மெட்ராஸ் கபே திரைப்படத்தை தமிழ்நாட்டில் எந்த திரையரங்கிலும் திரையிட விடமாட்டோம் : பண்ருட்டி தி.வேல்முருகன் எச்சரிக்கை

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

மெட்ராஸ் கபே திரைப்படத்தை தமிழ்நாட்டில் எந்த திரையரங்கிலும் திரையிட விடமாட்டோம் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் கூறி உள்ளார்.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன்  வெளியிட்டுள்ள அறிக்கை:


ஈழத் தமிழர்களின் ஈழ விடுதலையை கொச்சைப்படுத்தி ஈழ விடுதலை போராளிகளை தீவிரவாதிகளாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ள மெட்ராஸ் கபே திரைப்படத்தை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும். தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து படத்தை வெளியிடுவதை படத்தயாரிப்பாளர்கள் கைவிட வேண்டும். இந்த படத்தை மீறி வெளியிட முயற்சித்தால் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொண்டர்கள் அதனை தடுத்து நிறுத்துவார்கள் என்று எச்சரிக்கிறோம்.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP