பண்ருட்டி தொகுதி பாட்டாளி இளம்பெண்கள், இளைஞர்கள் பயிற்சிக் கூட்டம்: எம்.எல்.ஏ. வேல்முருகன் பங்கேற்ப்பு

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011


பயிற்சிக் கூட்டத்தில் பேசுகிறார் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் (இடமிருந்து 2-வது). (வலது படம்) கூட்டத்தில் பங்கேற்றோர்.
   
பண்ருட்டி:

             கூட்டணி குறித்து கவலைப்பட வேண்டாம். பா.ம.க.வின் தயவு இல்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.  

            தொகுதி பாட்டாளி இளம்பெண்கள், இளைஞர்கள் பயிற்சிக் கூட்டம் மாநில துணைப் பொதுச் செயலர் தி.திருமால்வளவன் தலைமையில் பேர்பெரியான்குப்பத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.  

கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியது.  

               நாட்டின் விலைமதிக்க முடியாத சக்திகள் இளைஞர்கள். எதிர்காலத்தில் நீங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என பா.ம.க. இப் பயிற்சிக் கூட்டத்தை நடத்துகிறது. வேறு எந்தக் கட்சிகளும் இதுபோல் கூட்டத்தை நடத்துவதில்லை.  தமிழகத்தில் சினிமா மோகம், இலவசம், சாராயப் புரட்சிதான் நடக்கிறது. மத்திய அமைச்சராக இருந்தபோது உயர்ந்த விருதுகளை பெற்று நமது சமுதாயத்துக்கு பெருமையை சேர்த்துள்ளேன். அமெரிக்காவில் 911 என்ற ஆம்புலன்ஸ் சேவையை பார்த்துதான் 108 ஆம்புலன்ஸ் சேவையை கொண்டு வந்தேன். 

            மேலும் பல்வேறு நல திட்டங்களையும் நடைமுறைப்படுத்தியுள்ளேன்.  தமிழகத்தில் பாமக ஆட்சி அமைக்கும்போது இடும் முதல் கையெழுத்து மது ஒழிப்பு தான். இதையெல்லாம் எண்ணிப்பார்த்து இளைஞர்களும், இளம்பெண்களும் பாடுபட வேண்டும். மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். பாமக தயவு இல்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்றார்.  
  
இக் கூட்டத்தில் கட்சி நிறுவனர் ராமதாஸ் பேசியது:  

            பாமக ஆட்சிக்கு வந்தால் அம்மா பெயர் முதல் எழுத்தாகவும், அப்பா பெயர் இரண்டாவதாகவும் போட சட்டம் கொண்டுவரப்படும்.  தமிழகத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதி நெய்வேலி தொகுதி என கூறவேண்டும். 5 பேர் முதல்வராகியே தீருவோம் என கூறுகின்றனர். இவர்கள் கோடம்பாக்கத்தில் இருந்து கோட்டைக்கு செல்ல நினைக்கின்றனர். பெண்களுக்கு சம உரிமை, வாய்ப்பு கொடுத்து சமுதாயத்தை உயர்த்துவோம், அனைவருக்கும் சமச்சீர்க் கல்வி, வேலைவாய்ப்பு அளிப்போம் என்றார்.  

             முன்னதாக கூட்டத்தில் கலந்துக்கொண்ட இளம் பெண்கள், இளைஞர்கள் பேசினர். அன்புமணி ராமதாஸ், உறுதிமொழி படிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.   பயிற்சிக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் கோ.க.மணி, அமைப்புச் செயலர் தி.வேல்முருகன், சொத்துப் பாதுகாப்பு குழுத் தலைவர் ஆர்.கோவிந்தசாமி, மாவட்டச் செயலர் அ.தர்மலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.ஒன்றியச் செயலர் டி.சி.முருகன் நன்றி கூறினார்.  

நெய்வேலியில்...  

            பின்னர் பாமக சார்பில் இளம் பெண்கள், இளைஞர்கள் பயிற்சிக் கூட்டம் நெய்வேலியில் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியது:  வன்னியர்களுக்கு இருக்கும் தகுதி வேறு யாருக்கும் இல்லை. வன்னியர்களுக்கு தகுதி இல்லையென்றால் வேறுயாருக்கும் தகுதி கிடையாது. கட்டி வா என்றால் வெட்டிக் கொண்டு வரும் சமுதாயம் நம் சமுதாயம்.  

              அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்கச் செய்யவேண்டும் என்பதே எங்களது குறிக்கோள். பாமக தலைமையில் ஆட்சி அமையும்போது, அம்பானி வீட்டு பிள்ளைகளுக்கு கிடைக்கின்ற கல்வி நம்மை போன்ற ஏழை, எளிய மக்களுக்கும் கிடைக்கச் செய்வோம்.   

                தனியாக டியூசன் எடுப்பவர்களை சிறையில் அடைப்போம். வீட்டுப் பாடம் ரத்து செய்யப்படும், தினமும் 2 மணி நேரம் விளையாட்டு. இதுபோன்ற சமச்சீர்க் கல்வி நடைமுறைப்படுத்தப்படும்.  பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி.யில் ஒருவர் கூட உயர் பதவியில் இல்லை. இந்நிறுவனத்தின் தலைவராக ஒரு வன்னியர் வரவேண்டும் அதற்கு பா.ம.க. பாடுபடும். நெய்வேலி தொகுதியில் பாமக தனித்து போட்டியிட்டாலும் படுத்துக் கொண்டே வெற்றிபெறுவோம் என்றார் ராமதாஸ்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP