பண்ருட்டி தி. வேல்முருகன் பங்கேற்ற முள்ளி வாய்க்காலில் உயிர் நீத்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி - புகைப்படங்கள்

ஞாயிறு, 20 மே, 2012




சிதம்பரம் :

குமராட்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நடந்த இலங்கை முள்ளி வாய்க்காலில் உயிர் நீத்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு குமராட்சி ஒன்றிய அமைப்பாளர் தமிழ்வாணன் தலைமை தாங்கினார். 

 தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி. வேல்முருகன் பேசியது 


"இலங்கையில் ராஜபக்சே பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். தமிழர்களின் வாழ்வுரிமைக்காக போராடுவதற்கு புதிதாக தமிழர் படை உருவாக்கப்படுகிறது. இவர்கள் ஜாதி உணர்வை தூண்டாமல் தமிழர்களின் நலனுக்காகவே பாடுபடுவார்கள்.  இந்தப் படை ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் நீதி அரசர்களின் ஆலோசனைப்படி அமைக்கப்படும்’’ என்றார்.













Read more...

பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் முள்ளிவாய்க்கால் மாவீரர்களின் நினைவேந்தல் கூட்டம்

வியாழன், 17 மே, 2012

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தமிழ் ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தக்கோரியும் தமிழ் ஈழம் அமைய பொது மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தக்கோரியும் நாளை 18/05/2012 கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த குமராட்சியில் பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் நடத்தப்படும் மாபெரும்  முள்ளிவாய்க்கால் மாவீரர்களின் நினைவேந்தல் பொதுக்கூட்டத்திற்கான அழைப்பிதழ் இன உணர்வுள்ளோர் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென அழைக்கிறோம்.







Read more...

பண்ருட்டி தி.வேல்முருகன் பங்கேற்ற ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தொடக்கம் - புகைப்படங்கள்

தமிழ் ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஐ.நா வை வலியுறுத்தி நேற்று 16/05/2012 சென்னை மெரீனா கடற்கரையில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் தமிழகத்தில் தனித் தமிழ் ஈழத்திற்கு ஆதரவு உள்ளது என்பதை காட்டும் விதமாக ஒரு கோடி கையெழுத்துக்கள் பெற்று ஐ நா விற்கு அனுப்புவது தான். இந்த தொடக்க நிகழ்வில் , தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி. வேல்முருகன், அய்யா பழ நெடுமாறன், தோழர் நல்லகண்ணு, திரு வைகோ,, வன்னி அரசு, ஜவஹருல்லா , தென்னரசு போன்ற தலைவர்கள் கலந்து கொண்டு தங்கள் கையெழுத்தை பதிவு செய்தனர். அணைத்து தமிழ் உணர்வாளர்களும் , தமிழின தலைவர்களும் இந்நிகழ்வில் பங்கு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




Read more...

என்.எல்.சி.ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை

செவ்வாய், 15 மே, 2012


கடலூர்:

நதிநீர், புயல் நிவாரணம், ஈழத்தமிழர் படுகொலை விவகாரம், நெய்வேலி ஒப்பந்த தொழிலாளர் பிரச்னை உள்ளிட்டவைகளில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்கிறது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் குற்றம்சாட்டினார்.

கடலூரில் திங்கள்கிழமை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் அளித்த பேட்டி :

மே 18-ம் தேதி கடலூரில் மாவட்ட மாநாடு நடக்க இருந்தது. மைதானத்தில் அரசு பொருட்காட்சி நடப்பதால் மாநாட்டை ஜூன் 24-ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளோம். புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு மத்திய அரசு எந்தவித பெரிய அளவிலான உதவியும் செய்யவில்லை. தமிழக அரசு கோரிய நிதி உதவியும் வழங்கவில்லை. மத்திய அரசுக்கு எதிராக வரிகொடா இயக்கம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களை திரட்டி மத்திய அரசு அலுவலகம் முன் போராட்டம் நடத்தவுள்ளோம். கடந்த 25 ஆண்டுகளாக போராடிவரும் நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரமும், வீடு நிலம் வழங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் என நெய்வேலி நிர்வாகத்தை வலியுறுத்துவது, உச்ச நீதிமன்றம், நதிநீர் நடுவர் மன்றம் முல்லைப் பெரியாறு, காவிரி பிரச்னையில் அளித்த தீர்ப்பை கேரளம் மற்றும் கர்நாடக அரசு நடைமுறைபடுத்த மறுக்கிறது. இம்மாநிலங்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்துவது,

தனியார் கல்வி நிறுவனங்கள் பணக்கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன. எம்.பி.பி.எஸ். இடம் ரூ.75 லட்சத்துக்கு விலை பேசப்படுகிறது. தனியார் பள்ளிகளில் கட்டணக் கொள்ளை நடக்கிறது. இதை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. தமிழ் ஈழப் போரில் தமிழர்களை கொன்று குவித்த ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரவேண்டுவது, தனி ஈழம் குறித்து இலங்கை தமிழர் மத்தியில் ஐ.நா. முன்னிலையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாடு நடத்தப்பட உள்ளது.< மே-18-ம் தேதி குமராட்சி கடை வீதியில் இலங்கை முள்ளிவாய்கால் போரில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொண்டர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்த உள்ளனர். இந்நிகழ்ச்சியல் தமிழ், ஈழ ஆர்வலர்கள் பங்கேற்பர். ஊழல், லஞ்சத்தை ஒழிக்க படித்த இளைஞர் படையை அமைத்து, அவர்களை கண்காணிப்பு அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு ஊழல் லஞ்சவாதிகளை அடையாளம் காட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி துணை நிற்கும். அம்பேத்கர் கேலிச்சித்தரம் தொடர்பாக தொடர்புடையவர்கள் மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நித்யானந்தா:

மதுரை ஆதீனமாக நித்தியானந்தா தேர்வு செய்யப்பட்டதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. தன்மீது உள்ள வழக்குகளை நீதிமன்றத்தின் மூலம் பொய்யென நிருபித்துவிட்டு பின்னர் வேண்டுமானால் ஆதீனமாக பதவி ஏற்றுக்கொள்ளட்டும் என தி.வேல்முருகன் கூறினார். பேட்டியின்போது மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் தாண்டவராயன், பாடலிமணி, மாவட்டச் செயலர் பஞ்சமூர்த்தி, அமைப்பாளர் சக்திவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.





Read more...

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP