பாரிஸில் நடைபெறும் முள்ளிவாய்க்கால் மானுடப்பேரவலம் தமிழின அழிப்பின் ஆறாம் ஆண்டு நினைவேந்தலில் பங்கேற்க தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் பிரான்ஸ் சென்றடைந்தார்

புதன், 13 மே, 2015

பாரிஸில் 18.05.2015 அன்று நடைபெறும் முள்ளிவாய்க்கால் மானுடப்பேரவலம் தமிழின அழிப்பின் ஆறாம் ஆண்டு நினைவேந்தலை புலம்பெயர் தொப்புள் கொடி உறவுகளுடன் இணைந்து நினைவு கூற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி திரு தி.வேல்முருகன் அவர்கள் 12.05.2015 அன்று பிரான்சு-பாரிஸ் நகரை சென்றடைந்தார்.
பாரிஸ் விமான நிலையத்தில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு செயல்பாட்டாளர்கள் மற்றும் பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை செயல்பாட்டாளர்கள் தமிழீழ தேசியக்கொடியுடன் சென்று பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்களை வரவேற்றார்கள். பாரிஸில் மே 18 ஆம் தேதி நடைபெறும் தமிழின அழிப்பின் ஆறாம் ஆண்டு நினைவேந்தலில் கலந்து கொள்வதுடன் ஐரோப்பாவில் ஈழத் தமிழர் உறவுகளை சந்திக்க மிக ஆர்வத்துடன் உள்ளதாக பண்ருட்டி தி.வேல்முருகன் தெரிவித்தார்.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP