பிரதமர் வருகையை கண்டித்து திருச்சியில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் : தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் அழைப்பு

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013


பிரதமர் வருகையை கண்டித்து திருச்சியில் இன்று 02/08/2013 கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில்  தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்கும் என மிழக வாழ்வுரிமைக் கட்சி  நிறுவனர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள மிழக வாழ்வுரிமைக் கட்சி  நிறுவனர் தி.வேல்முருகன் அறிக்கை: 
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு வருகின்றார்கள் அது மட்டுமின்றி மீனவர்களை ஆயுதங்கள் மற்றும் பெட்ரோல் வெடிகுண்டுகள் மூலம் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். தற்போது கடலுக்கு சென்ற நாகை மற்றும் காரைக்கால் பகுதி மீனவர்கள் 34 பேரை இலங்கை மட்டுமின்றி தற்போதூ ஈரான் நாட்டு அரசாங்கமும் தமிழக மீனவர்களை சிறைப்பிடித்து துன்புறுத்துகின்றது. ஈழத்தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் தொடர்ந்து துரோகம் இழைக்கின்ற மத்திய அரசை கண்டித்தும், தமிழக மீனவர்களை காக்க வேண்டிய கடமையை ஆற்றாத பிரதமர் மன்மோகன்சிங்கை கண்டித்தும், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஆகஸ்டு 2-ந்தேதி (இன்று) திருச்சி விமான நிலையத்தில் கருப்புக் கொடி ஏத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP