நெய்வேலியில் பா.ம.க. பயிற்சி முகாம் எம்.எல்.ஏ. வேல்முருகன் பங்கேற்ப்பு

திங்கள், 31 ஜனவரி, 2011

நெய்வேலி : 

           கடந்த 43 ஆண்டுகளாக தமிழக முதல்வர்களாக சினிமாவை சேர்ந்தவர்கள் மட்டுமே இருந்து வரும் நிலைமை மாற வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பேசினார். 

            கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பா.ம.க., பயிற்சி கூட்ட அரங்கம் நேற்று நடந்தது. தலைவர் மணி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ., வேல்முருகன் வரவேற்றார். நிர்வாகிகள் திருமால்வளவன், வடக்குத்து ஜெகன், வைத்தியலிங்கம், சக்கரவர்த்தி முன்னிலை வகித்தனர். 

நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பேசியது: 

               தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சிகளில் உள்ள வன்னியர் சொந்தங்களை பா.ம.க.,விற்கு கொண்டு வர நீங்கள் அனைவரும் போராட வேண்டும்.மதுவை ஒழிப்போம் என தி.மு.க., - அ.தி.மு.க.,வால் சொல்ல முடியுமா? ஆனால் பா.ம.க., ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு குறித்ததாகத் தான் இருக்கும். 

              அதுபோல அனைவருக்கும் இலவச கல்வி, படித்து முடித்தவுடன் இலவச வேலைவாய்ப்பு. ஆனால் வேறு எதையும் இலவசமாக வழங்க மாட்டோம். பா.ம.க.,வைத் தவிர பிற கட்சிகள் வளர்ந்து, சரிந்து, முடிந்துபோன கட்சிகள். கடந்த 43 ஆண்டுகளாக தமிழக முதல்வராக சினிமாவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இருந்த நிலை மாற வேண்டும். பா.ம.க., தயவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. நெய்வேலி தொகுதியில் பா.ம.க., தனித்து நின்றாலே ஜெயிக்கும்.

              பா.ம.க.,விற்காக உழைத்து கட்சியிலிருந்து விலகியவர்களை சந்தித்து அவர்களுக்கு சால்வை அணிவித்து நான் கவுரவிக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார். 

பா.ம.க., நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:

           அம்பானி மகனுக்கு கிடைக்கும் தரமான அதே கல்வி, என் சமுதாய மக்களுக்கும் கிடைக்க போராடுவேன். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் ஒரு சொட்டு சாராயம் கூட இருக்காது. நமது கட்சியில் வயதானவர்கள் விலைபோய் விடுவார்கள். ஆனால் இளைஞர்கள் விலை போக மாட்டார்கள். 

           தேர்தலின்போது, கொள்ளையடித்த பணத்திலிருந்து 500, 1000 ரூபாய் என அவர்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் உனக்கு தான் ஓட்டுப்போடுவோம் எனக்கூறி, அவர்கள் தரும் பணத்தை வாங்கி கொண்டு மாம்பழத்திற்கு ஓட்டு போடுங்கள். ஏனென்றால் அவர்கள் உங்களிடம் கொள்ளையடித்த பணத்தை தான் உங்களுக்கு திரும்பித் தருகின்றனர். இவ்வாறு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார். 


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP