நெய்வேலியில் பா.ம.க. பிரமுகர் இல்ல திருமண விழா: எம்.எல்.ஏ. வேல்முருகன் பங்கேற்ப்பு

சனி, 5 பிப்ரவரி, 2011

நெய்வேலி:

             நெய்வேலியில் பா.ம.க. பிரமுகர் இல்ல திருமண விழாவில் டாக்டர் ராமதாஸ் இன்று கலந்து கொண்டார்.  அதற்கு அவர் கூட்டணி குறித்து இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. விரைவில் முடிவு எடுப்போம் என்று ராமதாஸ் கூறினார். 
முன்னதாக மண மக்களை வாழ்த்தி டாக்டர் ராமதாஸ் பேசியது:-

              வன்னியர் சமூகத்தில் கடந்த பல ஆண்டுகளாக மாணவ- மாணவிகள் கல்வி துறையில் முன்னேற்றம் அடையாமல் உள்ளனர். இப்போது நெய்வேலியில் மேடையில் வாழ்¢த்தி பேசிய சுமதி என்ற பெண் தனது மகன் ஐ.ஐ.டி. தேர்வில் வெற்றி பெற்று ராஜஸ்தானில் படித்து வருவதாக குறிப்பிட்டார்.

             இதுபோல வன்னிய சமூகத்து மாணவர்கள் கல்வியில் ஆர்வம் கொண்டு படிக்க வேண்டும். வன்னியர் சமூகத்துக்கான தனி இட ஒதுக்கீடு குறித்து பிரதமரிடமும் சோனியா காந்தியிடமும் வலியுறுத்தி பேசியதால் அன்றைய தினமே மந்திரி சபை கூட்டத்தில் தனி ஒதுக்கீடு பெற்று வெற்றி கண்டோம். வன்னியர் சமூக மாணவ- மாணவிகள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். ஆகிய தேர்வுகள் எழுத பயிற்சி அளிக்க திண்டிவனத்தில் தனி பயிற்சி கூடம் அமைக்கப்பட்டு வருகிறது.

             இதில் மாணவ- மாணவிகள் சேர்ந்து பயன்பெற வேண்டும். நமது சமூகத்தினர் உயர் பதவிகளுக்கு வராததற்கு காரணம் ஒற்றுமையின்மை. இதற்கு என்ன வழி என்று கேட்டால் 15 வயதில் இருந்து 30 வயது வரை உள்ளவர்களை என்னிடத்தில் விடுங்கள். அவர்களுக்கு ஒற்றுமை உணர்வை தூண்டி வெற்றி பெற வைக்கிறேன்.  நமது சமூகம் பின் தங்கியதற்கு மற்றொரு காரணம் மதுவிற்கு அடிமையானதுதான். மதுவை முழுமையாக விட்டொழிக்க சபதம் ஏற்று ஆண்கள் செயல்பட வேண்டும். கிராமங்களில் சாராயம் காய்ச்சுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸ் அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். பெண்கள் சமூகத்தில் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

                நிகழ்ச்சியில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, வேல்முருகன் எம்.எல்.ஏ., காடுவெட்டி குரு மற்றும் நெய்வேலி பாட்டாளி தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP