கடலூர் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவனை ஆதரித்து ஜெயலலிதா அவர்கள் பிரசாரம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் பங்கேற்பு

திங்கள், 24 மார்ச், 2014

கடலூர் மஞ்சை நகர் மைதானத்தில் 23.03.2014 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கடலூர் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவனை ஆதரித்து தமிழக முதல்வரும், அ.தி.மு.க. பொதுச்செயலருமான செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் பிரசாரம் செய்தார்.

பிரசார கூட்டத்தில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எம்.சி.சம்பத், வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர் சொரத்தூர் ராஜேந்திரன், எம்.பி.எஸ்.சிவசுப்ரமணியன், தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர் தமிழழகன், கடலூர் நகரச் செயலாளர் ஆர்.குமரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP