தமிழ்க் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் பெண்களை கேவலமாக சித்தரிக்கும் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டித்து பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டன உரை

சனி, 29 டிசம்பர், 2012


பெண்களை ஆபாசமாகவும், கேவலமாகவும் சித்தரித்து திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகளைத் தூண்டி அதன் மூலம் தமிழ் கலாச்சாரத்தை சீர் அழிக்கும் செயலைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மகளிர் பாசறை சார்பில் மாபெரும் கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டன உரை ஆற்ற உள்ளார்.


இடம்: கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில்.


நாள்: 31/12/2012, திங்கட்கிழமை.

நேரம் : காலை 9.00 மணி

Read more...

ஜூனியர் விகடனில் தி.வேல்முருகன் அவர்களின் சிறப்பு பேட்டி

புதன், 26 டிசம்பர், 2012

ஜூனியர் விகடனில், செய்தியும் சிந்தனையும் நிகழ்ச்சியில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் 26-12-2012 முதல் 9-1-2013 வரை பேசுகிறார்.




தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் :  044 - 66802919



Read more...

கம்மாபுரம் ஒன்றியத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியேற்று விழா - பண்ருட்டி தி.வேல்முருகன் கலந்து கொண்டார்

திங்கள், 24 டிசம்பர், 2012

கடலூர் மாவட்டம் கம்மாபுரம் ஒன்றியத்தில் 23/12/2012 அன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது.  இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் இளம்புயல் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் கம்மாபுரம், முதனை உள்ளிட்ட  இடங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியினை  ஏற்றி வைத்தார். 









Read more...

இலங்கையில் தமிழர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை ஐக்கிய நாடுகள் படையை தமிழர் தாயகப் பிரதேசங்களில் நிறுத்த தி.வேல்முருகன் கோரிக்கை

திங்கள், 10 டிசம்பர், 2012




இலங்கையில் தமிழர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும்வரை ஐக்கிய நாடுகள் படையை தமிழர் தாயகப் பிரதேசங்களில் நிறுத்த வேண்டும் - தி.வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

யாழில் தொடரும் அடக்குமுறை! ஐ.நா. படையை நிறுத்துக!

           இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர்கள் மீதான சிங்களப் பேரினவாத அரசின் கொடுந்தாக்குதல்களும் சட்டவிரோத கைது நடவடிக்கைகளும் தொடர் கதையாகி வருகின்றன. கடந்த நவம்பர் 27-ந் தேதியன்று மாவீரர் நாளை கடைபிடித்தார்கள் என்ற ஒரே குற்றச்சாட்டுக்காக மாணவர்களை வேட்டையாடி வருகிறது சிங்களப் பேரினவாத அரசு. வவுனியாவில் நேற்று கூட 2 மாணவர்களை நள்ளிரவில் கைது செய்து இருக்கிறது இதுவரை மொத்தம் 10 மாணவர்களை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கிறது. மாணவர்களை மட்டுமல்ல யாழ்ப்பாணத்தில் 17 அப்பாவித் தமிழர்களை பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் திடீரென கைது செய்திருக்கிறது சிங்களப் பேரினவாத அரசு.

            கைது செய்யப்படுகிறவர்களின் கதி என்ன? அவர்கள் எந்த நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தபப்ட்டனர்? எந்த சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கின்றனர் என்ற விவரத்த்தைக் கூட இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்சேவின் அரசாங்கம் தெரிவிக்க மறுத்து வருகிறது. தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் கொடுமையை கேட்டறிய வந்த ஐ.நா. பிரதிநிதிகள் குழுவினரிடம் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காணும்வரை தமிழர் பிரதேசத்தில் ஐ.நா. படையை நிறுத்த வேண்டும் என்று தமிழர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர். யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரோ இதுவரை வாய்மூடி மெளனியாக இருந்து வருகிறார்.

        இலங்கையில் மாணவர்கள் மீதும் அப்பாவித் தமிழர்கள் மீதும் சிங்களத்தின் தொடரும் கோரக்கொடுமையை மத்திய அரசு தட்டிக் கேட்க வேண்டும்! ஈழத் தமிழர்கள் கோருவது போல் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணும்வரை ஐக்கிய நாடுகள் படையை தமிழர் தாயகப் பிரதேசங்களில் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். ஈழத் தமிழர்களின் இந்த நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக சாதி, மத, கட்சி எல்லைகளைக் கடந்து தமிழர் சக்திகள் ஓரணியில் ஒன்று திரளவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உரிமையோடு அழைக்கிறது!

Read more...

10 இளைஞர்கள் புலிகளாக மாறுகிறார்களோ அன்றுதான் தமிழ் ஈழ விடுதலை சாத்தியம் - பண்ருட்டி தி.வேல்முருகன்

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

 விகடன் கட்டுரை

  மாவீரர் தினமான நவம்பர் 27-ம் தேதி, சேலத்திலும் புதுச்சேரியிலும் எழுச்சியை நடத்தி இருக்​கிறார்கள், திராவிடர் விடுதலைக் கழகத்தினர்! தனி ஈழம் வேண்டி தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட கரும் புலிகள், வான் புலிகள், கடற் புலிகள் மற்றும் மூத்த தளபதிகள் என 120 பேரின் அரிய புகைப்படங்கள், புதுச்சேரி, திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் அரியாங்குப்பம் மில்லர் அரங்க வளாகத்தில், வைக்கப்பட்டு இருந்தன. வீர மரணம் அடைந்த புலிகளுக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் ஆகியோர், தியாக தீபத்தை ஏற்றி வீர வணக்கம் செலுத்தினர்.

 முதலில் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன்,
           ''உலகில் வாழும் தமிழர்களின் முகவரியான நம் தேசியத் தலைவரின் கனவையும் இலட்சியத்​தையும் சிங்களப் பேரின​வாத அரசு அழித்ததை, இளைய தலைமுறையினர் மறந்துவிடக் கூடாது. இது ஒரு சம்பிரதாய நிகழ்வோ, சடங்கோ அல்ல. 10 மைல் தொலைவில் நடந்த இனப் படுகொலையைத் தடுப்பதற்கு ஆறரைக் கோடி தமிழர்களும் தவறி விட்டோம்.  இன அழிப்புகளை, இனப் படுகொலைகளை, கற்பழிப்பு​களை, கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், வீடுகள், மீன்பிடி வலைகள் என்று அந்த மக்களின் வாழ்வாதாரத்தையே அழித்து வரும் சிங்களவாதிகளின் அட்டூழியங்களை இந்த நாட்களில் இளைய தலை​முறைக்கு எடுத்துச்சொல்ல வேண்டும். என்றைக்கு இந்த 10 கோடி தமிழர்​களில் இருந்து 10 இளைஞர்கள் புலிகளாக மாறுகிறார்களோ அன்றுதான் தமிழ் ஈழ விடுதலை சாத்தியம்'' என்று பொங்கினார்.

 
திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி,

''தமிழர்களுக்கு மட்டுமே சொந்த நாடாக இருந்த இலங்கைத் தீவில் வந்தேறியவர்கள் சிங்களவர்கள். தமிழர் தயவால் வாழ்ந்தவர்கள். அவர்கள் தமிழர்களை அடிமைப்படுத்திய வரலாறு, நீண்ட நெடியது. உலகில் பல விடுதலை இயக்கங்கள் இருந்தாலும், அவர்கள் அனைவரும் கெரில்லா போர் முறையைத்தான் நடத்தினர். ஆனால், விடுதலைப் புலிகள் இயக்கமானது, மரபுவழிப் போர் நடத்தும் அளவுக்குத் தனி இராணுவத்தையே வைத்து இருந்தனர். அது, தமிழனுக்கான தனிப் பெருமை. 1989-ல் நடந்த போரில் போராளி சங்கர் வீரமரணம் அடைந்த நாளையே, 'மாவீரர் நாள்’ என்று அறிவித்தார் பிரபாகரன்.

       இந்த நாளில் நான் பெருமையாகக் கருதுவது, முதல் மாவீரர் நாளின்போது தலைவர் என்னை அழைத்து இருந்ததைத்தான். அது, இந்திய அமைதிப் படை இருந்த காலம். தலைவரைச் சுட்டுக்கொன்று விட்டனர் என்று பரவி இருந்த வதந்திக்கு, நான் அவரைச் சந்தித்து வெளியிட்ட படமே முற்றுப்புள்ளி வைத்தது. இப்போதும் தலைவர் இருக்கிறார் என்பதைச் சொல்ல ஒரு வாய்ப்புக் கிடைக்காதா என்று ஏங்குகிறேன். தமிழ் ஈழத்துக்கு ஆதரவாகப் பேச, தமிழ்நாடு ஒன்றுதான் இருக்கிறது. நாம் எழுச்சியும் எதிர்ப்பும் எழுப்பாத காரணத்தால்தான் இன அழிப்பு நடந்தது. ராஜபக்ச மற்றும் அவர்களுக்குத் துணையாக நின்ற இந்தியா, பாகிஸ்தான், சீனா மட்டும் இன அழிப்புக்குக் காரணம் இல்லை.

           அமைதியாக நின்ற தமிழ்நாடும் தான் காரணம். அடுத்த தலைமுறையாவது, ஈழத்தில் ஆதரவுக் குரல் எதிர் பார்க்கும்போது, நிச்சயம் தன் குரலை உயர்த்தும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்'' என்று முழங்கினார்.

Read more...

செங்கல்பட்டு, பூவிருந்தவல்லி ஈழத் தமிழர்கள் சிறப்பு தடுப்பு முகாம்களை இழுத்து மூட பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை

வெள்ளி, 30 நவம்பர், 2012


    செங்கல்பட்டு, பூவிருந்தவல்லி ஈழத் தமிழர்கள் சிறப்பு தடுப்பு முகாம்களை இழுத்து மூட பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை

          தமிழகத்தின் செங்கல்பட்டு, பூவிருந்தவல்லி ஆகிய சிறப்பு தடுப்பு முகாம்களில் விசாரணை ஏதுமின்றி விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் ஈழத் தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் தங்களை விடுதலை செய்யக் கோரி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என்பது தொடர் கதையாக நடந்துவருகிறது.

           போர் நடைபெற்ற இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள் கூட விடுவிக்கப்பட்டுவிட்டனர். ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்ககக் கூடும் என்று சந்தேகத்தின் பேரில் தமிழகத்தில் தடுத்து வைக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் இன்னமும் செங்கல்பட்டு, பூவிருந்தவல்லி போன்ற தடுப்பு முகாம்களில் வாடிவருகின்றனர்.

         ஈழத்து முள்வேலி முகாம்களைப் பற்றியும் தமிழகத்து திறந்த வெளி முகாம்களைப் பற்றியும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அக்கறை செலுத்துகிற அதே நேரத்தில் தமிழகத்தில் தடுப்பு முகாம் எனும் சிறைச் சாலைகளில் எந்தவித விசாரணையும் இன்றி அடைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்களது நிலைமையையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறது.

           எனவே, பூவிருந்தவல்லி மற்றும் செங்கல்பட்டு தடுப்பு முகாம்களை இழுத்து மூடி அங்கு அடைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்களை இதர அகதி முகாம்களுக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறோம்.



Read more...

உயிர் உலை ஆவண பட வெளியீட்டு நிகழ்ச்சி - பண்ருட்டி தி. வேல்முருகன் குறுந்தகடு பெற்றுக்கொண்டார்





சென்னை லயோலா கல்லூரியில் நடந்த விழாவில் லயோலா கல்லூரி முன்னாள் மாணவர் தோழர்.லோகேஷ் இயக்கிய "உயிர் உலை" ஆவண பட குறுந்தகடு வெளியீட்டு நிகழ்ச்சி 29/11/2012 அன்று நடந்தது.  இந்நிகழ்ச்சியில் குறும்பட குறுவட்டை மதிமுக பொதுச் செயலாளர் திரு.வைகோ வெளியிட தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி. வேல்முருகன்  குறுந்தட்டை பெற்றுக்கொண்டார். மேலும் பூவுலகு சுந்தரராஜன், இயக்குநர் திரு.புகழேந்தி தங்கராசு, மே 17 இயக்கம் திரு.திருமுருகன் காந்தி, சேவ் தமிழ் ஜார்ஜ் , ஊடகவியலாளர் மணி ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.

Read more...

கர்நாடகத்துக்கு செல்லும் நெய்வேலி மின்சாரத்தைத் தடுத்து நிறுத்தி தமிழர் உரிமையை வென்றெடுக்க அணி திரள பண்ருட்டி தி.வேல்முருகன் அறைகூவல்

கர்நாடகத்துக்கு செல்லும் நெய்வேலி மின்சாரத்தைத் தடுத்து நிறுத்தி தமிழர் உரிமையை வென்றெடுக்க அணி திரள பண்ருட்டி வேல்முருகன் அறைகூவல் விடுத்துள்ளார்.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை

         கர்நாடகம் கைவிரிக்கஉச்சநீதிமன்றமும் இழுத்தடிக்க இனியும் பொறுமை ஏன்? ஓரணியில் திரள்வோம் தமிழர்களே!

        காவிரி நதிநீர் கோரி தமிழக முதல்வர் பெங்களூர் சென்று நடத்திய பேச்சுவார்த்தையை அலட்சியம் செய்து சொட்டு நீரையும்கூட தரமறுத்திருக்கிறது கர்நாடகம். உச்சநீதிமன்றமோ இன்று கூட விசாரணையை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தின் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளிலோ சம்பா பயிர் கருகிப் போய் விவசாயிகளை தற்கொலைக்குத் தூண்டி வருகிறது. காவிரி நதிநீரில் தமிழகத்துக்கு உரிய நியாயமான பங்கினைப் பெற்றுத்தர மத்திய அரசு தவறிவிட்டது. பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையம் அளித்த தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் கூட அதை செயல்படுத்த மறுக்கிறது கர்நாடக அரசு. அந்த கர்நாடக மாநில அரசு மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் மறுப்பதுடன் மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தமிழகத்துக்கு உத்தரவிடுவது எந்தவகையில்தான் நியாயமோ? இதுதான் இந்திய ஒருமைப்பாடா?

            இப்படித்தான் வழக்கு விசாரணை என்று நடந்து கொண்டிருக்க குறுவை சாகுபடி பொய்த்துப் போனது.. தற்போது சம்பா பயிரையும் சாகடித்துக் கொண்டிருக்கிறார்கள்.. தமிழக விவசாயிகளோ குடும்பம் குடும்பாக தற்கொலை செய்து கொள்ளப் போகும் ஒரு பேரவலம் காவிரி டெல்டா பிரதேசத்தில் நடந்தேறத்தான் போகிறது. தமிழகத்துக்கு உரிமைக்காக நியாயமான வழிகளில் போராடி வரும் தமிழக அரசு, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி ஒருமித்த ஒரு முடிவை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.

           இதேபோல் இனியும் கர்நாடகத்திடம் நீதி கிடைக்காது என்பதால் தமிழகத்து நெய்வேலி மின்சாரம் கர்நாடகத்துக்கு செல்வதைத் தடுத்து நிறுத்துவது மட்டுமே தீர்வாக அமையும்! சாதி, மத, கட்சி, எல்லைகளைக் கடந்து தமிழர்களாய் ஒன்று திரண்டு கர்நாடகத்துக்கு செல்லும் நெய்வேலி மின்சாரத்தைத் தடுத்து நிறுத்தி தமிழர் உரிமையை வென்றெடுக்க அணி திரள தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறைகூவல் விடுக்கிறது!

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மாவீரர் நினைவு தினம் பண்ருட்டி தி.வேல்முருகன் ஈகச்சுடரை ஏற்றினார்

புதன், 28 நவம்பர், 2012

புதுவை, அரியாங்குப்பத்தில்  27/11/2012 அன்று ஒழுங்கு செய்யப்பட்டு சிறப்பாக நடந்தேறிய மாவீரர் தின நிகழ்வில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நிறுவனர் இளம்புயல் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்களும் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் அதன் தலைவர் திரு.கொளத்தூர் மணி அவர்களும் கலந்து கொண்டு ஈகச்சுடரை ஏற்றி வைத்து ஈகியர்களுக்கு வீரவணக்கம் செலுத்தியது குறித்து விளக்கும் புகைப்படங்கள். 











Read more...

வீரபாண்டி ஆறுமுகம் மறைவிற்கு பண்ருட்டி தி. வேல்முருகன் இரங்கல்

சனி, 24 நவம்பர், 2012

    
              


           வீரபாண்டி ஆறுமுகம் மறைவிற்கு பண்ருட்டி தி.வேல்முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி

   திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சரும் சேலம் மாவட்ட திமுக செயலாளருமான வீரபாண்டி ஆறுமுகம் அவர்கள் நேற்று (23/11/2012) மறைந்தார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    பேரறிஞர் அண்ணா காலம் முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தம்மை ஒப்படைத்துக் கொண்டு திமுகவின் முதன்மையான தூண்களில் ஒருவராக திகழ்ந்தவர் வீரபாண்டியார். பூலாவரி பஞ்சாயத்து தலைவர் முதல் மாநிலத்தின் அமைச்சராக வரை தம் வாழ்நாளின் பெரும்பகுதியை ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்வுக்காகவே ஒப்படைத்துக் கொண்டவர் வீரபாண்டி ஆறுமுகம்.

           சேலத்தில் இரும்பாலை, மருத்துவக் கல்லூரி, ரயில்வே கோட்டம் போன்ற அமைக்க போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்ற அவர், உள்ளாட்சித் துறை அமைச்சராக, வேளாண் துறை அமைச்சராக பதவி வகித்த காலங்களில் தமிழக மக்களின் நலனுக்காகவும் பாடுபட்டவர். கட்சிப் பொறுப்பு, அமைச்சர் பொறுப்பு என அனைத்திலும் திறம்பட செயலாற்றிய வீரபாண்டியார் எனும் போர்ப்படை தளபதியை இழந்து தவிக்கும் திமுகவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


Read more...

கடலூர் சிப்காட் ஆர்கிமா தொழிற்சாலை தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ஐந்து லட்சம் நஷ்ட ஈடு வழங்கவேண்டும் : பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை

வெள்ளி, 23 நவம்பர், 2012

    



                

                 திருப்பூர் சாயக் கழிவுகளை குழாய் மூலம் கடலூர் அருகே கடலில் கலக்கும் திட்டத்தை செயல்படுத்தினால் போராட்டம் நடத்தப்படும் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் கூறினார்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன்   கடலூரில் நேற்று (22/11/2012 ) அளித்த பேட்டி :

   கடலூர் மாவட்டம், சிப்காட்டில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகள் அரசு, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், உள்ளாட்சித் துறையிடம் அனுமதிபெறாமல், சட்டத்திற்குப் புறம்பாக, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் ரசாயன பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றன. இதனால் சுற்றுப்பகுதியில் உள்ளவர்களுக்கு கண் எரிச்சல், வயிற்றுப்போக்கு, புற்று நோய், இருதய நோய், நுரையீரல் நோய், கருச்சிதைவு, மலட்டுத் தன்மை போன்றவை ஏற்படுகிறது.

            நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான் சட்டசபை உறுதிமொழி கமிட்டியின் தலைவராக இருந்தபோது, சிப்காட் தொழிற்சலைகளை ஆய்வு செய்தேன். பல தொழிற்சாலைகள் அனுமதியின்றி ரசாயனப் பொருட்களை உற்பத்தி செய்ததை கண்டறிந்து, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை மூடுமாறு சிபாரிசு செய்தேன். சிப்காட் ரசாயன தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து கடலில் விட வேண்டும். ஆனால், பொது சுத்திகரிப்பு நிலையம் இயங்காததால் சுத்திகரிப்பு செய்யாமல் கழிவு நீரை நேரடியாக கடலில் கலக்கின்றனர். இதனால் சுற்றுப்பகுதியில் உள்ள மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கிறது.

             ஏற்கனவே சிப்காட் தொழிற்சாலைகளில் நடந்த விபத்துகளில் பலர் பலியாகியுள்ளனர். பலர் உடலுறுப்பை இழந்துள்ளனர். சிப்காட் பகுதி மக்கள் வாழ்வதற்குத் தகுதியான இடம் இல்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வளவு மோசமான நிலையில் உள்ள தொழிற்சாலைகளை எப்படி அரசு அனுமதிக்கிறது என்பது வியப்பாக உள்ளது. ஒரு உயர்நிலைக் குழு அமைத்து, பொது மக்களிடம் கருத்து கேட்டு, மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

                  திருப்பூர் சாயக்கழிவுகளை குழாய் மூலம் கடலூர் அருகே கடலில் கலக்கும் திட்டம் கடந்த தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. இதனால் இப்பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என அப்போதே எதிர்த்தேன். தற்போது அத் திட்டத்தை அரசு செயல்படுத்தினால் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடுமையாக எதிர்ப்பதுடன், மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும்.

          கடலூர் சிப்காட் ஆர்கிமா பெராக்சைட்ஸ் கெமிக்கல் தொழிற்சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு, 2 முதல் 5 லட்சம் ரூபாய் வரை நிர்வாகம் சார்பில் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். விபத்து நடந்த தொழிற்சாலையில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றச் சென்ற மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது கண்டனத்திற்குரியது. இவ்வாறு வேல்முருகன் கூறினார்.

Read more...

கடலூர் சிப்காட்டில் இயங்கும் மனித சுற்றுச்சூழலை பாதிப்படைய செய்யும் ரசாயன தொழிற்சாலைகளை மூட வேண்டும்: பண்ருட்டி தி.வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள செய்தி குறிப்பு :

 கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். ரசாயனக் கசிவால் கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு, மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, அருகில் ஊர்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். எனவே கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் இயங்கும் மனித சுற்றுச்சூழலை பாதிப்படைய செய்யும் ரசாயன தொழிற்சாலைகளை கணக்கெடுத்து அவைகளை நிரந்தரமாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என் கோரிக்கை விடுத்துள்ளார்.

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைப் பொதுசெயலாளர் கண்ணன் இல்லத் திருமண விழா

செவ்வாய், 20 நவம்பர், 2012

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைப் பொது செயலாளர் கண்ணன் இல்லத் திருமண விழாவில்  தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் கலந்துகொள்கிறார்.




 

Read more...

தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் ரீகன் என்ற பரிதி சுட்டுக் கொலை - பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டனம்

சனி, 10 நவம்பர், 2012




தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்  ரீகன் என்ற பரிதி சுட்டுக் கொலை -  பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு

தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் பிரான்சு நாட்டு தமிழர் ஒருக்கிணைப்புக் குழுத் தலைவருமான ரீகன் என்ற பரிதியை சிங்களப் புலனாய்வுப் பிரிவினர் பாரீஸ் நகரில் சுட்டுக் கொன்ற செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதேபோல் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி தளபதிகளை வெளிநாட்டில் ஏற்கெனவே சிங்களப் புலனாய்வு பிரிவினர் சுட்டுக் கொலை செய்திருக்கின்றனர். தற்போது பரிதியையும் சிங்களப் பேரினவாதிகள் படுகொலை செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.


தன் வாழ்நாள் முழுவதும் தமிழீழ விடுதலைக்காகப் பாடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதியான பரிதிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமது வீரவணக்கத்தை செலுத்துகிறது. தளபதி பரிதியின் குடும்பத்தினருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்

Read more...

காவிரி நதி நீர் பகிர்வில் உச்ச நீதி மன்றத் தீர்ப்பை மதிக்காத கர்நாடகத்திற்க்கு நெய்வேலி மின்சாரம் தர கூடாது - பண்ருட்டி தி.வேல்முருகன்

சனி, 3 நவம்பர், 2012

அக்டோபர் 20, 2012 அன்று நெய்வேலியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நடைபெற்ற நெய்வேலி அனல் மின் நிலையம் முற்றுகைப் போராட்டம் குறித்து இந்தியா டுடேவில் வெளியான கட்டுரை



Read more...

கொட்டும் மழையில் நடந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நெய்வேலி அனல் மின் நிலையம் முற்றுகைப் போராட்டம்

வெள்ளி, 2 நவம்பர், 2012



அக்டோபர் 20, 2012 அன்று நெய்வேலியில்  தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நடைபெற்ற நெய்வேலி அனல் மின் நிலையம் முற்றுகைப் போராட்டம் குறித்து ஜூனியர் விகடனில் வெளியான கட்டுரை



Read more...

நெய்வேலியில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் மின்சார டவர்களை கைப்பற்றுவோம் - பண்ருட்டி தி.வேல்முருகன்

வியாழன், 1 நவம்பர், 2012

அக்டோபர் 20, 2012 அன்று நெய்வேலியில்  தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நடைபெற்ற நெய்வேலி அனல் மின் நிலையம் முற்றுகைப் போராட்டம் குறித்து குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் வெளியான கட்டுரை





Read more...

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோரி தலைமைச் செயலகத்தைப் முற்றுகையிடும் போராட்டம்

செவ்வாய், 30 அக்டோபர், 2012








சென்னை:

              கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோரி போராடி வரும் அணு உலை எதிர்ப்பாளர்கள் 29/10/2012 சென்னை தலைமைச் செயலகத்தைப் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது . இந்த போராட்டத்துக்கு  தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ம.தி.மு.க, பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி,,நாம் தமிழர் கட்சி, மற்றும் தமிழர்கள் கூட்டமைப்பு, தமிழ் தேசிய விடுதலை இயக்கம் உள்பட மீனவர்கள் சங்கங்கள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தொழிற்சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்து இருந்தன.

            முற்றுகை போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி வழங்கவில்லை. வெளியூர்களில் இருந்து வரும் தொண்டர்களை வழியிலேயே தடுத்து கைது செய்ய 100-க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து இருந்தனர். வெளி மாவட்டங்களில் இருந்து போராட்டத்துக்கு வந்தவர்கள் ஆங்காங்கே கைது செய்யப்பட்டார்கள். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் முன்பு ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்த அனுமதிக்கப்பட்டிருந்தது.


            போராட்டத்தில் கலந்து கொள்ள ஆயிரக் கணக்கானவர்கள் காலை முதலே திரண்டிருந்தனர். முற்றுகை போராட்டத்தை பழ.நெடுமாறன் தொடங்கி வைத்தார். ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்,  விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், பா.ம.க. சார்பில் வியனரசு, மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி பேராசிரியர் தீரன் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் ஒரே மேடையில் கண்டன உரை நிகழ்த்துகிறார்க்ள.

ஆர்ப்பாட்டத்தில் பழ.நெடுமாறன் பேசியது:-

           கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோரி கடந்த 450 நாட்களாக மக்கள் போராடி வருகிறார்கள். அறவழியில் போராடும் மக்களை அடக்கு முறையில் ஒடுக்க பார்க்கிறார்கள். அறவழி போராட்டத்தை யாராலும் ஒடுக்க முடியாது. அணு உலையை மூடும் வரை போராட்டம் தொடரும்.


தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் பேசியது:

           கூடங்குளம் போராட்ட குழுவினரை மத்திய மாநில அரசுகள் நசுக்கி வருகிறது. பொய் வழக்கு, அடக்கு முறை போராட்டத்தை நசுக்க முடியாது என்றார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இழுத்து மூடு இழுத்து மூடு அணுமின் நிலையத்தை இழுத்து மூடு 144 தடை உத்தரவை வாபஸ் வாங்கு. இவ்வாறு அவர் பேசினார்.

             கூடங்குளத்தில் இருந்து போலீசாரை வெளியேற்று என்பது உள்பட பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். வைகோ, பழ.நெடுமாறன், வேல்முருகன், திருமாவளவன், ஜவாஹிருல்லா உள்பட அனைத்து தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.

            இதேபோல் ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, வேளச்சேரி மணிமாறன்,  தமிழக வாழ்ரிமை கட்சி நிர்வாகிகள் காமராஜ், காவேரி, சண்முகம், யூனுஸ்கான், வாசுதேவன், ஜெயலட்சுமி,  விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் பாலாஜி, இரா.செல்வம்,சி.பி.எம். மக்கள் விடுதலை இயக்க நிர்வாகிகள் சிதம்பரநாதன், பாண்டியன், பாலசுந்தரம், குமார் உள்பட அனைத்து கட்சிகளையும் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

 

Read more...

தமிழகத்தில் நிலவும் மின்வெட்டை சமாளிக்க மத்திய அரசு கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டும்: பண்ருட்டி தி. வேல்முருகன் கோரிக்கை

சனி, 27 அக்டோபர், 2012

வேலூர்:

 தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர்  பண்ருட்டி தி.வேல்முருகன் வேலூரில் நேற்று  (26/10/2012) அளித்த பேட்டி:

    சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு தமிழர் நலன் காக்கவும். உலக தமிழர் நலன் காக்கவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராடி வருகிறது. ஈழதமிழர் பிரச்சினை, காவிரி, முல்லை பெரியாறு நதிநீர் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி வருகிறோம்.

           முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, ஜெயவர்த்தனே கூட்டு ஒப்பந்தபடி ஈழதமிழர் நலன் காக்க அதில் உள்ள 13வது ஷரத்தை ரத்துசெய்ய ராஜபக்சே அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இதை ரத்து செய்தால் இலங்கை அரசுடன் இந்திய அரசு எந்தவித தொடர்பும் வைத்து கொள்ளகூடாது ஈழதமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

             தமிழகத்தில் தினமும் 12 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு அமலில் உள்ளது. இதை சமாளிக்க மத்திய அரசு கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டும். நெய்வேலியில் உற்பத்தியாகும் 3000 மெகாவாட் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கு பெற்றுதர தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

            பேட்டியின் போது மாநில பொது செயலாளர் காவேரி அமைப்பு செயலாளர் காமராஜ் துணை பொது செயலாளர்கள் சிவகுமார், சுதாகர் உடன் இருந்தனர்.

Read more...

பண்ருட்டி தி. வேல்முருகன் தலைமையில் என்.எல்.சி. முதல் அனல் மின்நிலையம் முற்றுகைப் போராட்டம்

ஞாயிறு, 21 அக்டோபர், 2012












நெய்வேலி:

           தமிழகத்துக்கு காவிரியில் நீர்விட மறுக்கும் கர்நாடகத்துக்கு என்.எல்.சி.யில் இருந்து மின்சாரம் வினியோகிப்பதை நிறுத்தவும், தமிழகத்துக்கு முழுமையாக மின்சாரம் அளிக்கவும் வலியுறுத்தி நெய்வேலி என்.எல்.சி. முதல் அனல்மின் நிலையம் முற்றுகையிடப்படும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் பங்கேற்க பொதுமக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

              அதன்படி 20/10/2012 சனிக்கிழமை காலை யில் நெய்வேலி புதுநகர் 19-வது வட்டத்தில் உள்ள செவ்வாய்சந்தை பகுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் திரண்டனர். நெய்வேலி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான ஆண், பெண்கள் வேன், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களில் வந்து குவிந்தனர்.

            மழை பெய்தபோதும் திட்டமிட்டபடி தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் பண்ருட்டி தி. வேல்முருகன் தலைமையில் என்.எல்.சி. முதலாவது அனல் மின்நிலையம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றனர். ஊர் வலத்தின்போது கர்நாடக அரசை கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷம் எழுப்பப்பட்டது. பேரணியில் கட்சியின் பொது செயலாளர் காவேரி, மாநில தலைவர் பேராசிரியர் தீரன், அமைப்பு செயலாளர் காமராஜ், இணை பொது செயலாளர் சண்முகம் உள்பட கட்சி பிரமுகர்கள், கடலூர் மாவட்ட நெய்வேலி நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

            நெய்வேலி என்.எல்.சி. முதல் மின்நிலையம் அருகே உள்ள “கியூ” பாலம் பகுதியில் ஊர்வலம் சென்ற போது தடுப்பு கட்டைகள் உதவியுடன் போலீசார் வழிமறித்து தடுத்து நிறுத்தினர்.

Read more...

நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே தர வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற பண்ருட்டி தி. வேல்முருகன் கோரிக்கை

வெள்ளி, 19 அக்டோபர், 2012

மேட்டூர் :
       கர்நாடகாவுக்கு மின்சாரம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து நெய்வேலி என்எல்சி அலுவலகம் முன் 20/10/2012 அன்று முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிவித்துள்ளது.

          சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்ற தொகுதி தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் கர்நாடக அரசை கண்டித்து பொதுக்கூட்டம் மேச்சேரியில் 18/10/2012 அன்று நடந்தது. மாநில துணை பொதுச்செயலாளர் ஜெயமோகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வீராசாமி வரவேற்றார். கட்சியின் நிறுவனத்தலைவர் வேல்முருகன், மாநிலத்தலைவர் தீரன், பொதுச்செயலாளர் காவேரி, அமைப்புச் செயலாளர் காமராஜ், இணை பொதுச் செயலாளர் சண்முகம் ஆகியோர் பேசினர்.

 
தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி. வேல்முருகன் பேசுகையில்,

 
   ‘‘தற்போது காவிரி நீரில் தமிழகத்திற்கு உள்ள பங்கினை கர்நாடக அரசு தர மறுக்கிறது. மத்திய அரசு இதனை தட்டிக் கேட்கவில்லை. தமிழகத்திற்கு நீரை தர மறுக்கும் கர்நாடகத்திற்கு தமிழகத்தில் இருந்து ஒரு விநாடி கூட மின்சாரம் வழங்கக்கூடாது. மின்சாரம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து 20ம் தேதி ஒரு லட்சம் பேரை திரட்டி நெய்வேலி என்எல்சி முன் போராட்டம் நடத்த உள்ளோம்,’ என்றார்.

 
பின்னர் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி. வேல்முருகன் அளித்த பேட்டி

          மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கர்நாடக அரசுக்கு ஆதரவாக நடந்து கொள்கிறார். 9 ஆயிரம் கன அடி தண்ணீரை கொடுக்க முடியாது என்று கர்நாடக அமைச்சர்களுடன் சேர்ந்து, இவரும் பிரதமரிடம் கூறுகிறார். இது இந்திய ஒருமைப்பாட்டுக்கே பங்கம் விளைவிக்கும் செயல். இது போன்று நடந்து கொண்ட எஸ்.எம்.கிருஷ்ணாவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். தமிழக விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்படும் சூழ்நிலை உள்ளபோது கர்நாடக அரசு பிடிவாதமாக இருப்பதால் கர்நாடக அரசை கலைத்து விட்டு இந்திய ராணுவத்தை வைத்து பிரதமர் உத்தரவுப்படி தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க வேண்டும். தமிழக முதல்வர் கூறியபடி நாள் ஒன்றுக்கு 2 டிஎம்சி தண்ணீராவது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


            தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்காத கர்நாடகத்துக்கு நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே தர வேண்டும் என தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டி அனைத்து கட்சிகளின் ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்றி பிரதமருக்கு அனுப்ப வேண்டும். தமிழகத்தில் உற்பத்தியாகும் தனியார் மற்றும் மத்திய தொகுப்பு மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே வழங்க வேண்டும் என்றார்.

Read more...

நெய்வேலி அனல் மின் நிலையத்தை 20/10/2012 அன்று முற்றுகையிடும் போராட்டம் - பண்ருட்டி தி.வேல்முருகன் அறிவிப்பு

ஞாயிறு, 14 அக்டோபர், 2012







 





கடலூர்:


தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவன தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கடலூரில் சனிக்கிழமை 13/10/2012 அன்று அளித்த பேட்டி :

உச்சநீதி மன்றமும், காவிரி நதிநீர் ஆணையமும் உத்தரவிட்ட பிறகும், தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும், கர்நாடகத்துக்கு நெய்வேலியில் உற்பத்தியாகி செல்லும் மின்சாரத்தை தடுக்கும் வகையில் வருகிற 20-ந்தேதி (சனிக்கிழமை) தமிழக வாழ்வுரிமை கட்சி ஒரு லட்சம் தமிழர்களை அணி திரட்டி நெய்வேலி அனல்மின் நிலையத்தையும், கர்நாடகத்துக்கு மின்சாரம் செல்லும் டவர்களையும் முற்றுகையிடும் மாபெரும் போராட்டம் நடைபெற உள்ளது.

இந்த போராட்டத்தில் தமிழர்கள் அனைவரும் சாதி, மதம், கட்சி வேறுபாடுகளை கடந்து தமிழர்களின் ஒற்றுமையை உணர்த்தும் வகையில் உரிமையை நிலைநாட்டும் வகையிலும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். காவிரிநதிநீர் தொடர்பாக மத்திய அரசு கூட்டிய கூட்டத்திலும் எந்தவித முன்னேற்றமும் இல்லையென்ற செய்தியும் வந்துள்ளது. எனவே மத்தியில் உள்ள காங்கிரஸ் இதுபோன்ற கண்துடைப்பு நாடகங்களை நடத்தாமல் தமிழகத்திற்கு 205 டி.எம்.சி. தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது குறைந்த பட்சம் தினசரி 9 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று பிரதமர் உத்தரவிட்டதை செயல்படுத்த கர்நாடகத்துக்கு ராணுவத்தை அனுப்பி மத்திய அரசின் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளை கொண்டு தண்ணீரை திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது கர்நாடக அரசை சஸ்பெண்டு செய்து விட்டு உச்சநீதிமன்ற உத்தரவை நடைமுறை படுத்த கவர்னர் மூலம் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 12 நாட்களாக தமிழக பதிவு எண் கொண்ட கார்கள், வாகனங்கள் ஒன்று கூட கர்நாடகத்துக்குள் செல்ல முடியவில்லை. ஆனால் இவ்வளவு கொடுமைகளை செய்து கொண்டு இருக்கிற கர்நாடகத்தை மத்தியஅரசு வேடிக்கை பார்ப்பது கண்டனத்துக்குரியது.

           இதே நிலை தொடர்ந்தால், கர்நாடகா பதிவு எண் பேரூந்துகள், வாகனங்கள் தமிழகத்தின் எல்லைகளில் சிறைபிடிக்கும் போராட்டத்தை நடத்துவோம். தமிழகத்தில் வரலாறு காணாத அளவுக்கு ஏற்பட்ட இருக்கிற மின்வெட்டை சரிசெய்கிற வகையில், தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டி, தமிழகத்தில் உற்பத்தியாகிற ஒட்டு மொத்த மின்சாரத்தையும் தமிழ்நாட்டின் தேவைகளுக்கு தரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு வேல்முருகன் கூறினார்.

           பேட்டியின் போது மாவட்ட செயலாளர் பஞ்சமூர்த்தி, நகர செயலாளர்கள் ஆனந்த், ராஜமூர்த்தி, மாநில மாணவரணி துணை செயலாளர் அருள்பாபு, நிர்வாகிகள் அமலநாதன், அமராவதி, சுப்பு, பஞ்சாயுதம் உள்பட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Read more...

நெய்வேலி மின்சாரத்தை கர்நாடகத்துக்கு கொடுப்பதை கண்டித்து அக்டோபர் 20-ல் முற்றுகைப் போராட்டம் - தி.வேல்முருகன் அறிவிப்பு

வியாழன், 11 அக்டோபர், 2012

 


                  நெய்வேலி மின்சாரத்தை கர்நாடகத்துக்கு கொடுப்பதை கண்டித்து அக்டோபர் 20-ல் முற்றுகைப் போராட்டத் திற்கு    தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் அழைத்துள்ளார்.

இது குறித்து      தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர்  பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு  

   காவிரி நீரை தமிழகத்துக்கு தர மறுத்து அடம்பிடிக்கும் கர்நாடகத்துக்கு தக்க பாடம் புகட்டுவோம்! தமிழ்நாட்டு நெய்வேலி மின்சாரத்தை கர்நாடகத்துக்கு கொடுப்பதை தடுத்து நிறுத்துவோம்! நெய்வேலியில் அக்டோபர் 20-ந் தேதி எனது தலைமையில் முற்றுகைப் போராட்டம்! நெய்வேலி அரசு மருத்துவமனையில் இருந்து ஒரு லட்சம் தமிழர் ஒன்று திரண்டு பேரணியாக சென்று நெய்வேலி முதலாவது அனல்மின் நிலையத்தை முற்றுகையிடுவோம்! தமிழ்நாட்டு மின்சாரம் தமிழ்நாட்டுக்கே பயன்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிற விவசாயத் தோழர்கள், தொழிலாளர்கள், தொழில்துறையினர், மாணவர்கள் என அனைத்துப் பிரிவினரும் குடும்பம் குடும்பமாக நெய்வேலியில் அக்டோபர் 20-ல் ஒன்று திரண்டு முற்றுகைப் போராட்டத்தை வெற்றி பெற வைப்போம்!

        சாதி, மத, கட்சி எல்லைகளைக் கடந்து தமிழராய் ஓரணியில் ஒன்று திரண்டு நெய்வேலி மின்சாரத்தை கர்நாடகத்துக்குக் கொடுப்பதை தடுத்து நிறுத்துவோம்! வாருங்கள் தமிழர்களே! ஒன்று திரள்வோம்!!



தி.வேல்முருகன்

நிறுவனர்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி


Read more...

கடலூர் மாவட்டத்தில் கனமழையால் சேதமடைந்த வாழைகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க தி.வேல்முருகன் கோரிக்கை

வெள்ளி, 28 செப்டம்பர், 2012









கடலூர்:


கடலூர் மாவட்டத்தில் கனமழையால் சேதமடைந்த வாழைகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

           கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பயங்கரமாக சுழன்றடித்த சூறாவளியாலும் கனமழையாலும் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழைகள் அடியோடு வீழ்ந்து நாசமாகிப் போய்விட்டன. சுனாமியாலும் அடுத்து வந்த தானே புயலாலும் பேரழிவை சந்தித்த கடலூர் மாவட்டத்தின் பலா, முந்திரி, மா, வாழை, தென்னை விவசாயிகள் தங்களது எதிர்காலமே இருண்டுபோன நிலையில் தற்கொலை செய்து கொள்ள நேரிட்டிருந்தது.

                 இந்நிலையில் வீட்டுப் பொருட்கள் அனைத்தையும் அடகு வைத்தும் அதிக வட்டிக்குப் பணம் திரட்டியும் வாழை சாகுபடியில் ஈடுபட்டு எதிர்காலத்தை மீட்டெடுக்கலாம் என காத்திருந்தனர். 1 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ1.5 லட்சம் செலவிட்டு சாகுபடி செய்த வாழை மரங்கள் அடுத்த 15 அல்லது 20 நாட்களில் அறுவடைக்குத் தயாராக இருந்தன. ஆனால் பெரும் சூறாவளியில் குலைதள்ளிய வாழைகள் ஒரு ரூபாய்க்குக் கூட பயனில்லாமல் அடியோடு நாசமாகிப் போய் விவசாயிகளின் தலையில் பேரிடி விழுந்திருக்கிறது. இனியும் அழிவுகளைத் தாங்காது தற்கொலை செய்து கொள்ளும் நிலையில்தான் கடலூர் மாவட்ட விவசாயிகள் உள்ளனர். எதிர்காலத்தைத் தொலைத்து நிற்கும் கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு சற்றேனும் தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் ஏக்கர் ஒன்றுக்கு ரூ50 ஆயிரமாவது உடனடியாக தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

               சூறாவளி சரித்துப் போட்ட வாழைகளை அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவும் வாழை சாகுபடியை மீண்டும் தொடங்கவும் வேளாண் துறை மூலமாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தமிழக அரசை வேண்டுகிறேன். ஒவ்வொரு ஆண்டும் இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கப்படும் கடலூர் மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரங்களைப் பார்வையிட்டு அவற்றைப் பாதுகாக்கவும் உரிய நிவாரணம் வழங்கவும் வேளாண்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் ஒரு குழுவை உடனே அனுப்பி வைக்கவும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

Read more...

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP