தை முதல் நாளில் கடலூர் மஞ்சை மைதானத்தில் இளைஞர்கள் பங்கேற்கும் பொது கூட்டம் : பண்ருட்டி தி.வேல்முருகன் அழைக்கிறார்

சனி, 17 டிசம்பர், 2011

 http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/VELMURUGAN_1.jpg

பண்ருட்டி:

           வரும் தை முதல் நாள் கடலூர் மஞ்சை மைதானத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் புதிய கட்சியின் பெயரையும், கொள்கை, லட்சியத்தையும் தெரியப்படுத்துவேன் என பண்ருட்டி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பண்ருட்டி தி.வேல்முருகன் பேசினார். இளம்புயல் எழுச்சிப் பாசறையின் நெய்வேலி சட்டமன்றத் தொகுதி ஆலோசனைக் கூட்டம் சிவக்குமார் தலைமையில் காடாம்புலியூரில் வியாழக்கிழமை நடந்தது.

ஆலோசனைக் கூட்டத்தில் பண்ருட்டி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பண்ருட்டி தி.வேல்முருகன்  பங்கேற்று  பேசியது: 

             27 ஆண்டுகளாக பாமகவுக்கு உழைத்த என்னை தற்போது நீக்கியதற்கு ராமதாசுக்கு நன்றி. நான் நினைத்திருந்தால் 10 ஆண்டுகளுக்கு முன்னரே அமைச்சராகி இருப்பேன். என் சொந்தப் பணத்தைக் கல்விக்கும், தொழில் தொடங்கவும் பலருக்கு கொடுத்து கட்சியை வளர்த்துள்ளேன்.என் பெயரைக் கூறி பணம் சம்பாதித்தவர்கள் எல்லாம் எனக்கு எதிராக பேசுகின்றனர்.கட்சிக்காக உழைத்த எங்கள் மீது எவ்வளவு பொய் வழக்குகள், இதில் எங்கள் பக்கம் உண்மை, நீதி, நேர்மை, நியாயம் இருந்ததால் வழக்கில் இருந்து வெளியேறினோம் என தி.வேல்முருகன் பேசினார்.

           கூட்டத்தில் தி.வேல்முருகனின் சகோதரர் தி.திருமால்வளவன், தலித் சக்திவேல், ஜோதிலிங்கம், இரா.சக்திவேல், இரா.அன்பழகன், உக்கரவேல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP