5 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் தமிழர் நீதிப் பேரணி - பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

வியாழன், 25 செப்டம்பர், 2014

தலைநகர் சென்னையை உலுக்கியெடுத்த 150க்கும் மேற்பட்ட அரசியல் இயக்கங்கள், தமிழர் அமைப்புகள், மாணவர் இயக்கங்கள், படைப்பாளிகள், மனித உரிமை ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என 24.09.2014 அன்று நடைபெற்ற மாபெரும் தமிழர் நீதிப் பேரணியில் பங்கேற்று தமிழர் தம் ஒற்றுமையை வெளிப்படுத்திய அத்தனை தோழமை சக்திகளுக்கும் என் பெரு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்! தமிழர் வாழ்வுரிமையை மீட்டெடுப்பெதற்கான பெரும் போராட்டத்தில் இது முதல் தொடக்கமே! தமிழர் வாழ்வுரிமை வென்றிட ஜாதி, மத, கட்சி எல்லைகளைக் கடந்து இதேபோல் ஒன்றிணைவோம்! தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அழைப்பை ஏற்று தமிழின ஒற்றுமையை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்திய அத்தனை இயக்கங்களின் தலைவர்களுக்கும் தோழர்களுக்கும் என் நெஞ்சாந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. நாம் தொடர்ந்து இணைந்து போராடுவோம்! தமிழர் வாழ்வுரிமையை மீட்டெடுப்போம்!!!


அன்புடன்
 
பண்ருட்டி தி. வேல்முருகன்.
 
தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி

































0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP