கடலூர் பாதாள சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிக்க பாமக கோரிக்கை

சனி, 20 நவம்பர், 2010

கடலூர்;

                கடலூர் பாதாள சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட பாமக மகளிரணி கோரிக்கை விடுத்துள்ளது.÷பாமக மகளிரணி தேர்தல் சிறப்புக் கூட்டம் கடலூரில் வியாழக்கிழமை நடந்தது. 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 

                 மழைக்காலம் தொடங்கி விட்டதால், கடலூர் பாதாள சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேணடும். கடலூர்  மக்களின் நீண்டநாள் கோரிக்கையான சுரங்கப் பாதைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, விருத்தாசலம் தொகுதிகளில் மகளிரணியை சிறப்பாக செயல்படவைக்க அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் சென்று அணி திரட்டுவது என்றும் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

                 கூட்டத்துக்கு மகளிரணி மாநில துணைப் பொதுச் செயலர் சு.அமராவதி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் செüபாக்கியம், செயலர் உஷாராணி மற்றும் நிர்வாகிகள் தானாயி அம்மாள், தையல்நாயகி செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேவசுந்தரி வரவேற்றார். பாமக மாநில துணைப் பொதுச் செயலர் தி.திருமால்வளவன்,  மாவட்டச் செயலர்கள் அ.தர்மலிங்கம், ரா.பஞ்சமூர்த்தி, அலுவலகச் செயலர் போஸ் ராமச்சந்திரன், கடலூர் நகரச் செயலர் ஆனந்த் உள்ளிட்ட பலர் பேசினர். லதா நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP