தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் தந்தை தங்க.திருநாவுக்கரசு மரணம்: செல்வி ஜெ.ஜெயலலிதா இரங்கல்

திங்கள், 22 டிசம்பர், 2014

 
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் தந்தை மரணம்: முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான செல்வி ஜெ.ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான செல்வி ஜெ.ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் அன்புச் சகோதரர் வேல்முருகனின் தந்தை திருநாவுக்கரசு உடல் நலக் குறைவால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன். அன்புத் தந்தையை இழந்து வாடும் வேல்முருகன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP