பா.ம.க., எம்.எல்.ஏ., வேல்முருகன் பேச்சு:

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

தேர்தல் வந்துவிட்டால் பா.ம.க., ஜாதிக்கட்சி என்று கூறுகின்றனர். பா.ம.க., கொள்கை உள்ள கட்சி. தமிழகத்தில் வேறு எந்த கட்சிக்கும் கொள்கை கிடையாது. கொள்கை தெரியாமல் நடத்தப்படும் கட்சிக்கெல்லாம் இன்று மக்கள் ஓட்டு போடுகின்றனர்.

Read more...

செல்போன் அரசியல் நடத்தக் கூடாது: பாமகவினருக்கு அன்புமணி கட்டளை

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

நெய்வேலி:

              பாமக நிர்வாகிகள் செல்போனில் அரசியல் நடத்துவதால் கிராமங்களில் கட்சி வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பாமகவினருக்கு செல்போன் ஒத்துவராது; அவற்றை உடைத்தெறியுங்கள் என்று நெய்வேலியில் வியாழக்கிழமை நடந்த கடலூர் மாவட்ட பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

கூட்டத்தில்  பாமக  இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்  பேசியது: 

               30 ஆண்டுகளுக்கு முன் கட்சியினர் சைக்கிள், பஸ் போன்றவற்றின் மூலம் கிராமம் கிராமமாக சென்று கட்சியை வளர்த்தனர். ஆனால் இப்போது அனைத்து இடங்களிலும் செல்போன் வந்துவிட்டதால் எவரும் கிராமப்புறத்துக்கு செல்வதில்லை. வீட்டிலிருந்தபடியே செல்போன் மூலம் தகவலை சொல்லிவிட்டு அமர்ந்து விடுகின்றனர். இதனால் கட்சி எப்படி வளரும்? கடந்த 10 ஆண்டுகளாக கட்சி வளர்ச்சி பெறவில்லை. எனவே நிர்வாகிகள் அனைவரும் கிராமங்களுக்குச் செல்ல வேண்டும். அங்குள்ள பிரச்னைகளை கையில் எடுத்துப் போராட வேண்டும். கட்சியின் அனைத்து கிளைகளிலும் 25 வயதுக்குட்பட்டவர்களையே நிர்வாகிகளாக நியமிக்கவேண்டும். கட்சியின் பழைய நிர்வாகிகள் இளைஞர்களுக்கு வழிவிடவேண்டும்.

            தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 33 சதவீதம் பேர் வன்னியர்கள். இதில் 20 சதவீதம் தான் இடஒதுக்கீடு கேட்கிறோம். தற்போதுள்ள இடஒதுக்கீட்டால் பிற ஜாதியினர் அதிகம் பயனடைகின்றனர். வன்னியர்கள் பயன் அடைவது குறைவாக உள்ளது.  தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டம், 108 ஆம்புலன்ஸ் சேவை போன்ற புதிய திட்டங்கள் எனது முயற்சியால் வந்த திட்டங்கள். ஆனால் இன்று யார்யாரோ அதற்கு சொந்தம் கொண்டாடுகிறார்கள். 

                 சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ரூ.400 கோடி செலவாகும் என்கிறார் தமிழக முதல்வர். தமிழகத்தின் ஆண்டு வரவு செலவு திட்டமதிப்பீடு ரூ.69 ஆயிரம் கோடி. இதில் ரூ.400 கோடி செலவு செய்ய முடியாதா என்ன? என்றார் அன்புமணி.  மாநிலத் தலைவர் கோ.க.மணி, எம்.எல்.ஏ. தி.வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Read more...

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP