தி.வேல்முருகனுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்ற எம்.ஆர்.கே. வேண்டுகோள்

செவ்வாய், 22 மார்ச், 2011

நெய்வேலி:

               திமுக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் தி.வேல்முருகனுக்கு ஆதரவாக  தேர்தல் பணியாற்றுமாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டார். நெய்வேலித் தொகுதி பாமக வேட்பாளர் தி.வேல்முருகனுக்கு ஆதரவு கேட்டு தேர்தல் பணியாற்றுவது தொடர்பாக நெய்வேலி நகர திமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நெய்வேலியில் சனிக்கிழமை நடைபெற்றது.

அப்போது பேசிய தொமுச செயலர் கோபாலன், 

                 அனைவரும் ஓரணியில் திரண்டு, பாமக சார்பில் போட்டியிடும் தி.வேல்முருகனுக்கு களம் இறங்கி தேர்தல் பணியாற்றி, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

நிறைவுரையாற்றிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், 

              "திமுக-பாமக கூட்டணி ஏற்பட்டதில் வேல்முருகனுக்கும் பெரும் பங்கு உள்ளது.   அதனால் வேல்முருகனை வெற்றி பெற வைக்கவேண்டும்' என்றார் பன்னீர்செல்வம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP