தேர்ச்சி விழுக்காடு குறைவு: எம்.எல்.ஏ. தி.வேல்முருகன்புது யோசனை

திங்கள், 21 ஜூன், 2010

பண்ருட்டி:
           பண்ருட்டி வட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விழுக்காடு குறைவாக உள்ளதால் தலைமையாசிரியர்களின் கூட்டம் நடத்த வேண்டும் என எம்எல்ஏ தி.வேல்முருகன் மாவட்ட ஆட்சியரிடம் கூறினார். 

பண்ருட்டியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி துவக்கி வைக்க வந்த மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமனிடம் பண்ருட்டி எம்எல்ஏ தி.வேல்முருகன் கூறியது: 

                பண்ருட்டி வட்டத்தில் உள்ள சில அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் 10 மற்றும் பிளஸ் 2 தேர்வில் நல்ல தேர்ச்சி விழுக்காடு பெற்று சிறந்து விளங்குகிறது. ஆனால் ஏனைய பள்ளிகளின் தேர்ச்சி விழுக்காடு மோசமாக உள்ளது.இதனால் பண்ருட்டி வட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் கூட்டத்தை கூட்டி, சிறப்பு வகுப்புகள் நடத்தி தேர்ச்சி விழுக்காட்டை உயர்த்த அறிவுறுத்த வேண்டும் என தி.வேல்முருகன் கேட்டுக்கொண்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP