புவனகிரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் அறிவுச் செல்வனை ஆதரித்து டாக்டர் ராமதாஸ் பிரச்சாரம்

சனி, 2 ஏப்ரல், 2011

சிதம்பரம்,

           சேத்தியாத்தோப்பு பொதுக்கூட்ட மேடையில் புவனகிரி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அறிவுச் செல்வனை ஆதரித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

அப்போது பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
கூறியது:-  

               வீரமும், விவேகமும் நிறைந்த இந்த தொகுதியில் உங்களது வெற்றி வேட்பாளர் அறிவுச்செல்வன் போட்டியிடுகிறார். அவர் சில தேர்தல் வாக்குறுதிகளை கூறி நிறைவேற்றுவதாக கூறி உள்ளார். நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை வேல் முருகனும், நானும் போராடி பெற்று தருவோம். போராட்டம் நடத்தி வருவதால் என்னை போராட்ட மன்னன் என்று நடிகர் கூறியுள்ளார். அவர் எதற்காக போராடினார். என்னையும், கருணாநிதி யையும் அறிக்கை மன்னன் என்றும் அவர் கூறியுள்ளார்.

                நாங்கள் அறிக்கை தான் விட முடியும். இந்த தொகுதி பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் கோட்டை. சாதாரண கோட்டை அல்ல.எக்கு கோட்டை, இந்த கோட்டையில் ஓட்டை போட முடியாது.ஓட்டு தான் போட முடியும்.தேர்தல் அமைதியான முறையில் நடக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய ஆசை. வீரம் செறிந்த இந்த தொகுதியில் நமது வேட்பாளரை அதிக ஓட்டு வித்தியாசத்தில் பெற்றி பெற செய்ய வேண்டும்.  இவ்வாறு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

              கூட்டத்தில் வேல்முருகன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சிலம்புச் செல்வி, ஒன்றியக்குழு தலைவர் தனலட்சுமி கலைவாணன், சரவணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி கங்கை அமரன், செல்லப்பன், சுதாகர்,மோகன், ஜெயசீலன், தமிழ்க்குமரன், பா.ம.க.சிட்டிபாபு, தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜெயராமன், பா.ம.க. மாவட்ட செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP