தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் விருத்தாசலம் நகர கட்சி அலுவலகத்தினை பண்ருட்டி தி.வேல்முருகன் திறந்து வைத்தார்

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்  விருத்தாசலம் நகர கட்சி அலுவலகம் திறப்பு விழா 30.08.2013 அன்று நடந்தது. மாவட்ட செயலாளர் சின்னதுரை தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பாலமுருகன், இளைஞர் படை அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சேகர் வரவேற்றார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் நகர  அலுவலகத்தை திறந்து வைத்தார். இதில், மாநில துணை பொது செயலாளர் கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் தியாகராஜன், செல்வம், வெங்கடாஜலம், ராஜசேகர், சுரேந்தர், நகர அமைப்பு செயலாளர் மணிகண்டன், நிர்வாகிகள் நவின்குமார், ஆனந்தபாபு, சக்திவேல், வெங்கடேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர். கணேசன் நன்றி கூறினார்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP