15 வயதுள்ள வன்னிய இளைஞர்களை எங்களிடம் நம்பி ஒப்படையுங்கள்: எம்.எல்.ஏ.தி.வேல்முருகன் பேச்சு

திங்கள், 7 பிப்ரவரி, 2011

நெய்வேலி:

            கூட்டணி தொடர்பாக கோபாலபுரமோ அல்லது போயஸ்கார்டனோ செல்லாமலிருக்கவேண்டுமானால் வன்னியர்கள் அனைவரும் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும் என பண்ருட்டி எம்எல்ஏ தி.வேல்முருகன் நெய்வேலியில் வெள்ளிக்கிழமை பேசினார்.

நெய்வேலியில் உள்ள கட்சி பிரமுகர் இல்லத் திருமண விழாவுக்கு வெள்ளிக்கிழமை பாமக நிறுவனர் ராமதாசுடன் வந்த எம்.எல்.ஏ. வேல்முருகன் அங்கு பேசியது:

              பெண் சிசு கொலைகளுக்கு வரதட்சிணை தான் முக்கிய காரணம். எனவே வரதட்சிணையை வேரறுக்க வேண்டும். தமிழகத்தில் இரண்டரை கோடி வன்னியர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் பாமகவுக்கு வாக்களித்தால், நாம் போயஸ்கார்டனோ அல்லது கோபாலபுரமோ செல்ல வேண்டியிருக்காது. 15 வயதுள்ள வன்னிய இளைஞர்களை எங்களிடம் நம்பி ஒப்படையுங்கள், வருங்காலத்தில் தமிழகத்தில் ஒரு வன்னியரை முதல்வராகிக் காட்டுகிறோம். பாமக தலைமையில் ஆட்சி அமையுமேயானால், மது விலக்கை அமல்படுத்துவதே முதல் கையெழுத்தாக இருக்கும் என்றார் வேல்முருகன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP