தியாகு அவர்களின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் உண்ணாவிரதம்

சனி, 5 அக்டோபர், 2013


இலங்கையில் நடக்க உள்ள காமன்வெல்த் மாநாட்டை தடுக்கவேண்டும் அல்லது அதில் இந்தியா பங்கேற்காமல் தவிர்க்க வேண்டும். சிங்கள அரசுக்கு இந்தியா போர்கப்பல்களை வழங்கக்கூடாது. இந்தியாவிலிருந்து கடல் அடி கம்பி வழியே இலங்கைக்கு மின்சாரம் வழங்கக் கூடாது. இலங்கைக்கு எதிராக இந்திய அரசு பொருளாதார தடை விதிக்கவேண்டும் உள்ளிட்ட 9 கோரிக்கையை வலியுறுத்தி உயர்நீதிமன்ற அனுமதியுடன் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் திரு. தியாகு 01.10.2013 (செவ்வாய்கிழமை) முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
 
தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தோழர் தியாகுவுக்கு ஆதரவாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன் மற்றும் கட்சித் தொண்டர்கள் 04.10.2013 வெள்ளிக்கிழமை நேரடியாக ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவளித்தனர்.
 


 


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP