நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பிரசாரம் செய்யும் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் முதல்வர் ஜெயலலிதா சந்தித்து முடிவு

சனி, 22 பிப்ரவரி, 2014

அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெள்ளிக்கிழமை  (21.02.2014) மாலை சந்தித்தார்.
 
 எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவை கூட்டணியில் இருந்து பணியாற்றுவது, அதிமுகவை ஆதரித்து தேர்தல் பரப்புரை பிரச்சாரத்தில் ஈடுபடுவது என்றும்,  தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் அதிமுக மாபெரும் வெற்றிபெற பங்காற்றுவோம் என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிடம் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின்  போது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொதுச்செயலாளர் வை.காவேரி, இணைப் பொதுச்செயலாளர் எம்.எஸ்.சண்முகம், அமைப்புச் செயலாளர் காமராஜ்,  தொழிற்சங்கத் தலைவர் கே.வி.சிவராமன் ஆகியோர் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP