கடற்படையும் தமிழ்நாட்டு மீனவர்களை சிறைபிடிக்கத் தொடங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் பகுதியைச் சேர்ந்த செபா என்பவருக்குச் சொந்தமான ஆவேமரியா என்ற விசைப்படகு, ராஜன் என்பவரின் ஸீமேரி என்ற விசைப்படகு, சின்னத்துறை பகுதியைச் சேர்ந்த செல்வன் என்பவருக்குச் சொந்தமான அன்னை விசைப்படகு ஆகிய 3 விசைப்படகுகளில் அதே பகுதியைச் சேர்ந்த 26 மீனவர்கள் கடந்த நவம்பர் 17-ந் தேதி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகேயுள்ள பெட்டுவகாட் பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் சென்றனர். ஆழ்கடலில் சர்வதேச கடற்பரப்பில் கடந்த டிசம்பர் 9-ந் தேதியன்று மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த வங்கதேச கடலோர காவல்படையினர் 26 மீனவர்களையும் 3 படகுகளையும் சிறைபிடித்துச் சென்றுள்ளனர்.

இதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் சின்னதுரை பகுதியை சேர்ந்த டைடஸ் என்பவருக்கு சொந்தமான கரிஷ்மா என்ற மீன்பிடி படகில் தமிழகத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் கடந்த நவம்பர் 20-ந் தேதியன்று ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்காக கேரள மாநிலம் கொச்சிக்கு சென்றனர். கொச்சியில் இருந்து கிளம்பி இந்திய பெருங்கடலில் உள்ள இங்கிலாந்துக்கு சொந்தமான டியாகோ கார்சியோ தீவு அருகே சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்களின் படகுகள் திசை மாறி சென்ற நிலையில் கடந்த 5-ந் தேதியன்று இங்கிலாந்து கடற்படையினர் மீன்பிடி படகுடன் 14 மீனவர்களையும் சிறைப்பிடித்துச்சென்றனர். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அந்தோணி ஜான் சேவியர், ராமேஸ்வரத்தை சேர்ந்த துரை, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ரோஸ்லின் , பேபி, ஏ.ததேயூஸ்,கி.ததேயூஸ், விஜின், அல்போன்ஸ், டெனிஸ்டன், ஷிபு, வில்வராஜ் உள்ளிட்ட 14 பேர் இங்கிலாந்து கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர். மேலும் கடந்த 15-ந் தேதியன்றும் 13 தமிழ்நாட்டு மீனவர்களை இங்கிலாந்து கடற்படை அதே கடற்பரப்பில் கைது செய்தது.

இந்த நிலையில் மீண்டும் 102 மீனவர்களை இங்கிலாந்து கடற்படை, இந்தியப் பெருங்கடலில் டியாகோ கார்சியோ தீவு அருகே கைது செய்துள்ளது. கேரள மாநிலம் கொச்சி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 27ந் தேதி கன்னியாகுமரி தூத்தூரை சேர்ந்த பீட்டர், டிக்டோசன், ஆன்டணி, ஸ்டீபன், சின்னத்துறையை சேர்ந்த சிலுவை ஆகியோருக்கு சொந்தமான 7 விசைப்படகுகளில் 102 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். இவர்களில் ஒருவர் கடலூரை சேர்ந்தவர். மற்ற அனைவரும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

இந்திய பெருங்கடலில் ஆழ்கடலில் சர்வதேச கடற்பரப்பில் கடந்த 11-ந் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, எல்லை தாண்டி வந்ததாக கூறி 102 மீனவர்களையும் இங்கிலாந்து கடற்படை கைது செய்து, டியாகோ கார்சியோ தீவில் சிறை வைத்துள்ளனர்.

மொத்தமாக இலங்கை, வங்கதேசம், இங்கிலாந்து கடற்படையால் கைது செய்யப்பட்டு 221 தமிழக மீனவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மத்திய அரசின் கவனத்துக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் கொண்டு சென்றுள்ளார். இருப்பினும் மத்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கிறிஸ்துமஸ் பெருவிழா நெருங்கி வரும் நிலையில் 200க்கும் மேற்பட்ட மீனவர் உறவுகள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதால் அவர்களது உறவினர்கள் தவித்து வருகின்றனர்.

பாரம்பரிய மீன்பிடிப் பகுதியிலும் மீன்பிடித்தால் சிங்களக் கடற்படை சிறைபிடிக்கிறது! சர்வதேச கடற்பரப்பில் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டால் பன்னாட்டுக் கடற்படைகள் கைது செய்கின்ற நிலையில் தமிழ்நாட்டு மீனவர்களின் எதிர்காலமே கேள்விகுறியாகிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்ததாலேயே இத்தகைய வாழ்வா சாவா போராட்ட நிலைக்குத் தமிழ்நாட்டு மீனவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். கச்சத்தீவை மீட்டால் மட்டுமே தமிழ்நாட்டு மீனவர்களின் துயரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பது ஒட்டுமொத்த தமிழகத்தின் கோரிக்கை.

இது தமிழ்நாட்டு பிரச்சனைதானே என்று வழக்கம் போல அலட்சியம் காட்டாமல் 221 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்யவும் கச்சத்தீவை மீட்டு தமிழ்நாட்டு மீனவர்களின் எதிர்காலத்தையும் வாழ்வாதாரத்தையும் காப்பாற்றவும் மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

பண்ருட்டி தி.வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

பாகிஸ்தானில் தலிபான்களால் 132 பிஞ்சு குழந்தைகள் உட்பட 142 பேர் படுகொலை: தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கண்டனம்

புதன், 17 டிசம்பர், 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் இன்று 17.12.2014 வெளியிட்டுள்ள அறிக்கை:
 
பாகிஸ்தானில் தலிபான்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட 132 பிஞ்சு குழந்தைகளுக்கு கண்ணீர் அஞ்சலி
பாகிஸ்தானின் பெஷாவர் நகரத்தில் அந்த நாட்டு ராணுவம் நடத்துகிற பள்ளிக் கூடத்துக்குள் நுழைந்து ஈவிரக்கமற்ற வகையில் 132 பிஞ்சு குழந்தைகள் உட்பட 142 பேரை தலிபான்கள் படுகொலை செய்து வெறியாட்டம் போட்டுள்ள செயல் உலகை உலுக்கி நெஞ்சை பதற வைக்கிறது..
தேர்வு எழுதிக் கொண்டிருந்த பள்ளி குழந்தைகள், துப்பாக்கிகளோடு வந்த தலிபான்களைக் கண்டு அஞ்சி நடுங்கி மேஜைகளுக்கு அடியில் பதுங்கி உயிர் தப்பிய காட்சிகள் எண்ணிப் பார்க்கவே முடியாத ஒன்று.. எங்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்வினைதான் இது என்றெல்லாம் இப்படிப்பட்ட கொடுஞ்செயலை தலிபான்கள் நியாயப்படுத்திக் கொண்டிருப்பது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஏற்கவே முடியாத ஒன்று. எந்த ஒன்றின் பெயராலும் எந்த ஒரு வன்முறை தாக்குதலையும் யாரும் ஆதரிக்கவோ நியாயப்படுத்திவிடவோ முடியாது. தலிபான்களின் துப்பாக்கிச் சூட்டில் பலியாகி வன்முறை வெறியாட்டங்களுக்கு ரத்த சாட்சியங்களாகிப் போன பெஷாவர் பிஞ்சுக் குழந்தைகளுக்கும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கும் என் கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறேன்.
தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

முல்லைப் பெரியாறில் கேரளா புதிய அணை கட்டுவதற்காக ஆய்வுக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் கடும் கண்டனம்

ஞாயிறு, 14 டிசம்பர், 2014

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் 14.12.2014  வெளியிட்டுள்ள அறிக்கை:

முல்லைப் பெரியாறில் கேரளா புதிய அணை கட்டுவதற்காக
ஆய்வுக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசுக்கு கடும் கண்டனம்!

முல்லைப் பெரியாறு அணையில் கேரளா புதிய அணையை கட்டுவதற்கான ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்காக 35 ஆண்டுகாலம் பெரும் சட்டப்போராட்டத்தை நடத்தி தற்போதுதான் தமிழ்நாடு தனக்கான நீதியைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டின் வயிற்றில் அடிக்கும் வகையில் முல்லைப் பெரியாறு அணை அருகேயே கேரளா மற்றொரு அணை கட்டுவதற்கு ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் வாழ்வாதாரமே முல்லைப் பெரியாறு அணை. ஆனால் இந்த மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில் புதிய அணை கட்டுவோம் என்று கேரளா அடாவடியாக அறிவித்தது. தற்போது கேரளா முன்வைத்த புதிய அணைக்கான் கோரிக்கையை ஏற்று ஆய்வு நடத்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் வன உயிரின வாரிய நிலைக்குழு அனுமதி அளித்துள்ளது.

தற்போதைய அணை மிகவும் பலமாக இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தீர்ப்பளித்துவிட்ட பின்னரும் மத்திய அரசு கேரளாவின் கோரிக்கையை ஏற்று புதிய அணை கட்ட ஆய்வுக்கு அனுமதி அளித்திருப்பது சட்டவிரோதமாகும்.

தமிழ்நாட்டு மக்களின் அத்தனை வாழ்வுரிமை பிரச்சனைகளிலும் கள்ள மவுனமாக இருப்பது அல்லது பச்சைத் துரோகம் இழைப்பது என்பதுதான் எந்த மத்திய அரசாக இருந்தாலும் கடைபிடிக்கிற கொள்கையாக இருக்கிறது. அதுவே தற்போதும் நீடிக்கிறது.

இந்தியப் பேரரசின் தொடரும் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மைக்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டத்தான் போகிறார்கள் என்பதை வரலாறு பார்க்கத்தான் போகிறது. கேரளாவின் அடிப்படையில் புதிய அணை கட்ட ஆய்வுக்கு அனுமதித்ததை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்.. இல்லையெனில் மிகக் கடுமையான விளைவுகளை மத்திய அரசு சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கிறேன்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும் இது தொடர்பாக எழுதியுள்ள கடிதத்தின் அடிப்படையில் மத்திய அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

பண்ருட்டி தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

பிரிகேடியர் பால்ராஜ் "சமர்க்கள நாயகன்” நூல் வெளியீட்டு விழா - தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் முதல் பிரதியை பெற்றார்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முக்கியமான போராளியாக விளங்கிய பிரிகேடியர் பால்ராஜ் அவர்களைப் பற்றிய "பிரிகேடியர் பால்ராஜ் சமர்க்கள நாயகன்” நூல் வெளியீட்டு விழா 13.12.2014 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் புதுச்சேரி பெரியார் திடலில் நடைபெற்றது.

ிராவிடர் விடுதலைக் கழகம் லோகு அய்யப்பன் தலைமை தாங்கினார். தந்தைபிரியன் வரவேற்றார். திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி நூலை வெளியிட தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் பெற்றுக்கொண்டார். வீராசாமி, சிவானந்தம், விஜயசங்கர், சிவகாமி, சார்லஸ், விஜயன், அபிமன்னன், மூர்த்தி, அரிமாபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அன்பெழிலன் நன்றி கூறினார்.
 
 













 

Read more...

கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள் அமைக்க ரஷ்யாவுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டனம்

சனி, 13 டிசம்பர், 2014


தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் இன்று 13.12.2014 வெளியிட்டுள்ள அறிக்கை:
கூடங்குளத்தை மனிதப் புதைகுழிகளாக்க சதி!

மேலும் 2 அணு உலைகள் அமைப்பதா? மத்திய மோடி அரசுக்கு கடும் கண்டனம்!

தமிழ்நாட்டு மக்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள் அமைக்க ரஷ்யாவுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளதற்கு மிகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரஷ்யா நாட்டு அதிபர் புதினுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமையன்று டெல்லியில் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தங்களில் கூடங்குளத்தில் 3 மற்றும் 4வது அணு உலைகளை அமைப்பது தொடர்பானதும் ஒன்று.

தமிழ்நாட்டு மக்கள் கடந்த பல ஆண்டுகாலமாக கூடங்குளத்தில் அணு உலையே அமைக்கக் கூடாது; எங்களது வாழ்வாதாரமும் சந்ததியும் பூண்டோடு இல்லாமல் போய்விடும் அபாயம் இருக்கிறது என்று தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.

வேறு எந்த ஒரு தேசத்திலுமே நடத்தாத மக்கள் திரள் பெரும் போராட்டத்தை கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் நடத்தி வருகின்றனர். ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளையும் ஒடுக்குமுறையும் தீரமுடன் எதிர்கொண்டு இன்னுயிரை ஈந்தும் இந்தப் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்ட களத்தில் அந்தோணி ஜான், ராஜசேகர், ரோசலின், சகாயம் ஆகியோர் களப்பலியாகி இருக்கின்றனர். நாட்டின் விடுதலைப் போராட்டக் காலம் போல பல்லாயிரக்கணக்கானோர் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் தொடரப்பட்டு ஒரு அசாதாரண் சூழ்நிலையிலும் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.

கூடங்குளத்தில் இயங்குவதாக சொல்லப்படுகிற முதலாவது அணு உலையே முடங்கிக் கிடக்கிறது. இன்னமும் துளி மின்சாரமும் தயாரிக்கப்படாமல் ஏதோ அப்பாவி மக்களை எலிகளாக நினைத்து ஒரு சோதனைக் கூடம் போலத்தான் அதை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த லட்சணத்தில் 3வது மற்றும் 4வது அணு உலைகளையும் அமைக்க ஒப்பந்தம் போட்டுள்ள இந்திய பேரரசை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன். அத்துடன் இந்தியா முழுவதும் 10 அணு உலைகளை நிறுவவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாம்.

இந்திய மக்களின் உயிரோடும் வாழ்வாதாரத்தோடும் விளையாடுகிற மத்திய மோடி அரசே! இதுதான் நீங்கள் சொன்ன மாற்றத்துக்குரிய அரசா? இந்திய மண்ணில் எந்த ஒரு இடத்திலும் நாசகார அணு உலைகளை அமைப்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடுமையாக எதிர்க்கும்.

கூடங்குளத்தை மனிதப் புதைகுழியாக்க இந்திய அரசு திட்டமிட்டு செயல்படுத்தி வரும் இத்தகைய அணு உலைகளை எதிர்த்து தொடர்ந்தும் போராடும் மக்களோடு தோளோடு தோள் நின்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராடும் . இத்தகைய மனிதகுலத்தை நிர்மூலமாக்குகிற அணு உலைத் திட்டங்களை நம்புகிற மத்திய அரசை வன்மையாகக் கண்டிப்பதுடன் இவற்றை உடனே கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

பண்ருட்டி தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

தமிழக அரசு மின்கட்டணத்தை 15 விழுக்காடு அளவில் உயர்த்திருப்பதை திரும்ப பெற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை கோரிக்கை

வெள்ளி, 12 டிசம்பர், 2014


தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் இன்று 12.12.2014 வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக அரசு மின்கட்டணத்தை 15 விழுக்காடு அளவில் உயர்த்திருப்பது என்பது பொதுமக்களுக்கு மீண்டும் பெரும் சுமையாகும். அண்மையில்தான் பால்விலை மிக அதிக அளவு உயர்த்தப்பட்ட நிலையில் மின்கட்டணமும் உயர்த்தப்பட்டிருப்பதை பொதுமக்களால் ஏற்கமுடியாத ஒன்றாகும்.

வீடுகளுக்கு இரு மாதங்களுக்கு 100 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு தற்போதுள்ள கட்டணம் ரூ.2.60-ல் இருந்து ரூ.3 ஆகவும் 200 யூனிட் பயன்படுத்துவோருக்கு ரூ.2.80-ல் இருந்து ரூ.3.25 ஆகவும், 201 முதல் 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு யூனிட்டுக்கு ரூ.4.-ல் இருந்து ரூ.4.60 ஆகவும் 500 யூனிட்டுக்கு மேல் இரு மாதங்களுக்கு பயன்படுத்து வோருக்கு ரூ.5.75-ல் இருந்து ரூ.6.60ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இது மக்களை மிகக் கடுமையாக பாதிக்கும். குறிப்பாக வாடகை வீடுகளில் வசிக்கும் நடுத்தர மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதால்தான் இத்தகைய ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

தனியாரிடம் இருந்து கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்குவதைவிட தமிழ்நாட்டின் நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தை தமிழகத்தின் தேவைக்கான அளவு பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் புதிய மின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுத்தால் இத்தகைய சுமைகளை மக்கள் மீது சுமத்த வேண்டியது இருக்காது.

அதே நேரத்தில் 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோரின் கட்டண உயர்வை தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும்; 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின்நுகர்வோர்கள் தற்போது அவர்கள் செலுத்தி வரும் மின் கட்டணத்தையே தொடர்ந்து செலுத்தினால் போதும்: என்ற மாண்புமிகு முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

பொதுமக்கள் மீது பெரும் சுமையாக ஏற்றப்பட்டிருக்கும் இந்த மின் கட்டண உயர்வை திரும்பப் பெற தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

பண்ருட்டி தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

திருப்பதியில் ராஜபக்சேவுக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பினர் மீதும், தமிழக செய்தியாளர்கள் மீதும் ஆந்திர காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் கண்டனம்

புதன், 10 டிசம்பர், 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன்  இன்று 10.12.2014 வெளியிட்டுள்ள அறிக்கை:
 
திருப்பதியில் தமிழக செய்தியாளர்கள் மீதும் கொடும் தாக்குதல் நடத்தி கைது செய்திருப்பதற்கும் கடும் கண்டனம்!


ஆந்திரா அரசே! தமிழக செய்தியாளர்களை உடனே விடுதலை செய்க!!


தமிழீழத்தில் ஒன்றரை லட்சம் ஈழத் தமிழ் உறவுகளை இனப்படுகொலை செய்த போர்க்குற்றவாளி ராஜபக்சேவுக்கு தமிழினத்தின் கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் மீறி இந்தியப் பேரரசு செங்கம்பளம் விரித்து வரவேற்றதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.


திருப்பதிக்கு வந்த கொடுங்கோலன் ராஜபக்சேவுக்கு கருப்புக் கொடி காட்டுவதற்காக நூற்றுக்கணக்கான வாகனங்களில் நேற்று (டிசம்பர் 9)-ந் தேதி மாலை சென்ற ஆயிரக்கணக்கான தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பினர் ஆந்திரா எல்லையில் அந்த மாநில காவல்துறையினரால் தடுக்கப்பட்டோம். பின்னர் ஆந்திரா எல்லையிலேயே ஒரு மணி நேரம் சாலை மறியல் போராட்டம் நடத்தி இனப்படுகொலையாளன் ராஜபக்சேவின் கொடும்பாவியையும் எரித்தோம்.


இந்த நிலையில் இன்று அதிகாலை திருப்பதி ஆலயத்தில் வழிபாடு நடத்திய படுகொலையாளன் ராஜபக்சேவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஜனநாயக வழியில் அமைதியான முறையில் கருப்புக் கொடி போராட்டம் நடத்தினர்.


ஆனால் ஆந்திரா காவல்துறையினரோ கருப்புக் கொடி காட்டிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் குறிஞ்சிப்பாடி ஒன்றியத் தலைவர் பாலமுருகன், குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் சுந்தர், கடலூர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சத்திரம் குமார், திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பாளர் சிவா உள்ளிட்ட 25 பேரை மிருகத்தனமாக தாக்கி அவர்களது வாகனங்களை நாசமாக்கி தனித்தனியே சிறையிலடைத்துள்ளது.


இதேபோல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணி தலைவர்களான மல்லை சத்யா, வேளச்சேரி மணிமாறன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் நீலவானத்து நிலவன், வித்யாதரன் எனப் பலரையும் ஆந்திரா காவல்துறை கொடூரமாகத் தாக்கி சிறையிலடைத்துள்ளது. ஆந்திர காவல்துறையினரின் இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.


அத்துடன் இந்த கருப்புக் கொடி சம்பவத்தை பதிவு செய்ய சென்ற திருத்தமணி மாலை முரசு செய்தியாளர் மீது நேற்று திருப்பதியில் ஆந்திரா காவல்துறையினர் கடுமையாக தாக்கியுள்ளனர். இன்று அதிகாலை தமிழ்நாட்டைச் சேர்ந்த சன் டிவி செய்தியாளர் குணசேகரன், தந்தி தொலைக்காட்சி செய்தியாளர் காண்டீபன், புதிய தலைமுறை செய்தியாளர் மணிகண்டன் உட்பட 10க்கும் மேற்பட்டவர்களையும் ஆந்திரா காவல்துறை மிகக் கொடூரமாக தாக்கியும் அவர்களது செய்தி உபகரணங்களை உடைத்தும் பறிமுதல் செய்தும் கைது செய்து அட்டூழியத்தில் ஈடுபட்டிருப்பது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அண்டை மாநிலமான தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் "ராஜபக்சேவின் ஏவல்" படைபோல ஆந்திரா காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக நேற்றும் இன்றும் நடந்து கொண்டிருப்பது கண்டனத்துக்குரியது. 


திருப்பதியில் கைது செய்யப்பட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மறுமலர்ச்சி திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும். அதேபோல் தமிழ்நாட்டு செய்தியாளர்களை உடனே விடுவித்து பறிமுதல் செய்யப்பட்ட உபகரணங்களை ஆந்திரா காவல்துறை திருப்பி ஒப்படைக்க வேண்டும். நாசமாக்கிய செய்தி உபகரணங்களுக்கான உரிய நட்ட ஈட்டை ஆந்திரா அரசு வழங்க வேண்டும்.


இந்தத் தாக்குதலுக்கு ஆந்திரா அரசு பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதுடன் ராஜபக்சேவின் கூலிப்படையாக குண்டர் படையாக நின்று தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை உடனே தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.


அமைதி வழியில் போராடிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளையும் தங்களது கடமையை செய்ய சென்ற தமிழ்நாட்டு செய்தியாளர்களையும் உடனே ஆந்திரா காவல்துறை விடுதலை செய்யாவிட்டால் தமிழ்நாட்டுக்குள் அந்த மாநில பேருந்துகள் எதனையும் அனுமதிக்க மாட்டோம். 


அத்துடன் தமிழ்நாட்டில் இயங்கும் அத்தனை ஆந்திரா அரசுக்கு சொந்தமான நிறுவனங்களையும் முற்றுகையிட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை நடத்துவோம் என்றும் எச்சரிக்கிறேன்.


பண்ருட்டி தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

கரும்பு விவசாயிகளுக்கு ரூ.500 கோடி பாக்கி வைத்துள்ள 27 தனியார் சர்க்கரை ஆலைகளை அரசுடைமையாக்க தமிழக அரசுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் கோரிக்கை

செவ்வாய், 2 டிசம்பர், 2014

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் திரு.தி.வேல்முருகன் அவர்கள் இன்று (02.12.2014) வெளியிட்ட  அறிக்கை:

கரும்பு விவசாயிகளுக்கு ரூ500 கோடி பாக்கி வைத்துள்ள தனியார் சர்க்கரை ஆலைகளை அரசுடைமையாக்குக!!

தமிழகத்தில் 27 தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு ரூ500 கோடியை வழங்காமல் இழுத்தடித்து வருவது கடும் கண்டனத்துக்குரியது.

கரும்பில் இருந்து மொலாசஸ், எரி சாராயம், மின்சாரம், இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இதில் ஒரு டன் கரும்பில் சர்க்கரை ஆலைக்கு ரூ.8 ஆயிரம் கிடைக்க வாய்ப்புள்ளது. 

ஆனால் கரும்பு விவசாயிகளுக்கு தமிழக அரசு தர வேண்டும் என்று நிர்ணயித்த மிகக் குறைந்தபட்ச தொகையான ரூ2,650 என்பதை முழுமையாகக் கூட தரமறுக்கின்றன தனியார் சர்க்கரை ஆலைகள். இதில் ரூ300ஐக் குறைத்து கரும்பு டன்னுக்கு ரூ 2,350 என்ற அளவில்தான் வழங்குகின்றன. இந்த வகையில் விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலைகள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை மட்டும் ரூ500 கோடி.

ஏற்கெனவே சில தனியார் சர்க்கரை ஆலைகள், லாரிகளில், டிராக்டர்களில் கரும்பை ஏற்றிச் சென்று எடை போடும் போது குளறுபடிகள் செய்து விவசாயிகள் வயிற்றில் அடிக்கின்றன. அதாவது ஒரு லாரியில் 10 டன் கரும்பை விவசாயி ஏற்றினால் எடை போடும்போது 2 டன் குறைத்து 8 டன் என்ற அளவில்தான் இருப்பதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டு அதன் மூலமே பல்லாயிரம் கோடிரூபாயை சுருட்டுகின்றன.

இப்படி வஞ்சித்து சம்பாதிக்கும் பல்லாயிரம் கோடி ரூபாயை வேறு தொழில்நிறுவனங்களில் முதலீடு செய்து கொண்டு விவசாயிகளுக்குத் துரோகம் செய்கின்றன தனியார் சர்க்கரை ஆலைகள். அத்துடன் விவசாயிகளிடம் கொள்ளை அடிக்கும் இந்த தனியார் சர்க்கரை ஆலைகள் மத்திய அரசிடம் இருந்து ரூ 6ஆயிரம் கோடி அளவுக்கு வட்டியில்லா கடனைப் பெறுகிறது. இந்த வட்டியில்லா கடன் என்பதே விவசாயிகளுக்கு நிலுவையில்லாமல் தொகை வழங்குவதற்காகத்தான். ஆனால் மத்திய அரசின் கடனையும் பெற்றுக்கு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை தராமல் தனியார் சர்க்கரை ஆலைகள் வைத்திருப்பது சட்டவிரோதமாகும்.

விவசாயிகளிடம் கொள்ளையடித்தும், அரசு நிர்ணயித்த தொகையையில் குறிப்பிட்ட தொகையைத் தந்துவிட்டு நிலுவைத் தொகையை ஆண்டுக் கணக்கில் தராமல் இழுத்தடித்தும் விவசாயிகளை தனியார் சர்க்கரை ஆலைகள் வஞ்சிப்பதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். கரும்பிலிருந்து கிடைக்கும் மூலப்பொருளை கொண்டு தயாரிக்கும் மதுவுக்கு விலை ஏறிக் கொண்டே போகிறது. ஆனால் கரும்பைக் கொடுத்த விவசாயிகளுக்கோ அவர்களுக்குச் சேர வேண்டிய தொகை முழுமையாக கிடைக்காமல் ரூ500 கோடி அளவுக்கு பாக்கி வைத்திருப்பது எந்த விதத்திலும் நியாயமே இல்லை.

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் கரும்புக்கான கொள்முதல் விலை மிகக் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் டன் ரூ.3,200, பஞ்சாபில் ரூ.3,020, அரியானாவில் ரூ.3,100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையிலும் ரூ500 கோடி பாக்கி வைத்து தனியார் சர்க்கர் ஆலைகள் கரும்பு விவசாயிகள் வயிற்றில் அடிப்பது வேதனைக்குரியதாகும். தனியார் சர்க்கரை ஆலைகள் உரிய காலத்தில் நிலுவைத் தொகையை தராததால் விவசாயிகள் வாங்கிய கடனை அடைக்க முடியாமலும் பிள்ளைகளை படிக்க வைக்க முடியாமலும் பெரும் துயரத்துக்குள்ளாகியுள்ளனர்.

தற்போதும் கூட 2014-15 அரவை பருவத்துக்கு முத்தரப்பு கூட்டத்தைக் கூட்டவில்லை. விவசாயிகள் வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்கி வரும், விவசாயிகளுக்கு தர வேண்டிய ரூ500 கோடி அளவு பாக்கி வைத்துள்ள தனியார் சர்க்கரை ஆலைகளை உடனே அரசுடைமையாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். விலைவாசி உயர்வு, கூலி உயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமிழகத்திலும் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ3,500 வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். அத்துடன் கரும்பு விவசாயிகள் கூட்டுறவு மற்றும் பொது சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வெட்டி அனுப்பவும் சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும்.

அதேபோல் விவசாயிகள் கரும்பு வெட்டிய 15 நாட்களுக்குள் ஒட்டுமொத்த நிலுவைத் தொகையை வழங்கிடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

Read more...

மதிமுக பொதுச்செயலர் வைகோ அவர்களுக்கு பகிரங்க கொலைமிரட்டல் விடுத்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலர் எச். ராஜாவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் கடும் கண்டனம்

ஞாயிறு, 30 நவம்பர், 2014

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலர் எச். ராஜாவுக்கு கடும் கண்டனம். தெரிவித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் திரு.தி.வேல்முருகன் அவர்கள் இன்று (30.11.2014) வெளியிட்ட அறிக்கை: 
மதிமுக பொதுச்செயலர் வைகோ அவர்களுக்கு பகிரங்க கொலைமிரட்டல் விடுப்பதா?

தமிழர் நலனுக்காக தமிழர் வாழ்வுரிமைக்காக அரை நூற்றாண்டு காலமாக போராடி வரும் தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலர் வைகோ அவர்களுக்கு ஊடகங்கள் முன்னிலையில் "பிரதமர் மோடியைப் பற்றியோ உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கைப் பற்றியோ தவறாகப் பேசிவிட்டு பாதுகாப்பாக வீட்டுக்குத் திரும்பி விட முடியாது" என்று பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்திருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலர் எச். ராஜாவுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழர் இன விடுதலைக்காகப் போராடுகிற தலைவர்கள் அனைவரையும் எப்போதும் ஒருமையில் விமர்சித்துப் பேசுகிற நாலாந்தர பேச்சாளர்தான் எச். ராஜா என்பதை இந்த தமிழகம் நன்கறியும். தமிழினத்தின் தந்தை பெரியாரை, செருப்பால் அடிப்பேன் என்று திமிராகப் பேசியதும் இதே எச். ராஜாதான்... இரண்டு நாட்களுக்கு முன்பு கூட தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த நாளை தமிழகத்தில் கொண்டாட அனுமதிக்கக் கூடாது என்று தமிழினத் துரோகி சுப்பிரமணியன் சுவாமியுடன் சேர்ந்து கொக்கரித்ததும் இதே எச். ராஜாதான்!

பொதுக்கூட்டமானாலும் ஊடக சந்திப்புகளானாலும் விவாதக் களங்களானாலும் நா கூசாமல் பொய்யையும் புரட்டையும் அநாகரிக வார்த்தைகளையும் கொட்டி தமிழர் சுயமரியாதையை சீண்டுவதையே தன் 'வாழ்நாள்" கொள்கையாகக் கொண்டிருக்கிற எச். ராஜா, மதிமுக பொதுச்செயலர் வைகோ அவர்களைப் பார்த்து "நாவடக்கம்" தேவை என்று பேசியிருப்பது சாத்தான் வேதம் ஓதுவதாகத்தான் இருக்கிறது.

அத்துடன் "வைகோ தமது நாவை அடக்காவிட்டால் அவரது நாக்கை அடக்குவது எப்படி என்பது ஒவ்வொரு பாஜக தொண்டனுக்கும் தெரியும்" என்றும் மிரட்டியிருப்பது வைகோ அவர்கள் மீது வன்முறையை ஏவிவிடும் வகையில் பாஜக தொண்டர்களைத் தூண்டிவிடுவதாகத்தான் இருக்கிறது.

இத்தகைய கொலை மிரட்டல்களுக்கு தமிழர் வாழ்வுரிமைக்குப் போராடுகிற எவரும் அஞ்சிவிடமாட்டோம் என்பதை எச். ராஜா நினைவில் கொள்ள வேண்டும்.  தன்னுடைய இந்த போக்கை எச். ராஜா நிறுத்திக் கொள்ளாவிட்டால் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பினரின் போராட்டங்களை எச். ராஜா எதிர்கொள்ள நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


Read more...

சென்னை திராவிடர் விடுதலை கழகத் தோழர் 'முழக்கம்' உமாபதி மீதுகொலைவெறித் தாக்குதல் நடத்திய காவல்துறைக்குக் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பண்ருட்டி தி. வேல்முருகன் கடும் கண்டனம்!

வெள்ளி, 28 நவம்பர், 2014


சென்னை திராவிடர் விடுதலை கழகத் தோழர் 'முழக்கம்' உமாபதி மீதுகொலைவெறித் தாக்குதல் நடத்திய காவல்துறைக்குக் கடும் கண்டனம்!
 
தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகளை உடனே கைது செய்து பணி நீக்கம் செய்க! என்று தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பண்ருட்டி தி. வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று (28.11.2014)
தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பண்ருட்டி தி. வேல்முருகன் வெளியிட்ட அறிக்கை:

சென்னை மயிலாப்பூரில் தமிழீழ விடுதலைப் போரில் இன்னுயிர் ஈந்த தமிழர்களுக்காக நினைவேந்தல் நினைவு நிகழ்ச்சி நடத்துவதற்கான பதாகைகள் வைத்ததை காவல்துறை அகற்றக் கூடாது என்று கூறிய ஒரே காரணத்துக்காக மட்டுமே திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிர்வாகி தோழர் "முழக்கம்" உமாபதியை மிகக் கொடூரமாக கொலைவெறியுடன் காவல்துறை உதவி ஆய்வாளர்கள் இளையராஜா, கலைச்செல்வி மற்றும் காவலர் வடிவேலு ஆகியோர் தாக்குதல் நடத்தியிருப்பது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

அமைதியான வழியில்- அறவழியில் தமிழக காவல்துறை எந்த ஒரு தடை உத்தரவையும் பிறப்பிக்காத நிலையில் இத்தகைய நிகழ்வுகளுக்கு உச்சநீதிமன்றமே அனுமதித்திருக்கும் நிலையில், தமிழர்கள் வாழும் உலகம் எங்கும் நடத்துகிற தமிழினத்துக்கான நினைவேந்தல் நிகழ்வுக்கான பதாகை வைத்ததை அகற்றுவதை எதிர்த்த ஒரே காரணத்துக்காக இவ்வளவு கொடூரமான கொலை வெறித்தாக்குதலை தமிழக காவல்துறையினர் தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னையிலே நடத்தியிருப்பது தமிழ்ச் சமூகத்தால் மன்னிக்கவே முடியாதவே கடுமையான கண்டத்துக்குரியது.

தமிழர் வாழ்வுரிமைக்காக போராடுகிற தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பினர் மீது இதேபோல் கத்தி திரைப்பட எதிர்ப்பு நிகழ்வுகளிலும் சென்னை மாநகர காவல்துறை மிகக் கொடூரமாக ஈவிரக்கமற்று கொலைவெறியுடன் நடந்து கொண்டது. அப்போது தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்களை கொலைவெறியுடன் தாக்குதல் நடத்தி ஒரு வாக்குமூலத்தை வாங்கி அப்பாவி மாணவர்கள், அவர்தம் குடும்பத்தினரை சித்திரவதை செய்து சிறையில் அடைத்தது. இதை தமிழக அரசின் கவனத்துக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்துக்கும் அன்று இதை தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பும் கொண்டுவந்தது. ஆனாலும் எந்த ஒரு காவல்துறை அதிகாரி மீதும் நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த துணிச்சல் காரணமாக அப்போதே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தற்போது, ஒன்றுமில்லாத காரணத்துக்காக இன உணர்வாளர் என்பதற்காக மட்டுமே திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் "முழக்கம்" உமாபதியை கொலைவெறியுடன் தாக்கியிருப்பது நெஞ்சை பதற வைக்கிறது.. சமூக வலைதளங்களில் அந்த தோழர் தாக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களில் வெளியாகியிருப்பதைக் கண்டு உலகத் தமிழர்கள் பேரதிர்ச்சியும் பெருங்கொந்தளிப்பிலுமாக இருக்கின்றனர்.

முந்தைய திமுக அரசு தமிழின உணர்வாளர்களை கொடூரமாக ஒடுக்கிய அதே பாணியை இன்றைய அதிமுக அரசும் கடைபிடிக்கிறதா? என்ற கேள்வி தமிழ்ச் சமூகத்தில் எழுந்திருக்கிறது. இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தங்களது கவனத்துக்கு நான் அறிக்கை வாயிலாக கொண்டு வந்தும் இன்னமும் அநியாயமாக கொடூரமாக தோழர் "முழக்கம்" உமாபதியை தாக்கிய காவல்துறை அதிகாரிகள் மீது எந்த ஒரு நடவடிக்கையையும் தமிழக அரசு மேற்கொள்ளாதது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

இந்த கொடூர தாக்குதல் குறித்து செய்தி வெளியாகிய உடனேயே தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளை தமிழக அரசு பணி இடைநீக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டும். அப்படி தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாததும் அவர்களை உடனே பணி இடை நீக்கம் செய்யாததும் கைது செய்யாததும் மிகவும் வருத்தமும் உலகத் தமிழர்களிடத்தில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய நடவடிக்கைகளின் மூலமே உலகத் தமிழர்களுக்கு ஆதரவாக, அனுசரணையாக அரசாக தமிழக அரசு இருக்கிறது என்ற ஆறுதலை ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்துக்கும் தர முடியும் என்பதையும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்துக்கு கொண்டுவருகிறேன்.

குற்றம் ஏதும் புரியாத திராவிடர் விடுதலை கழகத் தோழர் "முழக்கம்" உமாபதியை மிகக் கொடூரமாக எழுந்தே நடமாட முடியாத அளவுக்கு குரூர கொலைவெறி மனப்பான்மையுடன் தாக்கியிருக்கும் உதவி ஆய்வாளர்கள் இளையராஜா, கலைச்செல்வி மற்றும் காவலர் வடிவேலு ஆகியோர் மீது தமிழக அரசு உடனே கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து அவர்களை பணி இடைநீக்கம் செய்வதோடு கைது செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் காவல்துறையைக் கண்டித்து தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் மிகப் பெரிய அளவிலான கண்டனப் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
 
 


 
 தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் பிறந்த நாள் மற்றும் தமிழீழத் தேசிய மாவீரர் நாளையொட்டி வைக்கப்பட்டிருந்த பதாகைகளை அகற்றியதை எதிர்த்ததால் காவல்துறையினரின் கொலைவெறித் தாக்குதலுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் சென்னை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் "முழக்கம்" உமாபதியை தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செய்தித் தொடர்பாளர் வன்னியரசு ஆகியோர் மருத்துவமனையில் இன்று (28.11.2014) சந்தித்தனர். (உடன் திராவிடர் விடுதலைக் கழக மூத்த நிர்வாகி தபசி குமரன்)

Read more...

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP