நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் பா.ம.க.வேட்பாளர் வேல்முருகன் வேட்பு மனு தாக்கல்

வியாழன், 24 மார்ச், 2011




நெய்வேலி : 

            ""என்.எல்.சி., அதிகாரிகளுக்கு எதிரானவன் என, சில விஷமிகள், புரளியை கிளப்பி விடுகின்றனர்,'' என, பா.ம.க., வேட்பாளர் வேல்முருகன் கூறினார். கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் அவர், நில எடுப்பு துணை கலெக்டர் கந்தசாமியிடம்  மனு தாக்கல் செய்தார்.

 பின்பு  பா.ம.க., வேட்பாளர் வேல்முருகன் கூறியது 

                   நான், என்.எல்.சி., அதிகாரிகளுக்கு எதிரானவன் என்பது போன்ற புரளியை, சில விஷமிகள் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர். நான், என்.எல்.சி.,யில் பணிபுரியும் அனைவருக்கும் பாதுகாப்பாக இருப்பேன். ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்னைகளை விரைவில் முடித்துக் கொடுப்பேன். நெய்வேலி தொகுதியில் என்.எல்.சி., தொழிலாளர்களுக்கு எவ்வித குறையும் கிடையாது. அவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். அவர்களுக்கு ஏதேனும் பிரச்னைகள் உருவானால், தொ.மு.ச., - பா.தொ.ச. உள்ளிட்ட அனைத்து கட்சியின் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் இணைந்து பிரச்னைகளை சரி செய்வேன். இவ்வாறு வேல்முருகன் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP