கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் பண்ருட்டி எம்.எல்.ஏ.,வேல்முருகன் பங்கேற்ப்பு

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

கடலூர்:

                 ஞாயிற்றுக்கிழமை நடந்த கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் பண்ருட்டி எம்.எல்.ஏ.,வேல்முருகன், மாவட்ட ஊராட்சித் தலைவர் சிலம்புச் செல்வி, பா.ம.க. முன்னணித் தலைவரும் மாவட்ட ஊராட்சி உறுப்பினருமான ப.சண்முகம் உள்ளிட்ட தலைவர்களும், தொண்டர்களும் ஏராளமாகக் கலந்து கொண்டனர்.     

விழாவில் வேல்முருகன் எம்.எல்.ஏ. பேசுகையில், 

                இந்த விழாவில் கலந்து கொள்வதன் மூலம் கூட்டணி உறுதியாகி விட்டதா என்று பத்திரிகையாளர்கள் கேட்கிறார்கள்.  கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி திட்டம் நீண்டநாள் கோரிக்கை. அந்த கோரிக்கை நிறைவேற்றியதற்காக நன்றி தெரிவிக்க வந்தேன். முன் அனுமதி பெறாமலேயே முதல்வரையும் துணை முதல்வரையும் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றவன் நான்.  கூட்டணி பற்றி பாமக நிறுவனர் ராமதாசும் முதல்வர் கருணாநிதியும் முடிவு செய்வர் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP