பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் புதியக் கட்சி: பஞ்சமூர்த்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

செவ்வாய், 22 நவம்பர், 2011

கடலூர்:

             பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் பண்ருட்டி எம்.எல்.ஏ.  வேல்முருகனின் ஆதரவாளர்கள் கூட்டம் கடலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.  கடலூர் கிழக்கு மாவட்ட இளம்புயல் எழுச்சிப் பாசறை என்ற அமைப்பு இக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து இருந்தது.

           பா.ம.க. முன்னாள் மாவட்டச் செயலாளர் பஞ்சமூர்த்தி தலைமை தாங்கினார். பாசறை நிர்வாகிகள் திருமால்வளவன், ஆனந்த், அருள்பாபு, பிரவின்குமார், முன்னாள் நகராட்சி உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், அமராவதி, கடலூர்  நகராட்சி உறுப்பினர் செந்தில் உள்ளிட்ட வேல்முருகன் ஆதரவாளர்கள் பலரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கிராமங்கள் தோறும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, வேல்முருகன் கரத்தை வலுப்படுத்தும் வகையில் பாசறையை பலப்படுத்தவும், நிர்வாகிகளை நியமிக்கவும் கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP