ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் ஐ.எப்.எஸ். பணிகளுக்கான மத்திய அரசின் யு.பி.எஸ்.சி தேர்வுகளுக்கான வயது வரம்பு குறைக்கப்பட்டதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன்கடும் கண்டனம்

வெள்ளி, 21 நவம்பர், 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் அவர்கள் இன்று 21.11.2014 வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய அரசே! ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ். தேர்வுகளுக்கான வயது வரம்பை குறைப்பதைக் கைவிடுக!!

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் ஐ.எப்.எஸ். பணிகளுக்கான மத்திய அரசின் யு.பி.எஸ்.சி தேர்வுகளுக்கான வயது வரம்பு குறைக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்துக்குரியது.

பொதுவாக யு.பி.எஸ்.சி. தேர்வுகளை எஸ்.சி/ எஸ்.டி/ மாற்றுத் திறனாளிகள் 21 முதல் 35 வயது வரை எழுதலாம் என்பதுதான் இதுவரையிலான நடைமுறை. ஆனால் தற்போது 21 வயது முதல் 29 வயது வரை மட்டுமே எழுத முடியும் என்று அறிவித்திருப்பது கடும் அதிர்ச்சிக்குரியது.

இதேபோல் ஓபிசி எனப்படுகிற இதர பிற்படுத்தப்பட்டோர் இதுவரை 33 வயது வரை தேர்வு எழுதலாம் என்ற நிலை இருந்தது. இதையும் கூட 28 வயது என்று குறைத்திருக்கின்றனர். பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 30 வயது வரை எழுதலாம் என்பதை 25 வயது வரை மட்டுமே தேர்வு எழுதலாம் என்றும் மத்திய அரசு குறைத்துள்ளது.

இந்த வயது வரம்பு குறைப்பு நடைமுறை அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட இருக்கிறது. இது தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். காலங்காலமாக ஒடுக்கப்பட்ட சமூகங்கள் மேம்படுவதற்கான வாய்ப்பை மறுப்பது கடுமையான கண்டனத்துக்குரியது.

முந்தைய மக்கள் விரோத காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அளிக்கப்பட்ட பரிந்துரையை "மாற்றத்துக்கான அரசு" என்ற முழக்கத்துடன் ஆட்சியில் இருக்கும் நரேந்திர மோடி தலைமையிலான அரசும் கடைபிடிக்க முனைவது வேதனைக்கும் கண்டனத்துக்கும் உரியது.

இதனால் அடித்தட்டு சமூகங்களின் இளைஞர்களின் எதிர்காலத்தையும் கனவையும் குழிதோண்டி புதைக்கும் இந்த வயது வரம்பு குறைப்பு நடவடிக்கையை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP