பண்ருட்டியில் பா.ம.க.சார்பில் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த தேசிங்கு நினைவிடத்தில் தி.வேல்முருகன் அஞ்சலி

திங்கள், 19 செப்டம்பர், 2011


பண்ருட்டி:

            இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தேசிங்கு நினைவிடத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் சனிக்கிழமை மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

           பாமக சார்பில் இட ஒதுக்கீடு வேண்டி 1987 செப்டம்பர் மாதம் தொடர் சாலை மறியல் நடைபெற்றது. செப்டம்பர் 17-ம் தேதி நடைபெற்ற சாலை மறியலின் போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலர் உயிர் இழந்தனர். 

              கொள்ளுக்காரன்குட்டையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சிறுதொண்டமாதேவியை சேர்ந்த தேசிங்கு உயிரிழந்தார். இவரின் நினைவிடத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மாநிலத் தலைவர் கோ.க.மணி, முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன், மாநில துணை பொதுச் செயலர் தி.திருமால்வளவன், வன்னிய சங்கத் தலைவர் குரு, சொத்து பாதுகாப்பு குழு தலைவர் டாக்டர் கோவிந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

பதிவுகள்

Blog Archive

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP