தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு கீழ் நீதிமன்றத்தால் ஒரு மாவட்ட நீதிபதியால் கொடுக்கப்பட்ட தீர்ப்புதானே தவிர இறுதித் தீர்ப்பு அல்ல - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அறிக்கை

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014




தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

மாண்புமிகு முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் தடைகளைத் தகர்த்தெறிந்து தமிழகத்தின் நல்லாட்சியை தொடருவார்!

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மீதான வழக்கின் தீர்ப்பு என்பது தற்போதைய நிலையில் கீழ் நீதிமன்றத்தால் ஒரு மாவட்ட நீதிபதியால் கொடுக்கப்பட்ட தீர்ப்புதானே தவிர இறுதித் தீர்ப்பு அல்ல.

இந்த தீர்ப்பை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே சட்டத்தையும் நீதித்துறையையும் மதித்து ஏற்றுக் கொண்டும் இருக்கிறார். நமது நாட்டின் நீதித்துறை அமைப்பில் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவையும் இருக்கின்றன.

உரிய சட்ட நடைமுறைகள் மூலம் நிச்சயமாக தமக்கான தடைகளை தகர்த்தெறிவார் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள். பொய்வழக்கு சதிகளைத் தகர்த்து புரட்டல்காரர்களுக்கு தக்கதோர் பாடத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் புகட்டுகின்ற நாள் வெகுதொலைவில் இல்லை.

தற்போது நீதித்துறை அளித்த தீர்ப்பை ஏற்றுள்ள நிலையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலில் தமிழகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ் மக்களுக்கான நல்லாட்சியை தொடர்ந்தும் வழங்கும்.

எப்படி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆட்சி உலகத் தமிழர்களுக்கான நல்லரசாக முன்னுதாரணமிக்க மக்களுக்கான அரசாக திகழ்ந்ததோ அதுபோலவே அவரது தொடர் வழிகாட்டுதலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசும் தமிழினத்துக்கான மக்களுக்கான போற்றுதலுக்குறிய நல்லரசாகவே தொடரும்.

தமிழ்ச் சமூகம் எதிர்கொண்டிருக்கும் உரிமை மீட்பு பிரச்சனைகள், ஈழத் தமிழர் மற்றும் மீனவர் விவகாரங்களில் தமிழர் நலனுக்கான ஒரே அரசாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசும் தொடர்ந்தும் செயல்பட்டு இன எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாகவே திகழும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP