செங்கல்பட்டு, பூவிருந்தவல்லி ஈழத் தமிழர்கள் சிறப்பு தடுப்பு முகாம்களை இழுத்து மூட பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை

வெள்ளி, 30 நவம்பர், 2012


    செங்கல்பட்டு, பூவிருந்தவல்லி ஈழத் தமிழர்கள் சிறப்பு தடுப்பு முகாம்களை இழுத்து மூட பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை

          தமிழகத்தின் செங்கல்பட்டு, பூவிருந்தவல்லி ஆகிய சிறப்பு தடுப்பு முகாம்களில் விசாரணை ஏதுமின்றி விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் ஈழத் தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் தங்களை விடுதலை செய்யக் கோரி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என்பது தொடர் கதையாக நடந்துவருகிறது.

           போர் நடைபெற்ற இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள் கூட விடுவிக்கப்பட்டுவிட்டனர். ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்ககக் கூடும் என்று சந்தேகத்தின் பேரில் தமிழகத்தில் தடுத்து வைக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் இன்னமும் செங்கல்பட்டு, பூவிருந்தவல்லி போன்ற தடுப்பு முகாம்களில் வாடிவருகின்றனர்.

         ஈழத்து முள்வேலி முகாம்களைப் பற்றியும் தமிழகத்து திறந்த வெளி முகாம்களைப் பற்றியும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அக்கறை செலுத்துகிற அதே நேரத்தில் தமிழகத்தில் தடுப்பு முகாம் எனும் சிறைச் சாலைகளில் எந்தவித விசாரணையும் இன்றி அடைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்களது நிலைமையையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறது.

           எனவே, பூவிருந்தவல்லி மற்றும் செங்கல்பட்டு தடுப்பு முகாம்களை இழுத்து மூடி அங்கு அடைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்களை இதர அகதி முகாம்களுக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறோம்.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP