அ.தி.மு.க.வுடன் 2016 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கூட்டணி தொடருமா? - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் பேட்டி

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் நெய்வேலியில் ’தி இந்து’ வுக்கு அளித்த சிறப்புப் பேட்டி:

கேள்வி: கடந்த காலங்களில் தி.மு.க.வுடன் நெருக்கமாக இருந்து வந்தீர்கள், திடீரென அ.தி.மு.க.வை ஆதரிக்கின்றீர்களே?

பதில்: ஈழத்தில் தமிழர்களுக்கும், தமிழினத்திற்கும் எதிராக நடந்த படுபாதக செயல்களை வேடிக்கை பார்த்தது மட்டுமின்றி, அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்த மத்திய காங்கிரஸ் அரசுக்கும் அதனுடன் இருந்த தி.மு.க.விற்கும் பாடம் கற்பிக்கவேண்டும். எங்களின் கொள்கையான தனித் தமிழ் ஈழமே இலங்கைத் தமிழர்களின் இன்னல்களுக்கு ஒற்றைத் தீர்வாக அமையும் என்பதை உள்வாங்கி, வாய்ப்பு கிடைத்தால் அதை நிறைவேற்றித் தருவேன் என கூறிய அ.தி.மு.க.வை ஆதரிக்க முடிவெடுத்தோம். சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரை விடுதலை செய்யவேண்டும் என்ற சட்டமன்றத் தீர்மானமும் எங்களை அ.தி.மு.க.பக்கம் இழுத்தது.

கேள்வி: வரும் காலங்களிலும் அ.தி.மு.க.வுடனான கூட்டணி தொடருமா?

பதில்: ஈழத்தமிழர் பிரச்சினை, காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு, கெயில் நிறுவன குழாய் பதிப்பு ஆகியவற்றுக்கு எதிராக அ.தி.மு.க தற்போது என்ன நிலையில் உள்ளதோ, அந்த நிலை வருங்காலத்திலும் தொடர்ந்தால், நிச்சயமாக நாங்களும் வரு சட்டமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணியைத் தொடருவோம்.

கேள்வி: 2016 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி போட்டியிடுமா?

பதில்: கண்டிப்பாக போட்டியிடுவோம்.

கேள்வி: இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை?

பதில்: கட்சி தொடங்கி 3 ஆண்டுகள்தான் ஆகிறது. தமிழ் சமூகத்துக்காக தமிழக மக்களின் நலன்களுக்காக குரல் கொடுக்கிற உத்தரவாதம் தந்து, தேர்தல் களத்தில் வாக்கு கேட்கிற அரசியல் கட்சியை ஆதரிக்க வேண்டும் என்கிற அடிப்படையில் நாங்கள் இந்தத் தேர்தலில் அ.தி.மு.க.வை ஆதரிக்கும் முடிவை எடுத்தோம்.

கேள்வி: எதிரும் புதிருமாய் சீறிக்கொண்டிருந்த பா.ம.க.வும் தே.மு.தி.க.வும் ஓரணியில் இணைந்திருக்கிறதே?

பதில்: பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் இணைந்திருப்பது என்பது சந்தர்ப்பவாத கூட்டணி. கூட்டணி அமையும்வரை விஜயகாந்தை தரக்குறைவாகப் பேசிவந்த ராமதாஸை, தே.மு.தி.கவினர் எப்படி ஏற்றுக்கொள்வர்? இது ராமதாஸின் சுயநல, குடும்ப உறுப்பினர்களை ஆட்சி அதிகாரத்தில் கோலோச்ச வைக்க வேண்டும் என்ற நோக்குடன் ஏற்படுத்தப்பட்ட கூட்டணி. இரு கட்சிகள் இடையே கூட்டணி என்ற வார்த்தையை எழுதிப் படிக்க முடியுமே தவிர, அவை நடைமுறையில் சாத்தியமில்லை. இரு கட்சித் தொண்டர்களும் உணர்வுபூர்வமாக தேர்தல் களப்பணியாற்ற முடியாது என்பது இரு கட்சியினருக்கும் தெரிந்த ஒன்றுதான். சிங்கங்கள் ஒருபோதும் சிறு நரியிடம் மண்டியிடாது எனக் கூறிவந்த ராமதாஸ் 8 சீட்டுகளைப் பெற்றுக்கொண்டு தற்போது எப்படி விஜயகாந்திடம் மண்டியிட்டார்?

கேள்வி: தமிழகத்தில் பா.ஜ.க.கூட்டணி கட்சிகளிடையே இணக்கமான சூழல் உள்ளதா?

பதில்: முரண்பட்ட கூட்டணி பா.ஜ.க.கூட்டணி, பா.ம.க.வாக்குகள் தே.மு.தி.க.விற்கு செல்லாது, அதே போன்று தே.மு.தி.க.வாக்குகள் பா.ம.க.விற்கு செல்லாது என்பதற்கு விழுப்புரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கேப்டன் வாழ்க கோஷமிடாமல் இருந்த பா.ம.க. தொண்டன் கண்ணதாசன் என்பவரை, தே.மு.திக. தொண்டர்கள் அடித்தே கொலை செய்திருக்கிறார்கள் என்பதே உதாரணம். இணக்கமே இல்லாத நிலையில் இவர்கள் எப்படி வெற்றிபெற முடியும்?.

கேள்வி: தேர்தலுக்குப் பிறகு பா.ம.க.நிலை என்னவாகும்?


பதில்: ராமதாஸைப் பொறுத்தவரை வன்னியர் என்ற போர்வையில், வன்னியர்களை பலிகடாவாக்கி, தானும், தனது குடும்பமும் வாழ வேண்டும் என்று நினைப்பாரே தவிர, வன்னியர்களின் நலன் சார்ந்து எதையும் செய்யமாட்டார். தற்போது நடைபெறுகிற தேர்தலில் தனது மகன் போட்டியிடும் தருமபுரி தொகுதியில் தான் மட்டுமின்றி, மனைவி, மகள்கள், மருமகளுடன் சென்று வாக்காளர்களிடம் மடிப்பிச்சை கேட்கின்றனர். அதேநேரத்தில் தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் இதர வன்னிய வேட்பாளர்களின் தொகுதிகளில் பிரச்சாரம் செய்யாதது ஏன்?

அதேபோன்று தனது சேலம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் ஏற்கெனவே பா.ம.க.வேட்பாளர்களை அறிவித்துவிட்டு, பின்னர் அத்தொகுதிகளை தே.மு.தி.க.விடம் விட்டுக்கொடுத்தார். ஆனால், புதுச்சேரியில் போட்டியிடும் தனது மச்சான் மகன் அனந்தராமனை விட்டுக்கொடுக்க முன் வரவில்லையே. இதிலிருந்தே புரியவில்லையா, ராமதாஸின் சுயநலம் எந்த அளவுக்கு உள்ளது என்று எனவே தேர்தலுக்குபின், பா.ம.க.வில் எஞ்சி இருப்பவர்களும் எங்களிடம் வந்துவிடுவார்கள்.

Read more...

கடலூர் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவனை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் பிரசாரம்

ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

கடலூர் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவன் அவர்களை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் அருகில் 19.04.2014 (சனிக்கிழமை) அன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார்.

பிரசார கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலர் கண்ணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர்கள் பஞ்சமூர்த்தி, சின்னதுரை முன்னிலை வகித்தனர். அமைச்சர் எம்.சி.சம்பத், சட்ட மன்ற உறுபினர்கள் சொரத்தூர் ராஜேந்திரன், எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன், வேட்பாளர் எ.அருண்மொழித்தேவன் ஆகியோர் பேசினர்.

தேர்தல் பிரசார கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் பேசியது:

தேசிய கட்சிகளுடனும், திராவிட கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்று கூறி வந்த ராமதாஸ் தேசிய கட்சியுடன்தான் கூட்டணி வைத்துள்ளார். தனிதமிழ் ஈழம், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும், மீனவர் பிரச்னை, கச்சத் தீவை மீட்பது, தனி ஈழம் என்று சொன்னார் வைகோ. ஆனால் இன்று அவர் கூட்டணி சேர்ந்துள்ள பாஜகவின் தேர்தல் அறிக்கையில் அவை எதுவும் இடம்பெறவில்லை. ஜெயலலிதாவை வன்னியர்களுக்கு எதிரி எனக் கூறும் ராமதாஸ், இதுவரை ராமசாமி படையாச்சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுண்டா. ஆனால் ராமசாமி படையாச்சிக்கு சென்னையில் சிலை எழுப்பியது ஜெயலலிதா என்பதை ராமதாஸ் மறந்துவிட்டுப் பேசுகிறார்.

தமிழ் சமுதாயத்தின் விடியலுக்காக களம் வந்தவர் முதல்வர் ஜெயலலிதா. எனவேதான் நான் அவரை ஆதரிக்கிறேன். இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானங்களை துணிச்சலுடன் கொண்டுவந்தார். முதல்வர் ஜெயலலிதா ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., வெற்றி பெற தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் பாடுபடவேண்டும்.

 

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

கடலூர் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ஆ.அருண்மொழிதேவன் அவர்களை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நெய்வேலியில் தேர்தல் பிரசார கூட்டம்

வெள்ளி, 18 ஏப்ரல், 2014

கடலூர் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ஆ.அருண்மொழிதேவன் அவர்களை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் நடை பெற உள்ளது.

தேர்தல் பிரசார கூட்டத்தில் வேட்பாளரை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் வாக்கு சேகரிக்கிறார்.

நாள் : 19.04.2014 (சனிக்கிழமை)
நேரம் : மாலை 6 மணி அளவில்
இடம் : நெய்வேலி மத்திய பேருந்து நிலையம்
 
 

Read more...

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.ராஜேந்திரனை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் பிரசாரம்

புதன், 16 ஏப்ரல், 2014

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.ராஜேந்திரனை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் உளுந்தூர்பேட்டையில் 15.04.2014 (செவ்வாய்க்கிழமை) அன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார்.

பிரசார கூட்டத்தில் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் எம்.ஆனந்தன், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் இரா.குமரகுரு, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வ.ச.சுரேஷ்குமார், மாவட்டசெயலாளர் உளுந்தூர்பேட்டை ஞா.ராஜேஷ், ஒன்றிய செயலாளர் திருநாவலுர் க.கோபி, ஒன்றிய செயலாளர்கள் ஜெகதீஷ், வீ.மோகன், திருவண்ணைநல்லுர் ஒன்றியசெயலாளர் ராம்பிரகாஷ், மாவட்ட நிர்வாகிகள் ஞா.சந்தோஷ், பிரசன்னா, பெஸ்ட் கசாலி திருநாவலுர் கோபால், ஏ.கோட்டை ஆனந்து, கிழக்கு மருதூர் ரகு, ஒன்றிய நிர்வாகிகள் கிளாப்பாளையம் மணி, களமருதூர் முஸ்தபா, பள்ளியதாங்கல் ரவி, க.நெமிலி ராஜீவ்காந்தி, காத்தவராயன், கிள்ளனுர் ஆனந்து, சின்னா நைனாக்குப்பம் முருகன், அரளி மகேந்திரன், ஆதி அய்யனார், நகர நிர்வாகிகள் முரளி, ஷம்மு லட்சுமணன், கா.வினோத் கமலக்கண்னன், சந்துருஉள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தேர்தல் பிரசார கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் பேசியது:

தேசியக் கட்சி மற்றும் திராவிட கட்சியுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறிவந்தார். ஆனால் தற்போது தேசிய கட்சியான பாஜக, திராவிட கட்சிகளான மதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் கொள்கையில்லாமல் கூட்டணி அமைத்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவராக பதவி உயர்வு அளித்த மக்களின் குறைகளை சட்டப்பேரவைக்குச் சென்று முதல்வரிடம் எடுத்துரைத்து தேவையான உதவிகளை பெற்றுத் தர முன்வராதவர் விஜயகாந்த். அவரது பொறியியல் கல்லூரியில் அதிகத் தொகைக்கு சீட்களை விற்பனை செய்யும் அவர், ஊழலை ஒழிக்க பாடுபடுவதாக கூறுகிறார்.

ஈழத்தமிழர்களை ராஜபக்சே அரசு கொன்று குவித்தபோது வேடிக்கை பார்த்தவர் கருணாநிதி. ஆனால், இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றியவர் ஜெயலலிதா. கச்சத்தீவை தாரைவார்த்தவர் கருணாநிதி. ஆனால் அதை மீட்பேன் என்று கூறியவர் ஜெயலலிதா. தமது குழந்தைகளுக்காக குடும்ப ஆட்சி செய்தவர் கருணாநிதி. ஆனால் மக்களையே குடும்பமாக நினைத்து ஆட்சி செய்கிறவர் ஜெயலலிதா.

 

Read more...

நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் டாக்டர். கே.கோபாலை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் பிரசாரம்

புதன், 9 ஏப்ரல், 2014


நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் டாக்டர். கே.கோபால் அவர்களை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் நாகை மாவட்டம், கீழ்வேளூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார்.

இந்த தேர்தல் பிரசார கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆர். ஜீவானந்தம் தலைமை வகித்தார். தமிழக அரசின் முன்னாள் புதுதில்லி சிறப்புப் பிரதிநிதி அ. அசோகன், குடிசை மாற்று வாரியத் தலைவர் தங்கமுத்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் கொற்றவமூர்த்தி, நாகை தொகுதி அ.தி.மு.க செயலாளர் ஆசைமணி மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

தேர்தல் பிரசார கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் பேசியது:

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்ட போது, இலங்கை அரசுக்கு உறுதுணையாக இருந்தது மத்திய காங்கிரஸ் அரசு. இதற்கு காங்கிரஸ் கட்சிக்குத் துணையாக நின்றது தி.மு.க. இந்த இரண்டு கட்சிகளும் இலங்கைத் தமிழர்களுக்கு இழைத்த துரோகத்தை தமிழர்கள் மறக்கமாட்டார்கள்.

பா.ம.க.வுக்குக் கொள்கை, லட்சியம் ஏதும் கிடையாது. வைகோவும் தனது கொள்கைகளில் உறுதி இல்லாதவராகவே உள்ளார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது மனைவி, மைத்துனர் நலனில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இதனால், அவரது கட்சியிலிருந்த பலர் அதிமுகவைத் தேடி வந்து கொண்டுள்ளனர். இதன்மூலம், கொள்கை இல்லாதவர்களின் கூட்டணியாக உள்ளது தேசிய ஜனநாயக கூட்டணி.

தே.மு.தி.க.வுக்கும், பா.மக.வுக்கும் அரசியல் அங்கீகாரம் பெற்றுத் தந்தவர் ஜெயலலிதாதான். இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றி, இலங்கைத் தமிழர்களின் நலனில் உள்ள அக்கரையைத் துணிச்சலுடன் வெளிப்படுத்தியவர் முதல்வர் ஜெயலலிதா மட்டுமே. தமிழர்களுக்கு துரோகம் இழைத்த கட்சிகளையும், கொள்கை இல்லாத கட்சிகளையும் புறக்கணித்து, பொதுமக்கள் அனைவரும் அ.தி.மு.க.வுக்கு அமோக அதரவளித்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றிக் கிடைக்கச் செய்ய வேண்டும்.

Read more...

தமிழகத்தில் பா.ஜ.க, பா.ம.க, தே.மு.தி.க, ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிப் பெறாது - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் பேட்டி

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் திருவாரூரில் 07.04.2014 (திங்கள்கிழமை) அளித்த பேட்டி:

தமிழகத்தில் பா.ஜ.க, பா.ம.க, தே.மு.தி.க, ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிப் பெறாது. பா.ம.க நிறுவனர் ராமதாஸ் சுயநலத்துக்காக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார். தமிழீழத்தை ஆதரிக்காத பா.ஜ.க.வுடன் வைகோ கூட்டணி சேர்ந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழக மக்களின் எந்த உரிமைக்காகவும் போராடாத விஜயகாந்துக்கு தமிழக மக்களிடம் வாக்கு கேட்கும் உரிமை இல்லை. சமுதாயத்தை முன்னிறுத்தி தமிழ் இனத்துக்கு துரோகம் இழைத்த பா.ம.கவுடன் இணையும் வாய்ப்பு இல்லை.

தமிழக மக்கள் மட்டுமன்றி, இலங்கைத் தமிழர்களின் கனவு நிறைவேறவும், காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாற்றில் தமிழகத்துக்கான உரிமையை சட்டப் போராட்டம் மூலம் நிலைநாட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பிரதமராக வேண்டும். ஜெயலலிதா அவர்களின் கரத்தை வலுப்படுத்த தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வெற்றிப் பெற தமிழக வாழ்வுரிமைக் கட்சி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.

பேட்டியின்போது, கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் கொற்றவமூர்த்தி, மாநில துணைப் பொதுச் செயலர் தஞ்சை தமிழ்நேசன், திருவாரூர் மாவட்டச் செயலர் முத்துராமலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.

Read more...

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகனை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் பிரசாரம்

திங்கள், 7 ஏப்ரல், 2014

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகன் அவர்களை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் கபிஸ்தலத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார்.

இந்த கூட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் சில்லத்தூர் ஆர்.பி. தமிழ்நேசன் தலைமை வகித்தார். மாநில இளைஞரணி துணை செயலாளர் முகமது ஆரிப் வரவேற்றார். வடக்கு மாவட்ட செயலாளர் செல்வம், வடக்கு மாவட்ட தலைவர் முருகன், வடக்கு மாவட்ட அமைப்பாளர் தியாக. அழகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தேர்தல் பிரசார கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் பேசியது:

உலகத்தில் வாழும் தமிழர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட வேண்டும். அவர்களின் உரிமைகளை நாம் வென்றெடுக்க வேண்டும். தமிழர்களின் உரிமைகள் பறிபோய் கொண்டு இருக்கிறது. இதனை நாம் காப்பாற்ற வேண்டும். தமிழர்களின் தன்மானம் காக்கப்பட வேண்டும்.

கச்சத்தீவை மீட்டெடுக்க, காவிரி பிரச்சினை, முல்லை பெரியாறு பிரச்சினை, ஈழப்பிரச்சினைக்கு முடிவுகட்ட ஒரே வழி தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆதரவுடன் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் நிறுத்தப்பட்டு உள்ள அ.தி.மு.க. வேட்பாளர்கள் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெற செய்து, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நாம் இந்தியாவின் பிரதமராக்க வேண்டும். அப்போது தான் இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் ஒரு நிரத்தர தீர்வு கிடைக்கும்.

காங்கிரஸ், பாஜ.க, தி.மு.க, தே.மு.தி.க, பா.ம.க, ம.தி.மு.க, உள்ளிட்ட கட்சிகள் மக்களை பற்றி எந்த நேரத்திலும் கவலைப்படாத கட்சிகள். இவைகள் தேர்தல் நேரத்தில் மட்டும் பணத்திற்காகவும், பதவிக்காகவும் சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்து கொள்வார்கள். ஆனால் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் கட்டுப்பாட்டோது கட்சியை வழி நடத்தி வரும் அ.தி.மு.க. கட்சி தமிழர்களையும், தமிழனின் மானத்தையும் காப்பாற்றும் கட்சியாகும்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினார். ஆனால் அதனை காங்கிரஸ் கட்சி கண்டுகொள்ளவில்லை. இலங்கை பிரச்சினைக்காக அவர் உண்ணாவிரதம் இருந்தார். கொடியவன் ராஜபக்சேவை சர்வதேச குற்றவாளி என அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்.

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட செய்தவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா. ஆனால் காவேரி பிரச்சினையில் என்ன செய்தார். கருணாநிதி என்று நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்து கொடுத்தது காங்கிரஸ் கட்சியும், தி.மு.க. தலைவர் கருணாநிதியும் தான்.

மீத்தேன் எரிவாயு திட்டத்தை கொண்டு வந்தது டி.ஆர்.பாலுவும், மு.க.ஸ்டாலினும்தான். இவர்கள் 2 பேரும் தான் இதற்கு ஒப்பந்தம் போட்டனர். தற்போது மறுக்கின்றனர். மீத்தேன் திட்டத்தால் விவசாயம் பாதிக்கப்படும் என்று கருதி விவசாயிகளை காப்பாற்ற எதிர்த்து போராடி வருபவர் ஜெயலலிதா.

தூக்கு தண்டனை அறிவித்த சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்தவர் ஜெயலலிதா. இவரால் மட்டும் தான் இந்திய நாட்டையும், உலகத்தில் உள்ள தமிழர்களையும், நம் தமிழ் இனத்தையும் காப்பாற்ற முடியும்.

எனவே வருகிற நாடாளு மன்ற தேர்தலில் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்டபாளர் ஆர்.கே. பாரதிமோகனை அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும். 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பாரத பிரதமராக வேண்டும்.

Read more...

கடலூர், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர்கள் வெற்றிக்கு தீவிர தேர்தல் பிரசாரம் செய்வது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

சனி, 5 ஏப்ரல், 2014

கடலூர், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர்கள் வெற்றிக்கு களப்பணியாற்றுவது குறித்தும், தீவிர தேர்தல் பிரசாரம் செய்வது குறித்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பதில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவரின் இல்லத்தில் நேற்று 04.03.2014 (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகள் அவர்கள் தலைமை தாங்கினார். அமைச்சர் எம்.சி.சம்பத், தி.திருமால்வளவன், கனல் உ.கண்ணன், புதுவை ஸ்ரீதர், குமராட்சி தமிழ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.










Read more...

ஆரணி நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் வெ.ஏழுமலையை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் பிரசாரம்

வெள்ளி, 4 ஏப்ரல், 2014

ஆரணி நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் சேவல் வெ.ஏழுமலை அவர்களுக்கு ஆதரவாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் வந்தவாசி தேரடியில் 03.04.2014 (வியாழக்கிழமை) மாலை நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார். 
 
பிரசாரக் கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட அமைப்பாளர் வந்தவாசி. சுரேஷ், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் வே.குணசீலன், தொகுதி பொறுப்பாளர்கள் தாடி மா.ராசு, டி.சகுந்தலா, தலைமை செயற்குழு உறுப்பினர் ஈ.பொன்னுசாமி, எம்ஜிஆர் மன்ற மாவட்டத் தலைவர் ஜெ.பாலு, தொகுதிச் செயலாளர் கே.பாஸ்கர் ரெட்டியார், நகரச் செயலாளர் எம்.பாஷா, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தேர்தல் பிரசார கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் பேசியது:

ஈழத் தமிழர்களை கொன்ற இலங்கை அதிபருக்கு ஆதரவு அளித்தது மன்மோகன்சிங் மற்றும் சோனியா காந்தி. இவர்கள் இருவரையும் ஆதரவளித்து தூக்கி நிறுத்தியது தி.மு.க.தான். அப்போது மத்திய அரசில் சுகாதாரத் துறை அமைச்சர் பதவி வகித்த அன்புமணி ராமதாஸ் கூட பதவியை தூக்கி எறிய முன்வரவில்லை. திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று டாக்டர் ராமதாஸ் கூறிவந்தார். ஆனால் இப்போதோ மதிமுக, தேமுதிக கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளார். விஜயகாந்த்தை அவதூறாக பேசிவிட்டு இப்போது அவருடன் கூட்டணி வைத்துள்ளார். இதன்மூலம் முரண்பாடுகளின் மொத்த உருவமாக டாக்டர் ராமதாஸ் திகழ்கிறார் என்றார்.

உலகில் உள்ள தமிழர்களின் நம்பிக்கை ஒளியாக ஜெயலலிதா திகழ்கிறார். இத்தாலியிலிருந்து வந்த சோனியா காந்தி இந்திய பிரதமரையும், குடியரசுத் தலைவரையும் முடிவு செய்யும்போது 7 கோடி தமிழர்களின் தலைவியாக உள்ள ஜெயலலிதா ஏன் பிரதமராக முடியாது?.
 







 

Read more...

கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் மருத்துவர் கே.காமராஜை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் பிரசாரம்

புதன், 2 ஏப்ரல், 2014

கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் மருத்துவர் கே.காமராஜ் அவர்களுக்கு ஆதரவாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் 01.04.2014 (திங்கட்கிழமை) அன்று சின்னசேலம் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார். பிரசார கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வை.காவேரி, மாநில துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் வ.ச.சுரேஷ்குமார், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் ராமசந்திரன், உளுந்துர்பேட்டை ராஜேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

































Read more...

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP