தமிழ்த்தேசம் எதிர்நோக்கும் வாழ்வுரிமை சிக்கல்களுக்கு தீர்வு காண பண்ருட்டி தி.வேல்முருகன் ஒருங்கிணைக்கும் ஆலோசனைக் கூட்டம்

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

     தமிழ்த்தேசம் எதிர்நோக்கும் வாழ்வுரிமை சிக்கல்களுக்கு தீர்வு காண பண்ருட்டி தி.வேல்முருகன் ஒருங்கிணைக்கும் ஆலோசனைக் கூட்டம் நடை பெற உள்ளது.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு

எம் தமிழ் உறவுகளே!
 
             உரிய உரிமை இருந்தும் தமிழனுக்கு காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடகம் தென்தமிழகத்து வாழ்வாதாரமாம் முல்லைப் பெரியாறை தரைமட்டமாக்க கடப்பாரை தூக்கும் கேரளம் வடதமிழகத்து பாலாற்றைப் பாலைவனமாக்க கங்கணம் கட்டும் அடாவடி ஆந்திரம் காக்கை குருவிகளாய் வங்கக் கடலில் தமிழக மீனவர்களை சுட்டுப் படுகொலைசெய்யும் சிங்களம் முள்வேலி வதை முகாம்களைவிட கொடூரங்கள் கோலோச்சும் தமிழகத்து அகதி முகாம்கள் தமிழனை ஏமாற்றி கொல்லைப்புறத்தில் கொடுங்கோல் சிங்களவனுக்கு ஆயுத பயிற்சி கொடுக்கும் இந்திய அரசு ஊழல்பேர்வழிகளால் சுரண்டியெடுக்கப்படும் தமிழகத்து இயற்கை வளங்கள்... இன்னும்...இன்னும்.. தமிழ்த்தேசம் எதிர்நோக்கும் இன்னபிற வாழ்வுரிமை சிக்கல்களுக்கு தீர்வு காண வாருங்கள் தமிழர்களே! மூன்று தமிழருக்காய் வெந்தணலுக்கு தமை ஈந்த தோழர் செங்கொடியின் காஞ்சிபுரம் நினைவரங்கில் தமிழராய் ஒன்று கூடுவோம்

       சாதி மதங்கள் கட்சிகள் இயக்கங்களை கடந்து தமிழராய் ஒன்று கூடி உரிமைப் போரில் வெல்ல வியூகம் வகுப்போம்! உறவுகளே! உரிமைக்கு குரல் கொடுக்க ஒன்று கூடி விவாதிப்போம்! வாருங்கள்!


இடம்: தோழர் செங்கொடி நினைவரங்கம்,
   
               காஞ்சிபுரம்.



நேரம்: செவ்வாய்க்கிழமை (28/08/2012), மாலை 3 மணி

ஒருங்கிணைப்புக்காக தி.வேல்முருகன்

தொடர்பு எண்: 9500093330


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP