நெல்லிக்குப்பம் பா.ம.க.நிர்வாகிகள் விலகி தி.வேல்முருகனின் இளம்புயல் பாசறையில் இணைந்தனர்

செவ்வாய், 20 டிசம்பர், 2011

நெல்லிக்குப்பம் : 

           நெல்லிக்குப்பத்தில், பா.ம.க., நிர்வாகிகள் அனைவரும், கூண்டோடு விலகி, இளம்புயல் பாசறையில் இணைந்தனர். பா.ம.க.,வில் இருந்து,  முன்னாள் பண்ருட்டி எம்.எல்.ஏ., வேல்முருகன் நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, இளம்புயல் பாசறை என்ற அமைப்பைத் துவங்கி, அனைத்துப் பகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி வருகிறார். வரும் தை மாதம், அரசியல் கட்சியாக துவங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

          இந்நிலையில், நெல்லிக்குப்பம் பா.ம.க., நகர செயலர் வேலாயுதம், துணை செயலர் கார்த்திக், துணைத் தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட தேர்தல் பணிக் குழு செயலர் உமாநாத் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும், ராமதாஸ் நடவடிக்கையைக் கண்டித்து, அக்கட்சியிலிருந்து விலகி, பண்ருட்டி தி.  வேல்முருகனின் இளம்புயல் பாசறையில் இணைந்தனர். அனைத்து நிர்வாகிகளும், கூண்டோடு பா.ம.க.,வை விட்டு வெளியேறியதால், கட்சி செயல்பாடு முடங்கியுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP