முதல்வர் கருணாநிதியை அன்புமணி ராமதாஸ் மற்றும் வேல்முருகன் எம் எல்.ஏ சந்தித்தனர்

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011


        



















                சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்றும், முதல்வர் கருணாநிதி 6வது முறையாக மீண்டும் முதல்வர் ஆவார் என்றும், பாமக இளைஞர் அணி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் கூறினார்.  முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில், அன்புமணி ராமதாஸ் மற்றும் வேல்முருகன் எம் எல்.ஏ ந்தித்தனர். அப்போது அவரது சகோதரி மகன் திருமண விழாவுக்கான அழைப்பிதழை கொடுத்தார்.

பின்னர்  பேசிய அன்புமணி ராமதாஸ்,

                முதல் அமைச்சரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். எனது சகோதரி மகன் திருமண அழைப்பிதழை குடும்பத்தினருடன் சென்று கொடுத்து திருமண விழாவுக்கு அழைத்தேன்.   காங்கிரஸ், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ள தி.மு.க. கூட்டணி, மெகா கூட்டணி. இது சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெறும். முதல்வர் கருணாநிதி 6வது முறையாக மீண்டும் முதல்வர் ஆவார்.

               இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. 6 மாதங்களுக்கு முன்பே நாங்கள் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டோம். சட்டசபை தேர்தலின் போது, டாக்டர் ராமதாசும், நானும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று பிரசாரம் செய்வோம். தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து, தி.மு.க. கிளை ஒன்றிய நிர்வாகிகளுடன் நல்லிணக்க கூட்டங்கள் நடத்தப்படும். இதன் மூலம் தேர்தலில் சிறப்பாக பணி புரிய வாய்ப்பு ஏற்படும் என்றார்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP