பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் புதியக் கட்சி: முன்னாள் எம்.பி. இளங்கோவன் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம்

செவ்வாய், 22 நவம்பர், 2011

சிதம்பரம்:

          முன்னாள் பண்ருட்டி எம்எல்ஏ வேல்முருகன் ஆதரவாளர்கள் கூட்டம் சிதம்பரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.  

         மறுமலர்ச்சி சீனுவாசன் வரவேற்றார். சிதம்பரம் நகராட்சி மூத்த நகர்மன்ற உறுப்பினர் ஆ.ரமேஷ் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் ராயநல்லூர் உ.கண்ணன், எஸ்.கே.ராஜேந்திரன், மு.முடிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முன்னாள் எம்பி பு.தா.இளங்கோவன், பாமகவிலிருந்து நீக்கப்பட்ட துணைப் பொதுச்செயலாளர் தி.திருமாவளவன், பாலகுருசாமி, மாவட்ட துணைச் செயலாளர் வீரசோழகன், விவசாய அணி மாவட்டச் செயலாளர் சேரலாதன், மாவட்ட வன்னியர் சங்கத் தலைவர் த.ராஜேந்திரன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் மு.ஆளவந்தார். புவனகிரி காசிநாதன், திருமுட்டம் சீனுவாசன், இளைஞரணி கே.ஆர்.ஜி.தமிழ்வாணன், மாணவர் சங்கம் ரவி.பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

            மேலும், ஒன்றியச் செயலாளர்கள் ஆ.தமிழரசன் (திருமுட்டம்), ரவிச்சந்திரன் (புவனகிரி), சரவணன் (பரங்கிப்பேட்டை), சி.கோபு (பரங்கிப்பேட்டை), கு.பா.சங்கர் (காட்டுமன்னார்கோயில்), பாலமுருகன் (விருத்தாசலம்), கேபிள் சீனுவாசன் (திருமுட்டம்) உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.  பண்ருட்டி வேல்முருகன் எடுக்கும் முடிவினை ஆதரித்து, அவரது பின்னால் எழுச்சியுடன் திரளாக நின்று பணியாற்றுவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP