நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் பா.ம.க. தேர்தல் பணிகள் துவக்கம்

வியாழன், 17 மார்ச், 2011

பண்ருட்டி : 

             நெய்வேலி தொகுதி பனிக்கன்குப்பம் ஊராட்சியில் பா.ம.க., வினர் சின்னம் வரையும் பணிகள் துவங்கினர். பண்ருட்டி தொகுதியில் இருந்த முந்திரி பயிர் செய்யும் கிராமங்கள் தற்போது மறுசீரமைப்பில் நெய்வேலி என்.எல்.சி., உள்ளடக்கி நெய்வேலி தொகுதியானது.

              இதனால் பண்ருட்டி எம்.எல்.ஏ., வேல்முருகன் நெய்வேலி தொகுதியில் போட்டியிட முடிவு செய்து கடந்த சில ஆண்டுகளாகவே நெய்வேலி தொகுதியில் பூத் வாரியாக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமித்து பணிகளை துவங்கினார். கடந்த சில வாரங்களாக கிராமங்களில் உள்ள வீட்டின் சுவர்களில் விளம்பரம் செய்வதற்காக வெள்ளையடித்தனர். நேற்று முன்தினம் முதல் மாம்பழ சின்னம் வரைந்து, சாதனை பட்டியல்களை எழுதி பணிகள் செய்து வருகின்றனர்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP