பா.ம.க.பயிற்சிப் பாசறை அரசு வேலைகளுக்கான பயிற்சி வகுப்பு நிறைவு: தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. சால்வை அணிவித்தார்

புதன், 23 பிப்ரவரி, 2011


கடலூர்:
               
           மருத்துவர் அய்யா பயிற்சிப் பாசறை நடத்தும், மத்திய, மாநில அரசு வேலை வாய்ப்புக்கான இலவச பயிற்சி மையம் முலம், கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான பயிற்சி நிறைவு விழா கடலூரில் செவ்வாய்க்கிழமை நடந்தது. விழாவுக்கு பயிற்சி மையத்தின் நிர்வாக இயக்குநர் தி.திருமால்வளவன் தலைமை வகித்தார். 

            பயிற்சியாளர்கள் ராம்பாபு, மோகன், சுந்தர் கணேஷ், பேராசிரியர் சுகி, கிராம நிர்வாக அலுவலர் விஸ்வநாதன் ஆகியோரைப் பாராட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. சால்வை அணிவித்தார். மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி அசோகன், சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர் கமலக் கண்ணன், போலீஸ் உதவி ஆய்வாளர் ஆனந்தபாபு, தொழிலதிபர் துரைராஜ் உள்ளிட்ட பலர் வாழ்த்திப் பேசினர். விஜயலட்சுமி நன்றி கூறினார்.

Halloween

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP