புதியக் கட்சி தொடக்க விழாவிற்கு பண்ருட்டி தி.வேல்முருகன் அழைக்கிறார்

வெள்ளி, 13 ஜனவரி, 2012

      சென்னையில் பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் தொடங்கப் போகும் புதியக் கட்சி தொடக்க விழாவிற்கு பண்ருட்டி தி.வேல்முருகன் அழைக்கிறார். 

இது  குறித்து முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினரும், இளம் புயல் பாசறை நிறுவனருமான  பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு 

    தமிழர் திருநாளாம், தை முதல் நாள்  (15-01-12) எனது தலைமையில் துவக்கப்படும் புதிய கட்சிக்கான துவக்க  விழாவிற்கு  தமிழின உணர்வாளர்களும், மாற்று அரசியல் மீது ஆர்வம் கொண்டோரும், வருகை தந்து இந்த புதிய அரசியலுக்கான துவக்க விழாவினை சிறப்பிக்க வேண்டுகிறேன். 

       புதிய கட்சிக்கான துவக்க  விழாவில்  பெயர், மற்றும், கொடி, மற்றும் கொள்கைகள், ஆகியவை அறிவிக்கப்படும். 

இடம்:

கட்சி தலைமையகம்,
எண்.145, 
குன்றத்தூர் சாலை,
எம்.எஸ்.ஆர். வளாகம் ,
போரூர்,
சென்னை  
  
நேரம் :

காலை 7:30 மணி

  புதிய கட்சியின் முதல் மாநாடு :

     புதிய கட்சியின் முதல் அரசியல் மாநாடு  கடலூரில் நடைபெறும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP