நெய்வேலி மின்சாரத்தை கர்நாடகத்துக்கு கொடுப்பதை கண்டித்து அக்டோபர் 20-ல் முற்றுகைப் போராட்டம் - தி.வேல்முருகன் அறிவிப்பு

வியாழன், 11 அக்டோபர், 2012

 


                  நெய்வேலி மின்சாரத்தை கர்நாடகத்துக்கு கொடுப்பதை கண்டித்து அக்டோபர் 20-ல் முற்றுகைப் போராட்டத் திற்கு    தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் அழைத்துள்ளார்.

இது குறித்து      தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர்  பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு  

   காவிரி நீரை தமிழகத்துக்கு தர மறுத்து அடம்பிடிக்கும் கர்நாடகத்துக்கு தக்க பாடம் புகட்டுவோம்! தமிழ்நாட்டு நெய்வேலி மின்சாரத்தை கர்நாடகத்துக்கு கொடுப்பதை தடுத்து நிறுத்துவோம்! நெய்வேலியில் அக்டோபர் 20-ந் தேதி எனது தலைமையில் முற்றுகைப் போராட்டம்! நெய்வேலி அரசு மருத்துவமனையில் இருந்து ஒரு லட்சம் தமிழர் ஒன்று திரண்டு பேரணியாக சென்று நெய்வேலி முதலாவது அனல்மின் நிலையத்தை முற்றுகையிடுவோம்! தமிழ்நாட்டு மின்சாரம் தமிழ்நாட்டுக்கே பயன்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிற விவசாயத் தோழர்கள், தொழிலாளர்கள், தொழில்துறையினர், மாணவர்கள் என அனைத்துப் பிரிவினரும் குடும்பம் குடும்பமாக நெய்வேலியில் அக்டோபர் 20-ல் ஒன்று திரண்டு முற்றுகைப் போராட்டத்தை வெற்றி பெற வைப்போம்!

        சாதி, மத, கட்சி எல்லைகளைக் கடந்து தமிழராய் ஓரணியில் ஒன்று திரண்டு நெய்வேலி மின்சாரத்தை கர்நாடகத்துக்குக் கொடுப்பதை தடுத்து நிறுத்துவோம்! வாருங்கள் தமிழர்களே! ஒன்று திரள்வோம்!!



தி.வேல்முருகன்

நிறுவனர்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP