நெய்வேலியில் கொளுத்தும் வெயிலில் பா.ம.க வேட்பாளர் வேல்முருகன் வாக்கு சேகரிப்பு

ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

நெய்வேலி:

                நெய்வேலி தொகுதி பா.ம.க. வேட்பாளர் வேல்முருகன் கொளுத்தும் வெயிலில் நெய்வேலி டவுன்ஷிப் 1-வது வட்டத்திலிருந்து 10-வட்டம் வரை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காலை 10 மணிக்கு நெய்வேலி புதுநகர் 1-வது வட்டம் பெரியார் சிலைக்கு, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் வேட்பாளர் வேல்முருகன் ஆகியோர் மாலை அணிவித்தார்.

            பின்னர் முக்கிய வீதிகள் வழியாக செல்லும் பொதுமக்கள், வணிகர்கள், தொழிலாளர்களிடம் வேல்முருகன் வாக்கு சேகரித்தார். வாக்கு சேகரிப்பின்போது தி.மு.க. நகர செயலாளர் புகழேந்தி, தொ.மு.ச. நிர்வாகிகள் வீர.ராமச்சந்திரன், கோபாலன், ரகுராமன், காத்தவராயன், பா.ம.க. நகர செயலாளர் சக்கரவர்த்தி, பாட்டாளி தொழிற்சங்க நிர்வாகிகள் பெருமாள், திலகர், மோனிகா, சுப்ரமணியன், முன்னாள் வன்னியர் சங்க தலைவர் ஜோதிலிங்கம், சிவந்தான்செட்டி, ராசவன்னியன், ஸ்ரீதர், முருகேசன், ஆரோக்யதாஸ், சம்பூவராயர், ஜோதிபிரகாசம், காங்கிரஸ் நகர செயலாளர் கோவிந்தராஜ், பாலாஜி, ராதாகிருஷ்ணன், கலியபெருமாள், சந்திரமோகன், திருநாவுக்கரசு, நிக்ஸன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 
பின்னர் வேல்முருகன் கூறியது:-


               தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைவதில் எள்ளவும் சந்தேகமில்லை. கட்சி பாகுபாடின்றி தி.மு.க.வை சேர்ந்த தொ.மு.ச., பா.ம.க.வை சேர்ந்த பாட்டாளி தொழிற்சங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தொழிலாளர் விடுதலை முன்னணி, மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த மூ.மு.தொழிற்சங்கம், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்கம் உள்பட அனைத்து கூட்டணி அமைப்பினரும் எனது வெற்றிக்காக கடுமையாக பாடுபட்டு வருகின்றனர்.

             இவர்களின் தொய்வில்லாத பணி தமிழகத்தில் மீண்டும் கலைஞர் ஆட்சியை உறுதி செய்து வருகிறது. அவர்களுக்கு என்றென்றைக்கும் நன்றி கடன் பட்டுள்ளேன். கலைஞர் ஆட்சியின் பல்வேறு சாதனைகளை மக்கள் உணர்ந்துள்ளனர். அதன் வெளிப்பாடே நான் செல்லும் இடங்கலெல்லாம் மீண்டும் கலைஞர் ஆட்சி தேவை என்று பொதுமக்கள் கூறுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
 
 


 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP