மக்கள் பிரச்னைக்காக ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளின் உயர்மட்டக் குழு: பண்ருட்டி தி.வேல்முருகன்

வெள்ளி, 30 டிசம்பர், 2011

சிதம்பரம்:

புவனகிரியை அடுத்த மஞ்சக்கொல்லையில் முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி தி.வேல்முருகன்  கூறியது: 

            முல்லைப் பெரியாறு பிரச்னைக்குத் தீர்வு காணும் வரை தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு மின்சாரம் செல்லப்படுவதை நிறுத்தக் கோரி நெய்வேலியில் போராட்டம் நடத்த உள்ளோம். மக்கள் பிரச்னைக்காக ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்க உள்ளோம்.

              வரும் ஜனவரி 15-ம் தேதி தை முதல் நாளான தமிழர் திருநாளன்று ஒரு புதிய கட்சி தொடங்க உள்ளோம், சென்னையில் முன்னாள் எம்.பி-க்கள், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் கலந்து பேசி புதிய கட்சியின் பெயர் அறிவிக்கப்படும். பா.ம.க. முக்கிய நிர்வாகிகள் என்னோடு தொடர்பில் உள்ளனர். இவர்களும் புதிய கட்சிக்கு வருவார்கள். 

          பேட்டியின் பொது   முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் சண்முகம், காவேரி, காமராஜ், முன்னாள் மாவட்டச் செயலாளர் ராயநல்லூர் உ.கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP