மத்திய அரசை கண்டித்து சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்: பண்ருட்டி தி.வேல்முருகன் அழைப்பு

திங்கள், 14 அக்டோபர், 2013

 
 


தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கை தமிழர் பிரச்சினையில் காட்டுமிராண்டிதனமாக நடந்து கொண்ட ராஜபக்சேவை கண்டித்தும், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்தும், இதில் உரிய கவனம் செலுத்தாத மத்திய அரசை கண்டித்தும் சேப்பாக்கத்தில் இன்று (15/10/2013) மாலை தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

ாஜபக்சே தலைமையில் இலங்கையில் நடைபெற உள்ள காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது, 14 நாட்களாக சென்னையில் உண்ணா விரதம் இருக்கும் தியாகி தியாகுவின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும், செங்கல் பட்டு–பூந்தமல்லியில் உள்ள சிறப்பு முகாம்களை இழுத்து மூட வலியுறுத்துவது, இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்க கூடாது, இந்தியாவில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும், இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழ் ஆர்வலர்கள் உள்பட அனைவரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு வேல்முருகன் கூறி உள்ளார்.

இன்று 15/10/2013 நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு நிறுவனர் வேல்முருகன் தலைமை தாங்குகிறார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காவேரி, சண்முகம், காமராஜ், துணை பொதுச் செயலாளர் சத்ரியன், து.வெ.வேணுகோபால், தொழிற்சங்க தலைவர் கே.வி.சிவராமன் உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP