தை முதல்நாளில் புதிய கட்சி: பண்ருட்டி தி.வேல்முருகன் அறிவிப்பு

வியாழன், 29 டிசம்பர், 2011

       முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி தி. வேல்முருகன்  நேற்று புதிய கட்சி தொடங்குவது குறித்து ஆதரவாளர் களுடன்  சேத்தியாதோப்பில் ஆலோசனை நடத்தினார். 

அப்போது முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி தி.வேல்முருகன் பேசியது 

      "நான் புதிய கட்சி தொடங்க முடிவு செய்துள்ளேன். ஜனவரி 15-ந் தேதி தை முதல்நாளில் இந்த கட்சி தொடங்கப்படும். கடசியின் பெயர், மற்றும் கொடி போன்றவை பின்னர் முடிவு செய்யப்படும். புதிய கட்சி
பா.ம.க.வுக்கு மாற்றாக புதிய  கட்சியாக இருக்கும். ஜனவரி 15-ந் தேதி மக்களை திரட்டி பொது கூட்டம் நடத்துவேன் அப்போது கட்சியின் பெயரை அறிவிப்பேன்.   

          இந்த கிராமத்தில் ஏராளமான வன்னியர்கள் உள்ளனர். இட ஒதுக்கீட்டுக்காக தீவிரமாக போராட்டம் நடத்தியவர்கள் எனவேதான் இந்த பகுதியை தேர்வு செய்து எனது கட்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளேன். முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பிறமுகர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு கட்சி பெயரை முடிவு செய்வேன். மேலும் தமிழக தேர்தல் அலுவலகம், இந்திய தேர்தல் ஆணையம் ஆகியவற்றிடமும் ஆலோசனை நடத்தி கட்சி பெயரை தேர்வு செய்வோம். இதற்காக விரைவில் டெல்லி சென்று தேர்தல் ஆணையத்திடம் பேச இருக்கிறோம்.  எங்கள் கட்சி தாய் தமிழர்களுக்காக போராடும் சாதி, மதம் சார்பற்ற கட்சியாக இருக்கும். எல்லாதரப்பு மக்களையும் கவரும் வகையில் கட்சியை நடத்துவோம். நாங்கள் கட்சி தொடங்கியதும் ஏராளமான பிரமுகர்களும், தொண்டர்களும் எங்கள் கட்சியில் சேர உள்ளனர்’’ என்று கூறினார். 

     கூடத்தில் முன்னாள் மக்களவை உறுப்பினர் பு.தா.இளங்கோவன், மற்றும் இளம் புயல் பாசறை  நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர் 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP